மேலும் அறிய

அதிக மழையால் சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் தூத்துக்குடி விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டம் அயன் ராசாப்பட்டி முதல் வைப்பார் கிராமம் வரை பாயும் வைப்பாற்றில் முத்தலாபுரம் பாலத்தின் கீழ் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை

பெய்யாத மழை- இழப்பை சந்தித்த விவசாயிகள்- தொடர்ந்து பெய்த அதிக மழை சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் விவசாயிகள்.


அதிக மழையால் சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் தூத்துக்குடி விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1.70 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் புரட்டாசி ராபி பருவத்தில் பயிர் வகைகள், எண்ணை வித்துகள், நறுமண செடிகள், பணப்பயிர்கள் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டனர். பருவமழை தாமதமானதால் மண்ணில் ஈரத்தன்மை இல்லாததால் விதைப்பு செய்யப்பட்ட விதைகள் அனைத்தும் கெட்டுவிட்டது. இந்நிலையில் ஐப்பசி 15ஆம் தேதிக்குப் பின்னர் மழை துவங்கியது. இதனால் இரண்டாவது முறையாக உழவு மேற்கொண்டு விவசாயிகள் விதைப்பில் ஈடுபட்டனர். ஆனால் அதனை தொடர்ந்து பெய்த அதிக கனமழையால் ஈரத்தன்மை அதிகரித்து முளைத்த பயிர்கள் அனைத்தும் அழுகிவிட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நிலங்களில் சாய்ந்து கிடக்கும் பயிர்களை அகற்றுவதற்கு செலவழிக்க வழியில்லாமல் அப்படியே விட்டுள்ளனர்.


அதிக மழையால் சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் தூத்துக்குடி விவசாயிகள்

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறும் போது, ”கடந்த 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்ததால் உளுந்து, பாசிப்பயிர்கள் நெத்துக்கள் செடியிலேயே முளைத்தன. அறுவடைக்கு தயாராக இருந்த சோளம், கம்பு ஆகியவை கால்நடை திவனத்துக்கூட உபயோகப்படுத்த கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த ஆண்டு மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதே நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறும் அவர், வெள்ளைச்சோளத்தை பொருத்தவரை தென் மாவட்டங்களில் அதன் மகசூல் அதிகம். வெள்ளைச் சோளம் கால்நடை தீவனமாக நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதியில் உள்ள பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்படும். தற்போது தை மாதம் தொடங்க உள்ள நிலையில் மழைப்பொழிவு நீடிக்கிறது. தை மாதம் மழை தவிட்டுக்கு கூட உதவாது என பழமொழி உண்டு. இன்று வரை பெய்த மழையால் வெள்ளைச்சோளம், கம்பு என அனைத்து பயிர்களும் சேதம் அடைந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடனை கிடனை வாங்கி மகசூல் எடுக்க முடியாமல் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் அடுத்த ஆண்டு விவசாயம் செய்வதை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சேதம் அடைந்த பயிர்களுக்கு 5 ஏக்கர் என்ற வரன் மொழியை தளர்த்தி பயிரிட்ட அனைத்து நிலங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு நிவாரணமாக 25000 உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் இவர் நடப்பாண்டு பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்.


அதிக மழையால் சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் தூத்துக்குடி விவசாயிகள்

மேலும், தூத்துக்குடி மாவட்டம் அயன் ராசாப்பட்டி முதல் வைப்பார் கிராமம் வரை பாயும் வைப்பாற்றில் 11 இடங்களில் தடுப்பணைகள் உள்ளது. இதில் முத்தலாபுரம் பாலத்தின் கீழ் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் விவசாய கிணறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கும், குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் இது குறித்து ஏற்கனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே முத்தலாபுரம் பாலத்தின் கீழ்பகுதியில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget