மேலும் அறிய

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் தொடங்கிய நிலையில் முதன்முறையாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் விற்பனை செய்யப்பட்டது. 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் தொடங்கிய நிலையில் முதன்முறையாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் விற்பனை செய்யப்பட்டது. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் பிரதான பயிராக இருந்து வருகிறது. சம்பா, தாளடி, குறுவை என 3 போகங்களாக நெல் சாகுபடி நடைபெறும் நிலையில், மழைக்காலங்களில் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்டா பகுதியில் பருத்தி சாகுபடி மீதான ஆர்வம் விவசாயிகள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா திருக்கருகாவூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக பருத்தி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடையில் நெல், உளுந்து பயிருக்கு மாற்றாக பருத்தி சாகுபடி செய்ய கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பருத்தி சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் கோடையில் பருத்தியை சாகுபடி செய்து பயனடைந்து வருகின்றனர். நடப்பு ஆண்டு பருத்தி சாகுபடி கடந்த ஆண்டை விட பாபநாசம் தாலுகாவில் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது.

திருக்கருகாவூர், கரம்பத்தூர், நாகலூர், நிறைமதி, மேல செம்மங்குடி, தேவராயன் பேட்டை, வளத்தாமங்களம், புலிமங்களம், பொன்மான்மேய்ந்தநல்லூர், பண்டாரவாடை, ராஜகிரி மற்றும் கோபுராஜபுரம் உட்பட பல பகுதிகளில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்படும் பருத்தியை விற்பனை செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் தொடங்கிய நிலையில் முதன்முறையாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் விற்பனை செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பருத்தியை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் வருகை தந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசத்தில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கான பருத்தி மறைமுக ஏலம் விற்பனை தொடங்கியது. இந்த விற்பனையை தொடர்ந்து பாபநாசம் சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் தங்களது பருத்தியினை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

பருத்தியை கொள்முதல் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் விற்பனை கூட அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.  மேலும் அதிகாரிகள் கூறும்போது, தற்போது விவசாயிகள் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்திருப்பதாகவும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்வதற்காக வருகை வந்துள்ளனர்.

தேசிய மின்னணு விவசாய வேளாண் சந்தை திட்டத்தின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த பருத்திக்கு உண்டான பரிவர்த்தனை  ஆன்லைன் மூலம் ஒன்று அல்லது இரண்டு தினங்களில் நடத்தி முடிக்கப்படும்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் விற்பனை முதன் முதலாக தற்போது தான் துவங்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த பருத்தியை அதிக விலைக்கு விற்பனை செய்து கொடுப்பதுதான் எங்களின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

PM கிசான் தவணைத் தொகை கிடைக்கவில்லையா? உடனே இதைச் செய்யுங்கள் - நாகை ஆட்சியர் அறிவுறுத்தல்!
PM கிசான் தவணைத் தொகை கிடைக்கவில்லையா? உடனே இதைச் செய்யுங்கள் - நாகை ஆட்சியர் அறிவுறுத்தல்!
வனவிலங்கு பாதிப்பு: 4 விவசாயிகளுக்கு ரூ.94,500 நிவாரணம் வழங்கிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்!
வனவிலங்கு பாதிப்பு: 4 விவசாயிகளுக்கு ரூ.94,500 நிவாரணம் வழங்கிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்!
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யலைன்னா... அனைத்து விவசாயிகள் சங்கங்கள் விடுத்த எச்சரிக்கை
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யலைன்னா... அனைத்து விவசாயிகள் சங்கங்கள் விடுத்த எச்சரிக்கை
மதுரையில் நீர்வளத் துறையில் பாலம் அமைப்பதில் ஊழல் நடைபெறுவதாக கூறி.. முழங்கிய விவசாயிகள் !
மதுரையில் நீர்வளத் துறையில் பாலம் அமைப்பதில் ஊழல் நடைபெறுவதாக கூறி.. முழங்கிய விவசாயிகள் !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget