மேலும் அறிய

வீட்டுக்குள்ளேயே விவசாயம்... மாடித் தோட்டத்தில் நம்ம வீட்டுக்கு காய்கறிகள்..!

பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக அரசு கண்டுபிடித்த தொழில்நுட்பம் தான் 'மாடித்தோட்டம்'. மாடித்தோட்டம் 'கிட்' ஒன்றுக்கு அரசு மானியம் வழங்குகிறது.

தமிழகத்தில் குடும்பத்திற்கு தேவையான அன்றாட காய்கறி தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ளவும், குடும்ப பட்ஜெட்டில் கையை கடிக்காமலும், பிறரிடம் கடன் வாங்கமல், பொன்னான நேரத்தை வீணடிக்காமல் குடும்ப தலைவிகளின் ஆர்வத்தை உயர்த்தி பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக அரசு கண்டுபிடித்த தொழில்நுட்பம் தான் 'மாடித்தோட்டம்'. மாடித்தோட்டம் 'கிட்' ஒன்றுக்கு அரசு மானியம் வழங்குகிறது.

கிட் ஒன்றில் தென்னை நார் கழிவுடன் கூடிய வளர் ஊடகம் அடங்கிய ஆறு பைகள், அசோஸ்பைரில்லம் 200 கிராம், பாஸ்போ பாக்டீரியா 200 கிராம், சூடோமோனாஸ் 100 கிராம், டி.விரிடி 100 கிராம், நீரில் கரையும் உரம் 18:18:18 ஒரு கிலோ, அசார்டிராக்ஷன் 100 மில்லி, திட்ட விளக்க குறிப்பு, பத்து வகையான காய்கறி விதைகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இவை மாடித் தோட்டம் போட நினைப்பவர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு ஆகும்.

இந்த மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி முறையை பற்றி தெரிந்து கொள்வோம். நம்ம மாடி தோட்டத்தில் மிகவும் எளிமையாக வெண்டைக்காய் சாகுபடி முறை, பராமரிப்பு முறை மற்றும் பாதுகாக்கும் முறை ஆகியவற்றைதான் பார்க்க உள்ளோம்.


வீட்டுக்குள்ளேயே விவசாயம்... மாடித் தோட்டத்தில் நம்ம வீட்டுக்கு காய்கறிகள்..!

மாடித்தோட்டம் வெண்டை சாகுபடியை பொறுத்தவரை, சிறிய பை அல்லது தொட்டிகள் போதுமானது. தேங்காய் நார் கழிவுகள் இரண்டு பங்கு, சமையலறை கழிவுகள் ஒரு பங்கு, மாட்டுச்சாணம் ஒரு பங்கு ஆகியவற்றை கொண்டு தொட்டிகளை நிரப்ப வேண்டும். இந்த கலவையை தயார் செய்தவுடனே விதைகளை விதைத்துவிட கூடாது. ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்கு பின்பு தான் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் செடிகளை வளர்ப்பதற்காக, பை அல்லது தொட்டிகளில் மணல் கலவை நிரப்பும் போது, பை முழுவதும் மணல் கலவையை நிரப்பிவிட்டு கூடாது.

பையின் நீளத்திற்கு ஒரு அங்குலத்திற்கு கீழ் இருக்குமாறு மணல் கலவையை நிரப்ப வேண்டும். மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடியை பொறுத்தவரை நோய் தாக்காத ஆரோக்கியமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும். பின்பு பைகளில் விதைகளை விதைத்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும். ஒரு குழியில் இரண்டு விதைகள் ஊன்றலாம். நடவு செய்த ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத் துவங்கும். பத்து நாட்களில் நன்றாக முளைத்துவிடும். அந்தச் சமயத்தில் ஒவ்வொரு குழியிலும் நன்றாக வளர்ந்துள்ள ஒன்று அல்லது இரண்டு செடியை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு செடியைப் பிடுங்கி எடுத்துவிட வேண்டும். ஒரு பையில் ஒரு செடியை மட்டும் வைப்பது சிறந்தது. பெரிய பையாக இருந்தால் இரண்டு செடிகள் இருக்கலாம். அதற்கு மேல் அதிக எண்ணிக்கையில் ஒரே பையில் செடிகள் இருக்கக் கூடாது.

நீர் நிர்வாகம்:

மாடித்தோட்டம் வெண்டைக்காய் சாகுபடியை பொறுத்தவரை விதை விதைத்த பின்பு, பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்பு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளிக்க வேண்டும்.


வீட்டுக்குள்ளேயே விவசாயம்... மாடித் தோட்டத்தில் நம்ம வீட்டுக்கு காய்கறிகள்..!

வெண்டைக்காய் செடியைச் சுற்றி அடி மண்ணை வாரம் ஒருமுறை கொத்தி விட வேண்டும். மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது. செடியும் நன்கு காய் பிடித்து வளராது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வெண்டையில் முற்றிய பெரு இலைகளையும், பழுத்த இலைகளையும் அடிக்கடி நீக்க வேண்டும். இதனால் நோய் தாக்கும் அபாயம் குறையும்.

பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து, மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும். நடவு செய்த 30 முதல் 35-ம் நாள்களுக்குள் பூவெடுக்கத் தொடங்கும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாள் முதல் 15 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பஞ்சகவ்யாவைக் கொடுத்து வந்தால், இலைகள் அதிகமாக உருவாகும். அதிகப் பூக்கள் பூக்கும். பூவெடுத்ததிலிருந்து ஏழு நாள்களில் காய் உருவாகத் தொடங்கும். பின்னர்  ஒன்றரை நாள் இடைவெளியில் அறுவடைக்கு வரும். ஒருநாள் விட்டு ஒருநாள் காய் பறிக்கலாம். காய்கள் பிடிக்க ஆரம்பித்த உடன் சரியான பருவத்தில் காய்களை முற்றவிடாமல், பறித்துவிட வேண்டும்.

வெண்டைக்காயைத் தாக்கும் பூச்சிகளில் சாறு உறிஞ்சும் பூச்சி, அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, செந்நாவாய் பூச்சி ஆகியவை முக்கியமானவை. அசுவினித் தாக்குதலுக்கு உள்ளான இலையின் அடிப்பாகம் சுருங்கியதுபோல இருக்கும். விளிம்பு மடங்கத் தொடங்கும். தத்துப்பூச்சித் தாக்குதல் இருந்தால் இலை மஞ்சள் நிறமாக மாறி, பிறகு பழுப்பு (பிரவுன்) நிறத்துக்கு மாறும். இலை, தீயில் வாட்டியதுபோலக் காணப்படும். இந்த இரண்டு பூச்சிகளையும் தடுக்க 5 சதவிகித வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிக்கலாம். நடவு செய்த 20-ம் நாள் முதல் ஒவ்வொரு 25 நாள் இடைவெளியில் சாகுபடிக்காலம் முடியும் வரை வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளித்து வர வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மாற்றுப்பயிரில் முத்திரை பதிக்கும் விவசாயிகள்... கோடை சாகுபடியில் ஆர்வம்
மாற்றுப்பயிரில் முத்திரை பதிக்கும் விவசாயிகள்... கோடை சாகுபடியில் ஆர்வம்
விவசாயிகளுக்கு சூப்பர் ஐடியா… அசோலா வளருங்கள்: செலவு குறைவு… லாபம் அதிகம்
விவசாயிகளுக்கு சூப்பர் ஐடியா… அசோலா வளருங்கள்: செலவு குறைவு… லாபம் அதிகம்
3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பணம் நிறுத்தம்! சரிசெய்ய ஜூன் 15 வரை சிறப்பு வாய்ப்பு!
3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பணம் நிறுத்தம்! சரிசெய்ய ஜூன் 15 வரை சிறப்பு வாய்ப்பு!
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் (20.05.26) இன்றைய மல்லிகைப் பூ நிலவரம் இது தான் !
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் (20.05.26) இன்றைய மல்லிகைப் பூ நிலவரம் இது தான் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Officers Transfer: வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
Trump Vs Iran: “ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
“ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
US Iran War: செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
Honda Activa e Vs TVS iQube: ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? டிவிஎஸ் ஐக்யூப்-ஆ.? விலை, மைலேஜ், அம்சங்களில் எது சிறந்தது.? தெரிஞ்சுக்கோங்க
ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? டிவிஎஸ் ஐக்யூப்-ஆ.? விலை, மைலேஜ், அம்சங்களில் எது சிறந்தது.?
Tata-Jeep Partnership: 'வெளிநாட்டு ஸ்டைல், உள்நாட்டு உணர்வு'; டாடா உடன் கைகோர்த்த ஜீப்; நம்ம ஊரில் தயாராகும் புதிய SUV
'வெளிநாட்டு ஸ்டைல், உள்நாட்டு உணர்வு'; டாடா உடன் கைகோர்த்த ஜீப்; நம்ம ஊரில் தயாராகும் புதிய SUV
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
Embed widget