மேலும் அறிய

அதிக மழையால் சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் தூத்துக்குடி விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டம் அயன் ராசாப்பட்டி முதல் வைப்பார் கிராமம் வரை பாயும் வைப்பாற்றில் முத்தலாபுரம் பாலத்தின் கீழ் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை

பெய்யாத மழை- இழப்பை சந்தித்த விவசாயிகள்- தொடர்ந்து பெய்த அதிக மழை சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் விவசாயிகள்.


அதிக மழையால் சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் தூத்துக்குடி விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1.70 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் புரட்டாசி ராபி பருவத்தில் பயிர் வகைகள், எண்ணை வித்துகள், நறுமண செடிகள், பணப்பயிர்கள் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டனர். பருவமழை தாமதமானதால் மண்ணில் ஈரத்தன்மை இல்லாததால் விதைப்பு செய்யப்பட்ட விதைகள் அனைத்தும் கெட்டுவிட்டது. இந்நிலையில் ஐப்பசி 15ஆம் தேதிக்குப் பின்னர் மழை துவங்கியது. இதனால் இரண்டாவது முறையாக உழவு மேற்கொண்டு விவசாயிகள் விதைப்பில் ஈடுபட்டனர். ஆனால் அதனை தொடர்ந்து பெய்த அதிக கனமழையால் ஈரத்தன்மை அதிகரித்து முளைத்த பயிர்கள் அனைத்தும் அழுகிவிட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நிலங்களில் சாய்ந்து கிடக்கும் பயிர்களை அகற்றுவதற்கு செலவழிக்க வழியில்லாமல் அப்படியே விட்டுள்ளனர்.


அதிக மழையால் சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் தூத்துக்குடி விவசாயிகள்

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறும் போது, ”கடந்த 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்ததால் உளுந்து, பாசிப்பயிர்கள் நெத்துக்கள் செடியிலேயே முளைத்தன. அறுவடைக்கு தயாராக இருந்த சோளம், கம்பு ஆகியவை கால்நடை திவனத்துக்கூட உபயோகப்படுத்த கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த ஆண்டு மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதே நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறும் அவர், வெள்ளைச்சோளத்தை பொருத்தவரை தென் மாவட்டங்களில் அதன் மகசூல் அதிகம். வெள்ளைச் சோளம் கால்நடை தீவனமாக நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதியில் உள்ள பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்படும். தற்போது தை மாதம் தொடங்க உள்ள நிலையில் மழைப்பொழிவு நீடிக்கிறது. தை மாதம் மழை தவிட்டுக்கு கூட உதவாது என பழமொழி உண்டு. இன்று வரை பெய்த மழையால் வெள்ளைச்சோளம், கம்பு என அனைத்து பயிர்களும் சேதம் அடைந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடனை கிடனை வாங்கி மகசூல் எடுக்க முடியாமல் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் அடுத்த ஆண்டு விவசாயம் செய்வதை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சேதம் அடைந்த பயிர்களுக்கு 5 ஏக்கர் என்ற வரன் மொழியை தளர்த்தி பயிரிட்ட அனைத்து நிலங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு நிவாரணமாக 25000 உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் இவர் நடப்பாண்டு பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்.


அதிக மழையால் சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் தூத்துக்குடி விவசாயிகள்

மேலும், தூத்துக்குடி மாவட்டம் அயன் ராசாப்பட்டி முதல் வைப்பார் கிராமம் வரை பாயும் வைப்பாற்றில் 11 இடங்களில் தடுப்பணைகள் உள்ளது. இதில் முத்தலாபுரம் பாலத்தின் கீழ் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் விவசாய கிணறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கும், குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் இது குறித்து ஏற்கனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே முத்தலாபுரம் பாலத்தின் கீழ்பகுதியில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில்
சிவகங்கையில் "செம்மண்" விதை திருவிழா: பாரம்பரிய வேளாண்மைக்கு புத்துயிர்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
Syros EV Vs Windsor EV: கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
Embed widget