மேலும் அறிய

Dharmapuri : ஆடி பட்டத்தில் என்ன விதைத்தால் லாபம் கிடைக்கும் ? வேளாண்மை துறை சொல்லும் ரகசியம்..!

"தருமபுரி மாவட்டத்தில் மழை தவறினாலும், பருவம் போகாமல், புதிய தொழில் நுட்பத்தில் துவரை சாகுபடி செய்வது ஆடிப்பட்டத்திற்கு சிறந்தது"

தருமபுரி மாவட்டத்தில் பருவ மழை தவறிய நிலையில், இப்போது என்ன சாகுபடி செய்யலாம் என்று விவசாயிகள் யோசனையில் ஆழந்துவந்தனர்.  இது குறித்து வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


Dharmapuri : ஆடி பட்டத்தில் என்ன விதைத்தால் லாபம் கிடைக்கும் ? வேளாண்மை துறை சொல்லும் ரகசியம்..!

துவரை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை

பருவ மழை தவறி பெய்தாலும் போதிய நீர் இருப்பு இல்லாத சூழலிலும் துவரை சாகுபடி செய்தால் விவசாயிகள் நல்ல லாபம் பார்க்கலாம் என்று தருமபுரி வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் தருமபுரி வேளாண்மை துறை சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் துவரை நாற்று நடவு முறையில் சாகுபடி செய்ய 3,980 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பருவமழை தவறினாலும் பருவம் போகாமல் புதிய தொழில்நுட்பமான நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி செய்ய முடியும் என்றும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிப்பு இல்லாமல் பயிரிட புதிய தொழில்நுட்பம்

பருவம் தவறினாலும் பாதிப்பின்றி துவரை சாகுபடி செய்ய புதிய தொழில்நுட்பமான துவரை நாற்று நடவு சாகுபடி முறையை பின்பற்றி துவரையில் அதிகமாக மகசூல் பெறலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனார்.  இதற்கு தர்மபுரி மாவட்ட விவசாயிகள் முன் வர வேண்டும் எனவும் இதற்காக அரசு மானியம் வழங்குகிறது எனவும் விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அழைப்பு விடுத்துள்ளது.

எப்போது துவரை சாகுபடி செய்யலாம் ?

துவரை சாகுபடி செய்ய ஆடி பட்டம் சிறந்த பருவமாக இருக்கும். இந்த  துவரை நாற்று  நடவு முறை சாகுபடிக்கு, ஏக்கருக்கு ஒரு கிலோ விதை மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டைகோடெர்மாவிரிடி கொண்டு விதையை நேர்த்தி செய்து, 24 மணி நேரத்திற்கு பிறகு, ஒரு பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிர் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

இதில் 6-க்கு 4 அங்குல அளவில், 200 மைக்கிரான் பாலித்தீன் பையில் மண், மணல், தொழு உரம் ஆகியவை 1:1:1 என்ற அளவில் நிரப்பவும். மேலும் நடுவதற்கு சில நாட்கள் முன், இளம் வெயிலில் நாற்றுகளை வைத்து கடினப்படுத்தி, பின்பு நடவு செய்வது நல்லது. இந்த விதைகளை ஒரு சென்டிமீட்டர் ஆழத்தில், நடவிற்க்கு 30 முதல் 45 நாட்கள் முன்பாகவே விதைக்கப்பட வேண்டும். ஐந்து அடிக்கு 3 அடி அளவில், ஊடுபயிர் ஆறு அடிக்கு 3 அடி என்ற அளவில் நட வேண்டும். நடவு செய்த 20 முதல் 30 நாளில் என்பிகேயை 25:50:25 ஒரு கிலோ, ஒரு ஹெக்டர் என்ற விகிதத்தில் இடவேண்டும். நடவு செய்த 20 முதல் 30 நாளில் முனை வளர்ச்சியை தடுக்க நுனியை கிள்ளிவிட வேண்டும். இதனால் அதிக பக்க கிளைகள் உருவாகி அதிக விளைச்சல் கிடைக்கிறது.

உரம் விடுவது எப்படி ?

இலைவழி ஊட்டம் டிஏபி, 2 சதவீதத்தை பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பமான துவரை நாற்று நடவு தொழில்நுட்பத்தை கடைபிடித்து அதிகமாக மகசூல் பெற முடியும். மேலும் இந்த முறையில் நாற்று நடவுக்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஹெக்டருக்கு 9000 மானியம் வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் மானிய விலையில், விதை, உயிர் உரம், நுண்ணூட்ட கலவை, பயிர் பாதுகாப்பு மருந்து மற்றும் 2% டிஏபி கரைசல் வழங்கப்படுகிறது. எனவே இந்த மாதிரியான துவரை நடவு நாற்று நடவு முறையை பின்பற்றி அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இந்த மானியங்களை பெற விவசாயிகள் முன் வர வேண்டும் என தருமபுரி மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget