மேலும் அறிய

செலவு செஞ்சது கூட மிஞ்சாது... சம்பா பயிர்கள் சாய்ந்தன: வேதனையில் விவசாயிகள்

சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ஆலக்குடி பகுதி சம்பா பயிர்களில் புகையான் தாக்குதல் அதிகம் இருந்தது. மேலும் 8.நம்பர் கரம்பை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் புகையான், நெல் பழம் நோய் தாக்குதல் காணப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா சாகுபடி பயிர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வயலில் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் மகசூல் பாதிக்கப்படும் என்பதால் மிகுந்த கவலையில் உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி அறுவடை முடிந்து தற்போது சம்பா மற்றும் தாளடி சாகுபடி 3.25 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, 8நம்பர் கரம்பை, ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை, கள்ளப்பெரம்பூர், சீராளூர் உட்பட பகுதிகளில் ஆந்திரா பொன்னி, சி.ஆர்.1009, கோ-51, கோ-50 ரகங்களை சாகுபடி செய்திருந்தனர். இதில் கோ 50, 51, ஆந்திரா பொன்னி ரகங்கள் 135 நாட்கள் பயிராகும். சி.ஆர்.1009 – 160 நாட்கள் பயிர். தற்போது கோ 50, 51, ஆந்திரா பொன்னி ஆகியவை இன்னும் 2 வாரங்கள் சென்றால் அறுவடை செய்து விடலாம் என்ற நிலையில் பயிர்கள் வளர்ந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த மாதத்தில் தஞ்சை மாவட்டத்தில் 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்தது. ஆரம்பத்தில் இந்த மழை சம்பா பயிர்களுக்கு உதவியாக இருந்தது. ஆனால் தொடர்ந்து பெய்த கனமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் பயிர்கள் செழித்து வளர உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளை தெளித்தனர். இருப்பினும் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ஆலக்குடி பகுதி சம்பா பயிர்களில் புகையான் தாக்குதல் அதிகம் இருந்தது. மேலும் 8.நம்பர் கரம்பை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் புகையான் மற்றும் நெல் பழம் நோய் தாக்குதல் காணப்பட்டது. காலை மற்றும் இரவு வேளையில் அதிகளவு பனிபெய்ததால் பயிர்கள் பாதிப்பை சந்தித்து வந்தது. 


செலவு செஞ்சது கூட மிஞ்சாது... சம்பா பயிர்கள் சாய்ந்தன: வேதனையில் விவசாயிகள்

இதற்கிடையில் கடந்த 2 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மேலும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சீராளூர், 8நம்பர் கரம்பை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் மகசூல் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயி தமிழரசன், முகேஷ், கதிர்வேல் ஆகியோர் கூறுகையில், தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்த நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் நெல் பழம் நோய் தாக்குதல் தென்பட்டது. இருப்பினும் இன்னும் இரண்டு வாரத்தில் அறுவடை செய்து விடலாம். அதிக பாதிப்பு இருக்காது என்று நினைத்து இருந்தோம். ஆனால் தற்போது 2 நாட்களாக பெய்த மழையில் பாதிக்கு பாதி நெல்பயிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கிறது. இப்போது அறுவடையும் செய்ய முடியாது. வயல் ஈரப்பதமாக இருப்பதால் இயந்திரங்களை வைத்து அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. இதுவரை ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.
 
தற்போது ஒரு ஏக்கர் வயலில் ஏறத்தாழ பாதிக்கு பாதி அளவில் நெற் பயிர்கள் சாய்ந்து கிடக்கிறது. மழை தொடர்ந்தால் சாய்ந்துள்ள நெற்பயிர்கள் முளைக்க தொடங்கி விடும். இதனால் அறுவடை செய்தாலும் செலவு செய்த தொகை கூட கிடைக்காது. எனவே அதிகாரிகள் இப்பகுதிகளை மீண்டும் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

இது!குறித்து வேளாண் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை 22 ஆயிரம் ஏக்கரில் அறுவடை முடிந்துள்ளது. மழையின் காரணமாக திருப்பனந்தாளில் 100 ஏக்கர், கும்பகோணத்தில் 100 ஏக்கர், பாபநாசத்தில் 50 ஏக்கர் என்று மொத்தம் 250 ஏக்கரில் நெல் பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது என்று தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
Embed widget