மேலும் அறிய

தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!

நெதர்லாந்துக்கு சென்றிருக்கும் பிரதமர் மோடியிடம், பல ஆண்டுகளாக அங்கு பாதுகாக்கப்பட்டு வந்த "சோழர் கால ஆனைமங்கலம் செப்பேடுகள்” இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த செப்பேடுகளின் வரலாறு என்னவென்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

பிரதமர் Narendra Modi 5 நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து சென்றிருக்கிறார்.

இந்த நிலையில், அங்கு பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த “ஆனைமங்கலம் செப்பேடுகள்” அவரிடம் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leiden Plates” என்றும் அழைக்கப்படும் இந்த செப்பேடுகள், 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இந்திய அரசு, டச்சு அரசு மற்றும் லெய்டன் பல்கலைக்கழகம் இடையே பல ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகே இந்த ஒப்படைப்பு நடைபெற்றுள்ளது.

சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த வரலாற்று செப்பேடுகள் இதுவரை Leiden University பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன.

மொத்தம் 21 செப்புத்தகடுகள் கொண்ட இந்த தொகுப்பு சுமார் 30 கிலோ எடை கொண்டது. அனைத்து தகடுகளும் வெண்கல வளையத்தால் இணைக்கப்பட்டிருக்கும். அதில் ராஜேந்திர சோழனின் அரச முத்திரையும் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டுகள் முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவை. அதாவது கி.பி 985 முதல் 1014 காலகட்ட சோழர் வரலாற்றை பதிவு செய்யும் முக்கிய ஆவணமாக இது பார்க்கப்படுகிறது.

இந்த செப்பேடுகளில் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சமஸ்கிருத பகுதியில் சோழர் வம்ச வரலாறும், அரச மரபும் இடம்பெற்றுள்ளன.

தமிழ் பகுதியில் நாகப்பட்டினத்தில் இருந்த “சூடாமணி விஹாரம்” என்ற புத்த மத மடாலயத்திற்கு நிலங்களும் வரிவிலக்குகளும் வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புத்த விஹாரத்தை, இன்றைய இந்தோனேஷியாவில் இருந்த ஸ்ரீவிஜய அரசின் மன்னர் கட்டியதாகவும், அதற்கு சோழர்கள் ஆதரவு வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்த காலத்திலேயே தமிழ்நாடு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே கடல் வாணிபம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் மத நல்லிணக்கம் இருந்தது என்பதற்கான முக்கிய ஆதாரமாக இந்த செப்பேடுகள் பார்க்கப்படுகின்றன.

1700களில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி நாகப்பட்டினத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில், டச்சு மதபோதகர் ஒருவரின் கைகளுக்கு இந்த செப்பேடுகள் சென்றதாக கூறப்படுகிறது.பின்னர் 1862ஆம் ஆண்டு லெய்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிய வரலாற்று ஆவண சேகரிப்பில் சேர்க்கப்பட்டன.

அதன்பிறகு பல ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்த செப்பேடுகளை மீட்க இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வந்தது.

தற்போது அந்த முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் வரலாற்றின் முக்கிய சாட்சியாக இருக்கும் இந்த செப்பேடுகள் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளன.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்வே கேட்டுகளில் கேமரா, சங்கேத முறை: விபத்துகளுக்கு இனி இடமில்லை!
மதுரை ரயில்வே கேட்டுகளில் கேமரா, சங்கேத முறை: விபத்துகளுக்கு இனி இடமில்லை!
CM Vijay Thiruma.: ‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
" கணவரைப் பற்றி பேசனும் " தனியாக வரவழைத்து அத்துமீறல் - சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் அதிரடி கைது
தமிழகத்திலேயே முதல் முறை; உயிர்பிழைத்த தாய், குழந்தை.. திக் திக் நிமிடங்களை வென்ற சேலம் மருத்துவர்கள் - நெகிழ்ச்சிப் பின்னணி
தமிழகத்திலேயே முதல் முறை; உயிர்பிழைத்த தாய், குழந்தை.. திக் திக் நிமிடங்களை வென்ற சேலம் மருத்துவர்கள் - நெகிழ்ச்சிப் பின்னணி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Thiruma.: ‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ADMK To TVK : நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
Chennai Power Cut: சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
New Tata Altroz Turbo CNG: நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
Embed widget