மேலும் அறிய

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் தொடங்கிய நிலையில் முதன்முறையாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் விற்பனை செய்யப்பட்டது. 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் தொடங்கிய நிலையில் முதன்முறையாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் விற்பனை செய்யப்பட்டது. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் பிரதான பயிராக இருந்து வருகிறது. சம்பா, தாளடி, குறுவை என 3 போகங்களாக நெல் சாகுபடி நடைபெறும் நிலையில், மழைக்காலங்களில் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்டா பகுதியில் பருத்தி சாகுபடி மீதான ஆர்வம் விவசாயிகள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா திருக்கருகாவூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக பருத்தி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடையில் நெல், உளுந்து பயிருக்கு மாற்றாக பருத்தி சாகுபடி செய்ய கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பருத்தி சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் கோடையில் பருத்தியை சாகுபடி செய்து பயனடைந்து வருகின்றனர். நடப்பு ஆண்டு பருத்தி சாகுபடி கடந்த ஆண்டை விட பாபநாசம் தாலுகாவில் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது.

திருக்கருகாவூர், கரம்பத்தூர், நாகலூர், நிறைமதி, மேல செம்மங்குடி, தேவராயன் பேட்டை, வளத்தாமங்களம், புலிமங்களம், பொன்மான்மேய்ந்தநல்லூர், பண்டாரவாடை, ராஜகிரி மற்றும் கோபுராஜபுரம் உட்பட பல பகுதிகளில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்படும் பருத்தியை விற்பனை செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் தொடங்கிய நிலையில் முதன்முறையாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் விற்பனை செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பருத்தியை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் வருகை தந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசத்தில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கான பருத்தி மறைமுக ஏலம் விற்பனை தொடங்கியது. இந்த விற்பனையை தொடர்ந்து பாபநாசம் சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் தங்களது பருத்தியினை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

பருத்தியை கொள்முதல் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் விற்பனை கூட அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.  மேலும் அதிகாரிகள் கூறும்போது, தற்போது விவசாயிகள் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்திருப்பதாகவும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்வதற்காக வருகை வந்துள்ளனர்.

தேசிய மின்னணு விவசாய வேளாண் சந்தை திட்டத்தின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த பருத்திக்கு உண்டான பரிவர்த்தனை  ஆன்லைன் மூலம் ஒன்று அல்லது இரண்டு தினங்களில் நடத்தி முடிக்கப்படும்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் விற்பனை முதன் முதலாக தற்போது தான் துவங்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த பருத்தியை அதிக விலைக்கு விற்பனை செய்து கொடுப்பதுதான் எங்களின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
Farmers Subsidy : ரூ.25 லட்சம் மானியம்.! உழவர் உற்பத்தியாளர்களுக்கு ஜாக்பாட்- அமைச்சர் வினோத் முக்கிய அறிவிப்பு
ரூ.25 லட்சம் மானியம்.! உழவர் உற்பத்தியாளர்களுக்கு ஜாக்பாட்- அமைச்சர் வினோத் முக்கிய அறிவிப்பு
எச்சரிக்கை..!
எச்சரிக்கை..! "விதிமீறலில் ஈடுபட்டால் உரிமம் ரத்து" உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!
குறுவை சாகுபடி தீவிரம்: முளைப்புத்திறன் இல்லாத விதைகள் விற்றால் உரிமம் ரத்து! விதை ஆய்வுத்துறை கிடுக்கிப்பிடி
குறுவை சாகுபடி தீவிரம்: முளைப்புத்திறன் இல்லாத விதைகள் விற்றால் உரிமம் ரத்து! விதை ஆய்வுத்துறை கிடுக்கிப்பிடி

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget