மேலும் அறிய

'கடிதம் எழுதுவதைத் தவிர்த்து அரசு வேறு ஏதாவது செய்ய வேண்டும்..' மேகதாட்டு விவகாரம்; விவசாயிகள் கோரிக்கை

மேகதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை தவிர்த்து சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம் என நாகையில் நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) கர்நாடக அரசு மத்திய நீர் பாசன துறையிடம் தாக்கல் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகப்பட்டினத்தில் தமிழக விவசாயிகள் கூட்டியக்கங்கள் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று, மேகதாட்டு அணை திட்டத்தை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளின் நிலைப்பாட்டை கண்டித்தும் ஆவேசமான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கடிதம் மட்டும் போதாது: 'சிறப்பு தீர்மானம்' தேவை!

விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கம், தமிழக அரசு மேகதாட்டு அணை விவகாரத்தில் கடிதங்கள் எழுதுவதைத் தவிர்த்து, உடனடியாகத் தமிழக சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதேயாகும்.

தமிழக விவசாயிகள் கூட்டியக்கங்களின் தலைவர் காவிரி தனபாலன் பேசுகையில், "மேகதாட்டு அணை கட்டப்பட்டால், காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு வருவது முற்றிலும் நின்றுபோகும். இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டு, ஒட்டுமொத்த தமிழகமும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. 

இது தமிழ்நாட்டின் வாழ்வுரிமையைப் பறிக்கும் செயல். தமிழக அரசு ஒவ்வொரு முறையும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது என்பது வெறும் சடங்காகிவிட்டது. கடிதங்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், நமது எதிர்ப்பின் தீவிரத்தை உணர்த்தவும், சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் உடனடியாக ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், "அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை (DPR) தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது டெல்டா விவசாயிகளுக்குப் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு, உடனடியாக கர்நாடகாவின் இந்த திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும்.

இதுகுறித்து தமிழக அரசு சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தச் சிறப்புத் தீர்மானமே தமிழகத்தின் வலுவான நிலைப்பாட்டை தேசிய அளவில் வெளிப்படுத்தும்," எனத் தெரிவித்தார்.

விவசாயிகளின் அச்சம்

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்கு கர்நாடகா மேகதாட்டுவில் அணை கட்டுவது முற்றிலும் முரணானது. அணை கட்டுவது என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தை மீறும் செயலாகும் என்றும் விவசாயிகள் சுட்டிக் காட்டினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், "காவிரி நீர் பிரச்னையில் தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. மேகதாட்டு அணை கட்டி முடிக்கப்பட்டால், டெல்டா பகுதிகளில் தற்போதுள்ள குடிநீர்த் தேவைகள்கூட பூர்த்தியாகாது. விவசாயம் அடியோடு அழிந்து, விவசாயிகள் வாழ்வாதாரம் இழக்கும் நிலை ஏற்படும். தமிழக அரசு இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது. முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்களுடன் இணைந்து மேகதாட்டு அணைத் திட்டத்தை எதிர்த்து மத்திய அரசுக்கு கூட்டாக அழுத்தம் கொடுக்க வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டத்தால் நாகப்பட்டினம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம், மேகதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு கடிதம் எழுதும் பழைய அணுகுமுறையைக் கைவிட்டு, சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் மூலம் ஒரு சட்ட ரீதியான மற்றும் அரசியல் ரீதியான அழுத்தத்தை உருவாக்க வேண்டும் என்ற விவசாயிகளின் ஒருமித்த குரலை எதிரொலிப்பதாக உள்ளது. அணை விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!
உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!
மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளிக்கு டாப்புக்கு போகுமா !
மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளக்கு டாப்புக்கு போகுமா !
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
முட்செடிகள் விழுங்கிய வாய்க்கால்கள்... கண்ணீரில் தவிக்கும் பூதலூர் விவசாயிகள்
முட்செடிகள் விழுங்கிய வாய்க்கால்கள்... கண்ணீரில் தவிக்கும் பூதலூர் விவசாயிகள்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
Embed widget