மேலும் அறிய

மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

மல்லிகைக்கு பெயர் போன நிலக்கோட்டையில் தற்போது மல்லிகை விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக வேதனை அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் குட்டி ஹாலந்த் என்று அழைக்கப்படுவது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை. இப்பகுதியில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட அனைத்து மலர்களுக்கான விவசாயம் செய்யும் பணியானது பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது.


மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

மதுரை மல்லி என்று அழைக்கப்படுவது மதுரையில் அல்ல நிலக்கோட்டையில் மலரும் மல்லிகையை தான். அப்படி மல்லிகைக்கு பெயர் போன நிலக்கோட்டையில் தற்போது மல்லிகை விவசாயிகளின் வாழ்வாதாரம் பூக்களால் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். இந்த விவசாயம் குறித்து விவசாயிகள் பேசுகையில் மழைக்காலம் மற்றும் பனிக்காலம் வந்தாலே பூ செடியிலேயே கருகி விடுகிறது. அதேபோல் தற்போது மல்லிகை பூக்களுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதால் சாதாரண நேரத்தில் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ பூ பூத்தால், இன்றைய சூழலில்  ஒரு கிலோ பூ தான் பூக்கிறது. அதேபோல் ஒரு ஏக்கருக்கு பூக்கள் பூத்து எடுக்கும் வரை அந்த 45 நாட்களுக்கு மட்டும் சுமார் ஐந்து முறை மருந்து தெளிக்க வேண்டி உள்ளது.

ஒரு முறை மருந்து தெளிப்பதற்கு 4 ஆயிரம் ருபாய்க்கு மருந்து 1000 ரூபாய் கூலி என செலவாகிறது. 45 நாட்களில் சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகிறது. அதேபோல் குடும்பத்தோடு வேலை செய்தும் கூலியாக்களை 500 ரூபாய் வரை வழங்கி வரவழைத்து பூக்களை பாதுகாத்து வந்தாலும் பூச்செடிகளில் மிகப்பெரிய அளவில் தற்போது வருமானம் இல்லை. தமிழக விவசாய துறையோ, வேளாண்மை துறையோ, தோட்டக்கலை துறையும் எந்த அதிகாரிகளும் வந்து பார்ப்பதில்லை. எந்த ஒரு பயன்களும் வருவதில்லை என்று கூறுகின்றனர் விவசாயிகள்.


மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

மேலும் பல்லாயிரம் ஏக்கர் மலர்களை விவசாயம் செய்து வரும் நாங்கள் எங்களது வாழ்வு மலர் போல் மணக்கவில்லை. 20,000 ரூபாய் செலவு செய்து விவசாயம் செய்தால் 30 ஆயிரம் ரூபாய் வருவாய் வந்தால் தான் எங்களது குழந்தைகள் முதல் அனைவரையும் பாதுகாக்க முடியும். கல்வி, திருமணம் உள்ளிட்ட அனைத்தையும் செய்து தர முடியும். எங்களுக்கு நோய்வாய் பட்டாலும் மருத்துவமனைக்கு செல்ல முடியும். ஆனால் இருபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து 10,000 ரூபாய் வருமானம் வந்தால் வீட்டில் உள்ள பெண்களின் மூக்குத்தி முதல் அண்டா குண்டா வரை அடகு வைத்து செலவு செய்த அனைத்து பணமும் வீணாகி கடனாளியாகவே மாறி வருகிறோம்.


மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவிப்பதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் கடை கோடியில் உள்ள எங்களைபோன்றவர்களுக்கு எந்த ஒரு மானியமோ, திட்டங்களோ அல்லது இலவச உரமோ எதுவுமே கிடைப்பது கிடையாது.எங்களைப் போல் உள்ளவர்களுக்கு அரசின் திட்டங்கள் சேர வேண்டும். ஆனால் விவசாய அதிகாரிகளோ, விவசாயத் துறையினரோ யாரும் எங்களை வந்து கண்டு கொள்வதில்லை. தொடர்ந்து விவசாயத்தை மட்டுமே பரம்பரையாக செய்து வரும் எங்களுக்கு தற்போது விவசாயத்தின் காரணமாக மிகப்பெரிய கடனாளியாகவே மாறி வருகிறோம். மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.


மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

விவசாயிகள் எவ்வாறு பாதிக்கின்றனர் அந்த பயிருக்கு என்ன முறையில் மருந்துகள் வைத்தால் பாதுகாக்க முடியும் என்று நேரடியாக வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து விவசாயிகளை வேளாண் துறை அதிகாரிகள் புறக்கணித்தே வந்தால் முற்றிலுமாக விவசாயம் அழிந்து விடும். ஆகவே தமிழக அரசு தலையிட்டு நிலக்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். மல்லிகை விவசாயிகள் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025):
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025): வருகிறாள் தனலட்சுமி! லாட்டரியில் இன்று யாருக்கு என்ன பரிசுகள்?
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
Embed widget