மேலும் அறிய

வேண்டாங்க... முறை வைத்து தண்ணீர் விட்டால் அவ்வளவுதான்? - விவசாயிகள் அச்சப்படுவது எதற்காக?

காவிரி டெல்டா பகுதிகளில் முறை வைத்து தண்ணீர் விடும் திட்டத்தால் சம்பா சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

தஞ்சாவூர்: காவிரி டெல்டா பகுதிகளில் முறை வைத்து தண்ணீர் விடும் திட்டத்தால் சம்பா சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பிரித்து வழங்கப்பட்ட தண்ணீர்

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக இந்த ஆண்டு வழக்கமான ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை.  ஜூலை 31ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் நீர் பகிர்ந்து அளிக்கப்பட்டது. 

முறைப்பாசனம் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு

தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்த நிலையில் கல்லணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 1704 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு நீர் பங்கீட்டில் தேவைக்கேற்ப மாறுபாடுகள் செய்யும் வகையில் முறைப்பாசனம் அமல்படுத்தப்படும் என  நீர்வளத்துறை அறிவித்தது.

இந்த அறிவிப்பு டெல்டா விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முறை பாசனம் அமல்படுத்த கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:


வேண்டாங்க... முறை வைத்து தண்ணீர் விட்டால் அவ்வளவுதான்? - விவசாயிகள் அச்சப்படுவது எதற்காக?

சம்பா சாகுபடி பாதிக்கும் என விவசாயிகள் எதிர்ப்பு

கல்லணை கால்வாய் மூலம் பாசனம் பெரும் பரப்பளவு அதிகம். தற்போது மேட்டூர் அணையில் இரந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளில் முறைப்பாசனம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கல்லணை கால்வாயில் ஏற்கனவே முழு கொள்ளளவு நீர் திறக்காமல் குறைந்த அளவே நீர் திறக்கப்பட்டதால் இன்னும் கடைமடை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர் வரவில்லை. பாசனத்துக்கும் வாய்க்கால்களில் முழுமையாக தண்ணீர் வரவில்லை. இந்நிலையில் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டதால் சம்பா சாகுபடியில் பெரும் பின்னடைவும், மகசூல் இழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கல்லணை கால்வாய் ஆற்றில் தொடர்ந்து முழு கொள்ளளவு நீர் திறந்து விட வேண்டும் என்றனர்.

வெண்ணாற்று பாசன விவசாயிகளும் எதிர்ப்பு

இதேபோல் முறை வைத்து தண்ணீர் திறப்பதற்கு வெண்ணாற்று பாசன விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேட்டூரில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட போது கூட திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நாகை மாவட்டம் தலைஞாயிறு உள்ளிட்ட கடைமடை வரை உள்ள ஆறுகளுக்கு சென்று அடைந்ததைத் தவிர பெரும்பாலான கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்கு தண்ணீரை கொண்டு சேர்க்கக்கூடிய வாய்க்கால்களில் தண்ணீர் முழுமையாக பாயவில்லை.

இந்த சூழலில் முறை வைத்து தண்ணீர் திறக்கப்படும் என்ற உத்தரவு கடைமடை விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே 6 நாட்கள் முறை வைத்து தண்ணீர் திறக்கும் நாட்களிலாவது கடைமடை வரை உள்ள கிளை வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். முறைபாசன திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். முறை வைத்து தண்ணீர் விட்டால் சம்பா சாகுபடியில் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் விவசாயிகள் கவலையாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget