மேலும் அறிய

மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

மல்லிகைக்கு பெயர் போன நிலக்கோட்டையில் தற்போது மல்லிகை விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக வேதனை அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் குட்டி ஹாலந்த் என்று அழைக்கப்படுவது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை. இப்பகுதியில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட அனைத்து மலர்களுக்கான விவசாயம் செய்யும் பணியானது பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது.


மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

மதுரை மல்லி என்று அழைக்கப்படுவது மதுரையில் அல்ல நிலக்கோட்டையில் மலரும் மல்லிகையை தான். அப்படி மல்லிகைக்கு பெயர் போன நிலக்கோட்டையில் தற்போது மல்லிகை விவசாயிகளின் வாழ்வாதாரம் பூக்களால் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். இந்த விவசாயம் குறித்து விவசாயிகள் பேசுகையில் மழைக்காலம் மற்றும் பனிக்காலம் வந்தாலே பூ செடியிலேயே கருகி விடுகிறது. அதேபோல் தற்போது மல்லிகை பூக்களுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதால் சாதாரண நேரத்தில் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ பூ பூத்தால், இன்றைய சூழலில்  ஒரு கிலோ பூ தான் பூக்கிறது. அதேபோல் ஒரு ஏக்கருக்கு பூக்கள் பூத்து எடுக்கும் வரை அந்த 45 நாட்களுக்கு மட்டும் சுமார் ஐந்து முறை மருந்து தெளிக்க வேண்டி உள்ளது.

ஒரு முறை மருந்து தெளிப்பதற்கு 4 ஆயிரம் ருபாய்க்கு மருந்து 1000 ரூபாய் கூலி என செலவாகிறது. 45 நாட்களில் சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகிறது. அதேபோல் குடும்பத்தோடு வேலை செய்தும் கூலியாக்களை 500 ரூபாய் வரை வழங்கி வரவழைத்து பூக்களை பாதுகாத்து வந்தாலும் பூச்செடிகளில் மிகப்பெரிய அளவில் தற்போது வருமானம் இல்லை. தமிழக விவசாய துறையோ, வேளாண்மை துறையோ, தோட்டக்கலை துறையும் எந்த அதிகாரிகளும் வந்து பார்ப்பதில்லை. எந்த ஒரு பயன்களும் வருவதில்லை என்று கூறுகின்றனர் விவசாயிகள்.


மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

மேலும் பல்லாயிரம் ஏக்கர் மலர்களை விவசாயம் செய்து வரும் நாங்கள் எங்களது வாழ்வு மலர் போல் மணக்கவில்லை. 20,000 ரூபாய் செலவு செய்து விவசாயம் செய்தால் 30 ஆயிரம் ரூபாய் வருவாய் வந்தால் தான் எங்களது குழந்தைகள் முதல் அனைவரையும் பாதுகாக்க முடியும். கல்வி, திருமணம் உள்ளிட்ட அனைத்தையும் செய்து தர முடியும். எங்களுக்கு நோய்வாய் பட்டாலும் மருத்துவமனைக்கு செல்ல முடியும். ஆனால் இருபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து 10,000 ரூபாய் வருமானம் வந்தால் வீட்டில் உள்ள பெண்களின் மூக்குத்தி முதல் அண்டா குண்டா வரை அடகு வைத்து செலவு செய்த அனைத்து பணமும் வீணாகி கடனாளியாகவே மாறி வருகிறோம்.


மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவிப்பதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் கடை கோடியில் உள்ள எங்களைபோன்றவர்களுக்கு எந்த ஒரு மானியமோ, திட்டங்களோ அல்லது இலவச உரமோ எதுவுமே கிடைப்பது கிடையாது.எங்களைப் போல் உள்ளவர்களுக்கு அரசின் திட்டங்கள் சேர வேண்டும். ஆனால் விவசாய அதிகாரிகளோ, விவசாயத் துறையினரோ யாரும் எங்களை வந்து கண்டு கொள்வதில்லை. தொடர்ந்து விவசாயத்தை மட்டுமே பரம்பரையாக செய்து வரும் எங்களுக்கு தற்போது விவசாயத்தின் காரணமாக மிகப்பெரிய கடனாளியாகவே மாறி வருகிறோம். மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.


மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

விவசாயிகள் எவ்வாறு பாதிக்கின்றனர் அந்த பயிருக்கு என்ன முறையில் மருந்துகள் வைத்தால் பாதுகாக்க முடியும் என்று நேரடியாக வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து விவசாயிகளை வேளாண் துறை அதிகாரிகள் புறக்கணித்தே வந்தால் முற்றிலுமாக விவசாயம் அழிந்து விடும். ஆகவே தமிழக அரசு தலையிட்டு நிலக்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். மல்லிகை விவசாயிகள் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடைபெறும் 4 ஆம் கட்ட மக்களவை தேர்தல்..!
விறுவிறுப்பாக நடைபெறும் 4 ஆம் கட்ட மக்களவை தேர்தல்..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vetrimaaran on Ilayaraja Vairamuthu : இளையராஜா VS வைரமுத்து “பாடல் யாருக்கு சொந்தம்?”- வெற்றிமாறன்Priyanka Gandhi on Amit shah : ”என்ன பண்ணீங்க அமித்ஷா? லிஸ்ட் சொல்லுங்க பார்ப்போம்” பிரியங்கா சவால்Vetrimaaran Pressmeet : ”சாதி ஏற்றத்தாழ்வு இல்லையா? நீங்கலாம் எங்க வாழ்றீங்க?” வெற்றிமாறன் பதிலடிNellai Jayakumar : மர்மம் விலக்குமா டார்ச் லைட்? ஜெயக்குமார் மரணத்தில் திருப்பம்! வலுக்கும் சந்தேகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடைபெறும் 4 ஆம் கட்ட மக்களவை தேர்தல்..!
விறுவிறுப்பாக நடைபெறும் 4 ஆம் கட்ட மக்களவை தேர்தல்..!
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Today Movies in TV, May 13:  லீவு போட ரெடியா இருங்க - டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?
Today Movies in TV, May 13: லீவு போட ரெடியா இருங்க - டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?
Embed widget