மேலும் அறிய

மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

மல்லிகைக்கு பெயர் போன நிலக்கோட்டையில் தற்போது மல்லிகை விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக வேதனை அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் குட்டி ஹாலந்த் என்று அழைக்கப்படுவது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை. இப்பகுதியில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட அனைத்து மலர்களுக்கான விவசாயம் செய்யும் பணியானது பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது.


மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

மதுரை மல்லி என்று அழைக்கப்படுவது மதுரையில் அல்ல நிலக்கோட்டையில் மலரும் மல்லிகையை தான். அப்படி மல்லிகைக்கு பெயர் போன நிலக்கோட்டையில் தற்போது மல்லிகை விவசாயிகளின் வாழ்வாதாரம் பூக்களால் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். இந்த விவசாயம் குறித்து விவசாயிகள் பேசுகையில் மழைக்காலம் மற்றும் பனிக்காலம் வந்தாலே பூ செடியிலேயே கருகி விடுகிறது. அதேபோல் தற்போது மல்லிகை பூக்களுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதால் சாதாரண நேரத்தில் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ பூ பூத்தால், இன்றைய சூழலில்  ஒரு கிலோ பூ தான் பூக்கிறது. அதேபோல் ஒரு ஏக்கருக்கு பூக்கள் பூத்து எடுக்கும் வரை அந்த 45 நாட்களுக்கு மட்டும் சுமார் ஐந்து முறை மருந்து தெளிக்க வேண்டி உள்ளது.

ஒரு முறை மருந்து தெளிப்பதற்கு 4 ஆயிரம் ருபாய்க்கு மருந்து 1000 ரூபாய் கூலி என செலவாகிறது. 45 நாட்களில் சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகிறது. அதேபோல் குடும்பத்தோடு வேலை செய்தும் கூலியாக்களை 500 ரூபாய் வரை வழங்கி வரவழைத்து பூக்களை பாதுகாத்து வந்தாலும் பூச்செடிகளில் மிகப்பெரிய அளவில் தற்போது வருமானம் இல்லை. தமிழக விவசாய துறையோ, வேளாண்மை துறையோ, தோட்டக்கலை துறையும் எந்த அதிகாரிகளும் வந்து பார்ப்பதில்லை. எந்த ஒரு பயன்களும் வருவதில்லை என்று கூறுகின்றனர் விவசாயிகள்.


மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

மேலும் பல்லாயிரம் ஏக்கர் மலர்களை விவசாயம் செய்து வரும் நாங்கள் எங்களது வாழ்வு மலர் போல் மணக்கவில்லை. 20,000 ரூபாய் செலவு செய்து விவசாயம் செய்தால் 30 ஆயிரம் ரூபாய் வருவாய் வந்தால் தான் எங்களது குழந்தைகள் முதல் அனைவரையும் பாதுகாக்க முடியும். கல்வி, திருமணம் உள்ளிட்ட அனைத்தையும் செய்து தர முடியும். எங்களுக்கு நோய்வாய் பட்டாலும் மருத்துவமனைக்கு செல்ல முடியும். ஆனால் இருபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து 10,000 ரூபாய் வருமானம் வந்தால் வீட்டில் உள்ள பெண்களின் மூக்குத்தி முதல் அண்டா குண்டா வரை அடகு வைத்து செலவு செய்த அனைத்து பணமும் வீணாகி கடனாளியாகவே மாறி வருகிறோம்.


மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவிப்பதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் கடை கோடியில் உள்ள எங்களைபோன்றவர்களுக்கு எந்த ஒரு மானியமோ, திட்டங்களோ அல்லது இலவச உரமோ எதுவுமே கிடைப்பது கிடையாது.எங்களைப் போல் உள்ளவர்களுக்கு அரசின் திட்டங்கள் சேர வேண்டும். ஆனால் விவசாய அதிகாரிகளோ, விவசாயத் துறையினரோ யாரும் எங்களை வந்து கண்டு கொள்வதில்லை. தொடர்ந்து விவசாயத்தை மட்டுமே பரம்பரையாக செய்து வரும் எங்களுக்கு தற்போது விவசாயத்தின் காரணமாக மிகப்பெரிய கடனாளியாகவே மாறி வருகிறோம். மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.


மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

விவசாயிகள் எவ்வாறு பாதிக்கின்றனர் அந்த பயிருக்கு என்ன முறையில் மருந்துகள் வைத்தால் பாதுகாக்க முடியும் என்று நேரடியாக வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து விவசாயிகளை வேளாண் துறை அதிகாரிகள் புறக்கணித்தே வந்தால் முற்றிலுமாக விவசாயம் அழிந்து விடும். ஆகவே தமிழக அரசு தலையிட்டு நிலக்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். மல்லிகை விவசாயிகள் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ரூபாய்க்கு ஆக்சிஜன் வாங்கும் நிலை வருமா? மதுரை வீ த லீடர்ஸ் ஆக்சிஜன் மாஸ்க் விழிப்புணர்வு!
ரூபாய்க்கு ஆக்சிஜன் வாங்கும் நிலை வருமா? மதுரை வீ த லீடர்ஸ் ஆக்சிஜன் மாஸ்க் விழிப்புணர்வு!
வீழ்ச்சியில் சர்க்கரை உற்பத்தி! அரசு போடப்போகும் மாஸ் பிளான் என்ன? கரும்பு விவசாயிகளுக்கு செம நியூஸ்!
வீழ்ச்சியில் சர்க்கரை உற்பத்தி! அரசு போடப்போகும் மாஸ் பிளான்! கரும்பு விவசாயிகளுக்கு செம நியூஸ்!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
உங்ககிட்ட விவசாய நிலம் இருக்கா? அப்போ உடனே இதைச் செய்யுங்க! அரசு முக்கிய அறிவுறுத்தல்!
உங்ககிட்ட விவசாய நிலம் இருக்கா? அப்போ உடனே இதைச் செய்யுங்க! அரசு முக்கிய அறிவுறுத்தல்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Tata Sumo Next Generation: புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Toyota Upcoming Launches in India: 35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
Embed widget