மேலும் அறிய

கொளுத்தும் வெயிலில் கருகிய வெற்றிலை; வாடிய விவசாயிகள் - அரசு கை கொடுக்குமா?

வெற்றிலை கொடிக்கு அதிக வளிமண்டல ஈரப்பதம் கொண்ட வெப்ப மண்டல காலநிலை தேவைப்படுகிறது.  

தர்மபுரி மாவட்டத்தில் கொளுத்தும் அனல் காற்றால் வெற்றிலை மற்றும் வெற்றிலை கொடி கால் முற்றிலும் கருகியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் பெற்று தர வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் தூத்துக்குடி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெற்றிலை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தர்மபுரி மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் முக்கல்நாயக்கன்பட்டி, நூல அள்ளி, மிட்டாரெட்டிஹல்லி, தின்னஹல்லி நடுப்பட்டி, அக்குமானஹல்லி, கோடியூர், பாளையம்புதூர், கோம்பை, நார்த்தம்பட்டி, ஜாலி கொட்டாய், கடத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் 90 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் வெள்ளை மற்றும் கருப்பு ரக வெற்றிலைகள் இங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் வெற்றிலை சேலம், ஈரோடு, கோவை, பவானி உள்ளிட்ட இடங்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  தர்மபுரி மாவட்ட வெற்றிலைக்கு ஈரோடு, சேலம் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.  ஒரு கட்டு 150 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த இரு வாரத்திற்கு முன்பு ஒரு மூட்டை வெற்றிலை 19,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று வெற்றிலை விலை உயர்ந்து ஒரு மூட்டை வெற்றிலை 25,000 வரை விற்பனையானது. இரண்டு வாரத்தில் வரத்து குறைந்ததால், வெற்றிலை மூட்டைக்கு 6000 விலை உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் போதிய மழை இல்லாமல் கோடை வெயிலில், அனல் காற்றிலும் கிணறு மற்றும் நீர்நிலைகள் தண்ணீர் இல்லாமல், வெற்றிலை காப்பாற்ற விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றி, தற்போது வெற்றிலை அறுவடை செய்து வருகின்றனர்.  மேலும் கிணற்று பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெற்றிலை, இப்போது அறுவடை செய்யப்படுகிறது. ஆனாலும் பல இடங்களில் கிணற்றில் தண்ணீர் இல்லை.
கொளுத்தும் வெயிலில் கருகிய வெற்றிலை; வாடிய விவசாயிகள் - அரசு கை கொடுக்குமா?

இதனால் வெற்றிலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், வெற்றிலை கொடிக்கால் முற்றிலும் காய்ந்து கருகியது.  இதனால் வெற்றிலை விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. மேலும் நடப்பாண்டும் இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல், நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்று விட்டது. பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் இல்லை. கொளுத்தும் வெயிலுக்கு வெற்றிலை மற்றும் வெற்றிலை கொடிக்கால் காய்ந்து கருகுயுள்ளது.  இது போன்று உருவாக்க மூன்று மாதங்கள் ஆகும். வெற்றிலை பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. அந்த காம்புகளை வெட்டி பதியம் போட்டுத்தான், பயிர் செய்யப்படுகிறது. வெற்றிலை கொடிக்கு அதிக வளிமண்டல ஈரப்பதம் கொண்ட வெப்ப மண்டல காலநிலை தேவைப்படுகிறது. நீர் தேங்கியுள்ள உலர் நிலம் மற்றும் களிமண் அதன் சாகுபடிக்கு ஏற்றதாகும். அனல் காற்றால் வெற்றிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு வெற்றிலை வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. பெரும்பாலான வெற்றிலைக் கொடிகள் நீரின்றி காய்ந்து கருகியதால், பாதிக்கப்பட்ட வெற்றிலை விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் பெற்று தர வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில்
சிவகங்கையில் "செம்மண்" விதை திருவிழா: பாரம்பரிய வேளாண்மைக்கு புத்துயிர்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget