மேலும் அறிய

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பயிர் காப்பீடு செய்து இழப்பைத் தவிர்ப்பது எப்படி?

காரீப் பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல், கம்பு பயிர்களுக்கு காப்பீடு செய்திட வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.

விழுப்புரம்: விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2025-26ஆம் ஆண்டிற்கான காரீப் பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2025-26ஆம் ஆண்டிற்கான காரீப் பருவத்திற்கு பயிர் காப்பீடு

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2025-26ஆம் ஆண்டிற்கான காரீப் பருவத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நெல், நிலக்கடலை மற்றும் கம்பு பயிர்களுக்கு காப்பீடு செய்யுமாறு வேளாண்மை இணை இயக்குநர் இரா.சீனிவாசன் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்கள் பயிர்களைக் காப்பீடு செய்வதன் மூலம் எதிர்பாராத இயற்கை சீற்றங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். மேலும் இது விவசாயிகளுக்கு நிதி ரீதியான பாதுகாப்பை அளிப்பதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நெல்-I (நடவு) பயிர் செய்துள்ள விவசாயிகள் ஜூலை 31, 2025-க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் எனவும் நிலக்கடலை மற்றும் கம்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் ஆகஸ்ட் 30, 2025-க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைசி தேதி நீட்டிக்கப்படாது என்பதும், விவசாயிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள், வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களை அணுகி இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்ததோடு மேலும் விவரங்களுக்கு, தங்கள் பகுதி வேளாண்மை அலுவலர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மகசூல் இழப்பிற்கு ஈடு செய்து வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம்

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல், கம்பு பயிர்களுக்கு காப்பீடு செய்திட வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.

வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி செய்திக்குறிப்பு;

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025 - 26ம் ஆண்டு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள சொர்ணவாரி நெல் மற்றும் கம்பு பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய வேண்டும். விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஈடு செய்து வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தாண்டு காரீப் பருவத்தில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் சொர்ணவாரி -1 பயிருக்கு வரும் 31ம் தேதியும், கம்பு பயிருக்கு ஆகஸ்ட் 16ம் தேதியும் காப்பீடு செய்ய கடைசி நாள். நெற்பயிருக்கு ஏக்கருக்கு 463 ரூபாய், கம்பு பயிருக்கு 237 ரூபாய் பிரீமிய கட்டணமாக பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தலாம். அதற்கு நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை தேவை.

பதிவு செய்யும்போது விவசாயிகள் பெயர், முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விபரங்களை சரியாக கவனித்து பதிவு செய்திட வேண்டும். எனவே இந்த பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெற வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

தென்னையில் குருத்தழுகல் நோயை தாக்கும் முறைகள் –  விவசாயிகளுக்கு வேளாண் துறை தெரிவித்தது என்ன?
தென்னையில் குருத்தழுகல் நோயை தாக்கும் முறைகள் –  விவசாயிகளுக்கு வேளாண் துறை தெரிவித்தது என்ன?
அதிரடி அறிவிப்பால் விருத்தாசலம் விவசாயிகள் மகிழ்ச்சி! 48 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு!
அதிரடி அறிவிப்பால் விருத்தாசலம் விவசாயிகள் மகிழ்ச்சி! 48 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு!
விவசாயிகள் கவனத்திற்கு: குறுவை பருவத் தோட்டக்கலை பயிர் காப்பீடு - முழு விவரம்!
விவசாயிகள் கவனத்திற்கு: குறுவை பருவத் தோட்டக்கலை பயிர் காப்பீடு - முழு விவரம்!
விவசாயிகளின் உழைப்பு வீணாகாது; பொதுமக்களுக்கு அரிசி தட்டுப்பாடு வராது – அமைச்சர் அதிரடி!
விவசாயிகளின் உழைப்பு வீணாகாது; பொதுமக்களுக்கு அரிசி தட்டுப்பாடு வராது – அமைச்சர் அதிரடி!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget