மேலும் அறிய

மயிலாடுதுறை விவசாயிகளே அலர்ட்! 1 லட்சம் கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி – எப்போது, எங்கே நடக்கிறது?

மயிலாடுதுறை மாவட்டத்தில் 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், மூவலூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் (NADCP) 9-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி முகாம் இன்று (01.07.2026) தொடங்கியது. இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், நேரில் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி முறைப்படி தொடங்கி வைத்தார். மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களிலும் உள்ள கால்நடைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த மாபெரும் தடுப்பூசி இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் மாபெரும் முகாம்

மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ், இந்த 9-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி (FMD) முகாம்கள் இன்று முதல் தொடங்கி, வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி (10.08.2026) வரை மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.

இன்றைய தொடக்க முகாமில் மட்டும், மூவலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்குக் கோமாரி நோய் தடுப்பூசிகள் வெற்றிகரமாகப் போடப்பட்டன. மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள விவசாயியும் பயன்பெறும் வகையில், அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் இதற்கான சிறப்பு முகாம்கள் சுழற்சி முறையில் நடத்தப்பட உள்ளன.

6 மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி கட்டாயம்

முகாமினைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இந்த நோயின் வீரியம் மற்றும் தடுப்பூசியின் அவசியம் குறித்துப் விளக்கினார்.

"கால் மற்றும் வாய்நோய் (கோமாரி நோய்) என்பது பசுக்கள், எருமைகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் பன்றிகளைத் தாக்கும் ஒரு மிகக்கொடிய வைரஸ் நோயாகும். இந்நோய் பாதித்த கால்நடைகளுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்படுவதுடன், அவற்றின் குளம்புகள் மற்றும் வாய் பகுதிகளில் கடுமையான புண்கள் தோன்றும். இதனால் கால்நடைகள் தீவனம் உட்கொள்ள முடியாமல் தவித்து, பால் உற்பத்தி பெருமளவில் குறைந்துவிடும். சில நேரங்களில் மாடு மற்றும் எருமைகளில் திடீர் இறப்புகளும் நேரிடலாம்."

மேலும், "இந்நோய் காற்றின் மூலம் மிக வேகமாகப் பரவக்கூடிய தன்மை கொண்டது என்பதால், இதிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க 6 மாதங்களுக்கு ஒருமுறை தப்பாமல் தடுப்பூசி போட்டுக் கொள்வதே ஒரே சிறந்த வழிமுறை" என்றும் அவர் அறிவுறுத்தினார்.

ஒரு லட்சம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு

விவசாயிகளின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இந்தச் சுற்றின் கீழ் சுமார் 1 இலட்சம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டு, அதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கெனத் தேவையான தரமான மருந்துப் பொருட்கள் அனைத்தும் போதுமான அளவில் தடையின்றிக் கிடைக்கப் பெறும்படி கால்நடை மருந்துவமனைகளிலும், கிடங்குகளிலும் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து கிராமப்புறப் பகுதிகளுக்கும் கால்நடை மருத்துவக் குழுவினர் நேரடியாகச் சென்று, விடுபடாமல் அனைத்துக் கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கால்நடை வளர்ப்போருக்கான முக்கிய வழிமுறைகள்

கால்நடை வளர்ப்போர் இந்த முகாமிற்குத் தங்கள் கால்நடைகளை அழைத்து வரும்போது சில முக்கிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆவணங்கள்: முகாமிற்கு வரும்போது தங்களின் அடையாள அட்டை மற்றும் அலைபேசியைக் (Mobile Phone) கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும்.

பதிவு முறை மற்றும் OTP: தடுப்பூசிப் பணிகளை உடனுக்குடன் ஆன்லைனில் (Online Portal) பதிவு செய்ய ஏதுவாக, கால்நடை வளர்ப்போரின் அலைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்திட வேண்டும்.

காது வில்லைகள் (Ear Tagging): தடுப்பூசி போடப்படும் அனைத்துக் கால்நடைகளுக்கும் அடையாளக் காது வில்லைகள் பொருத்தப்படும்.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கால்நடை வளர்ப்போரும் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு இந்த முகாமிலேயே தடுப்பூசி போட்டு, நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாது உப்புக்கலவை விநியோகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

தொடக்க விழாவைத் தொடர்ந்து, முகாமில் கலந்து கொண்டு தங்கள் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்திய விவசாயிகளுக்கு, கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் தாது உப்புக்கலவைகளை (Mineral Mixture) மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இலவசமாக வழங்கினார்.

இந்த முக்கிய நிகழ்வின் போது, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சுகுமார், உதவி இயக்குநர் அன்பரசன், உள்ளூர் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள், ஊராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் அரசுப் துறை அலுவலர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம்... மண்ணையும், உணவையும், உடல்நலத்தையும் காக்கும் இயற்கை விவசாயம்!
தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம்... மண்ணையும், உணவையும், உடல்நலத்தையும் காக்கும் இயற்கை விவசாயம்!
சிவகங்கையில்
சிவகங்கையில் "செம்மண்" விதை திருவிழா: பாரம்பரிய வேளாண்மைக்கு புத்துயிர்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget