மேலும் அறிய

அதிக மழையால் சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் தூத்துக்குடி விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டம் அயன் ராசாப்பட்டி முதல் வைப்பார் கிராமம் வரை பாயும் வைப்பாற்றில் முத்தலாபுரம் பாலத்தின் கீழ் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை

பெய்யாத மழை- இழப்பை சந்தித்த விவசாயிகள்- தொடர்ந்து பெய்த அதிக மழை சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் விவசாயிகள்.


அதிக மழையால் சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் தூத்துக்குடி விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1.70 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் புரட்டாசி ராபி பருவத்தில் பயிர் வகைகள், எண்ணை வித்துகள், நறுமண செடிகள், பணப்பயிர்கள் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டனர். பருவமழை தாமதமானதால் மண்ணில் ஈரத்தன்மை இல்லாததால் விதைப்பு செய்யப்பட்ட விதைகள் அனைத்தும் கெட்டுவிட்டது. இந்நிலையில் ஐப்பசி 15ஆம் தேதிக்குப் பின்னர் மழை துவங்கியது. இதனால் இரண்டாவது முறையாக உழவு மேற்கொண்டு விவசாயிகள் விதைப்பில் ஈடுபட்டனர். ஆனால் அதனை தொடர்ந்து பெய்த அதிக கனமழையால் ஈரத்தன்மை அதிகரித்து முளைத்த பயிர்கள் அனைத்தும் அழுகிவிட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நிலங்களில் சாய்ந்து கிடக்கும் பயிர்களை அகற்றுவதற்கு செலவழிக்க வழியில்லாமல் அப்படியே விட்டுள்ளனர்.


அதிக மழையால் சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் தூத்துக்குடி விவசாயிகள்

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறும் போது, ”கடந்த 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்ததால் உளுந்து, பாசிப்பயிர்கள் நெத்துக்கள் செடியிலேயே முளைத்தன. அறுவடைக்கு தயாராக இருந்த சோளம், கம்பு ஆகியவை கால்நடை திவனத்துக்கூட உபயோகப்படுத்த கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த ஆண்டு மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதே நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறும் அவர், வெள்ளைச்சோளத்தை பொருத்தவரை தென் மாவட்டங்களில் அதன் மகசூல் அதிகம். வெள்ளைச் சோளம் கால்நடை தீவனமாக நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதியில் உள்ள பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்படும். தற்போது தை மாதம் தொடங்க உள்ள நிலையில் மழைப்பொழிவு நீடிக்கிறது. தை மாதம் மழை தவிட்டுக்கு கூட உதவாது என பழமொழி உண்டு. இன்று வரை பெய்த மழையால் வெள்ளைச்சோளம், கம்பு என அனைத்து பயிர்களும் சேதம் அடைந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடனை கிடனை வாங்கி மகசூல் எடுக்க முடியாமல் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் அடுத்த ஆண்டு விவசாயம் செய்வதை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சேதம் அடைந்த பயிர்களுக்கு 5 ஏக்கர் என்ற வரன் மொழியை தளர்த்தி பயிரிட்ட அனைத்து நிலங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு நிவாரணமாக 25000 உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் இவர் நடப்பாண்டு பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்.


அதிக மழையால் சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் தூத்துக்குடி விவசாயிகள்

மேலும், தூத்துக்குடி மாவட்டம் அயன் ராசாப்பட்டி முதல் வைப்பார் கிராமம் வரை பாயும் வைப்பாற்றில் 11 இடங்களில் தடுப்பணைகள் உள்ளது. இதில் முத்தலாபுரம் பாலத்தின் கீழ் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் விவசாய கிணறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கும், குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் இது குறித்து ஏற்கனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே முத்தலாபுரம் பாலத்தின் கீழ்பகுதியில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ABP Premium

வீடியோ

வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
Embed widget