மேலும் அறிய

மழையால் சேதமடைந்த குறுவை நெற் பயிர்கள் - இழப்பீடு வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

குறுவை பயிர்களுக்கான காப்பீடு அமல்படுத்தாத நிலையில் உரிய கணக்கெடுப்பு நடத்தி நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு 42,000 பருத்தி பாதிப்புக்கு உரிய அளவு நிவாரணம் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மழையால் சேதமடைந்த குறுவை நெற்பயிர்ளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டு இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பருவம் தப்பி பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தற்பொழுது அறுவடை நேரத்தில் மழை பெய்து சாகுபடி பணிகளை முழுவதுமாக பாதித்துள்ளதால் செய்த செலவு தொகையை கூட எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


மழையால் சேதமடைந்த குறுவை நெற் பயிர்கள் - இழப்பீடு வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

இந்த நிலையில் மழையால் சேதம் அடைந்த குறுவை நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அதன் மாநில செயலாளர் மாசிலாமணி கூறியதாவது, நடப்பாண்டில் வரலாற்றில் இல்லாத வகையில் முன்கூட்டியே மே மாதம் 24 ஆம் தேதி தமிழக முதல்வர் டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறந்து வைத்தார். இதனையடுத்து விவசாயிகள் மும்முரமாக சாகுபடி பணியில் ஈடுபட்ட நிலையில் கூடுதல் பரப்பளவிலும் சாகுபடி நடைபெற்று உள்ளது. அதன்படி நடைபெற்ற சாகுபடி தற்போது நெல் பயிர்கள் கதிர் வந்த நிலையிலும் அறுவடைக்கு தயாரான நிலையிலும் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இந்த குறுவைப் பயிர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. அதன்படி பல்வேறு இடங்களில் பயிர்கள் சாய்ந்தும் அழுகியும் முளைத்தும் இருந்து வருகின்றன. மேலும் குறுவை பயிர்களுக்கான காப்பீடு அமல்படுத்தாத நிலையில் தற்போது இதுபோன்று ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உரிய கணக்கெடுப்பு நடத்தி நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 42,000 பருத்தி பாதிப்புக்கு உரிய அளவு நிவாரணம் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.


மழையால் சேதமடைந்த குறுவை நெற் பயிர்கள் - இழப்பீடு வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மேலும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் மேலும் வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பை மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்து விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பயிர் காப்பீடு இல்லாத நிலையில் விவசாயிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரணம் மட்டுமே அடுத்த கட்ட சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆகவே தமிழக முதல்வர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 42 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget