மேலும் அறிய

பெய்யாமலும் கெடுத்தது... இப்போ பெய்தும் கெடுத்துவிட்டதே: தேங்கிய நீரில் சாய்ந்த பயிர்களால் விவசாயிகள் கண்ணீர்

மழை பெய்து ஒரு வாரம் ஆகியும் மழைநீர் வடியாதால் பயிர்கள் அழுகத் தொடங்கிவிட்டது. அறுவடை செய்தாலும் பாதிக்கு பாதி நெல்மணிகள் இயந்திரத்தில் அடிபட்டு சேதம் அடைகிறது

தஞ்சாவூர்: பெய்யாமலும் கெடுத்தது, இப்போ பெய்தும் கெடுத்து விட்டது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை நெல் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் வேதனை குரல் எழுப்பி வருகின்றனர்.

நீண்ட நெடிய பயணம் செய்யும் காவிரி

கர்நாடக மாநிலம் குடகு மலையில் தலைக்காவிரியாக பிறந்து தமிழகத்தின் பூம்புகாரில் வங்கக்கடலில் கலக்கிறது காவிரி. சுமார் 800 கி.மீ பறந்து விரிந்து தான் பாய்ந்து செல்லும் பகுதிகளை பச்சைபசேல் என்று வளம் கொழிக்க செய்தது காவிரி. தமிழகத்தின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு காவிரி முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் வழியே தன் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொள்கிறது காவிரி.

தஞ்சை மாவட்டத்தின் உயிர்நாடியான காவிரி

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தின் உயிர்நாடியே காவிரிதான். சங்க இலக்கியங்களே இதற்கு சான்று. இலக்கியமும், புராணமும் புகழ்ந்த காவிரி இன்று தனது இயல்பை இழந்து காணப்படுகிறது. இருகரைகள் நெடுகிலும் தண்ணீர் பாய்ந்த காவிரியில் தற்போது மணல்களை மட்டுமே காணமுடிகிறது. நடந்தாய் வாழி காவிரி இன்று வறண்டு கிடக்கிறது.

ஆயிரம் ஏக்கர் கோடை நெல் சாகுபடி பாதிப்பு

காவிரி நதி நீா் பாய்ந்து வளம் சோ்ப்பதாலும், விவசாயம் முதன்மைத் தொழிலாக இருப்பதால் தஞ்சாவூா் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா,தாளடி என முப்போகம் சாகுபடி நடக்கிறது. மேலும் கோடை நெல் சாகுபடியும் நடக்கிறது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் 31,700 ஏக்கர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அறுவடை நேரத்தில் கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு பெய்த மழையால் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மழைநீரில் கோடை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு விளைநிலத்தில் சாய்ந்துள்ளது. அதேபோல் தஞ்சை மாவட்டம் கோவிலூர் உட்பட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட கோடை நெல் ஒரு வாரத்திற்கும் மேலாக விளைநிலத்தில் மழை நீரில் சாய்ந்து கிடக்கிறது.

அழுகி முளைக்கும் பயிர்களால் விவசாயிகள் கண்ணீர்

இதனால் பயிர்கள் அழுகி முளைக்க தொடங்கி விட்டது. வயலில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும், நெற்பயிர்கள் ஈரமாக உள்ளதாலும் இதை அறுவடை செய்ய இயலாது என்று விவசாயிகள் கூறுகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கடந்த 50 நாட்களாக பெற்ற பிள்ளைகளை வளர்ப்பது போல் பார்த்து, பார்த்து கோடை நெல் சாகுபடியை மேற்கொண்டோம். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்தோம். பயிர்கள் நன்கு விளைந்து வந்ததால் மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் அறுவடை செய்து பலன் அடையும் நேரத்தில், பயிர்கள் அனைத்தும் மழை நீரில் பாதிக்கப்பட்டு தற்போது வரை மழைநீரிலே கிடக்கிறது. இதனால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழை பெய்து ஒரு வாரம் ஆகியும் மழைநீர் வடியாதால் பயிர்கள் அழுகத் தொடங்கிவிட்டது. அறுவடை செய்தாலும் பாதிக்கு பாதி நெல்மணிகள் இயந்திரத்தில் அடிபட்டு சேதம் அடைகிறது. இதனால் செய்த செலவிற்கே பணம் வருமா? வராதா என்ற நிலையில் மிகுந்த வேதனையில் உள்ளோம். கோடை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” அதிதேப் சர்க்கார் அதிரடி பேச்சு..!
Kash Patel: அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” அதிதேப் சர்க்கார் அதிரடி பேச்சு..!
Kash Patel: அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
China Threatens: ஏம்பா சீனா, யாரையாவது பயமுறுத்தலைன்னா தூக்கம் வராதா.? பதற்றத்தில் 2 நாடுகள்...
ஏம்பா சீனா, யாரையாவது பயமுறுத்தலைன்னா தூக்கம் வராதா.? பதற்றத்தில் 2 நாடுகள்...
Dragon Twitter Review : நெருப்பை கக்கியதா இல்ல வெறுப்பை கக்கியதா.. டிராகன் படத்தின் முதல் விமர்சனம்
Dragon Twitter Review : நெருப்பை கக்கியதா இல்ல வெறுப்பை கக்கியதா.. டிராகன் படத்தின் முதல் விமர்சனம்
CM Stalin: அண்ணாமலைக்கு பதிலடி? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பதிவு- ”யாருக்கும் சளைத்தது அல்ல”
CM Stalin: அண்ணாமலைக்கு பதிலடி? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பதிவு- ”யாருக்கும் சளைத்தது அல்ல”
Embed widget