மேலும் அறிய

போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?

"வெல்க தமிழ் ஈழம்" என்ற முழக்கத்தோடு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற வன்னி அரசு இன்று, விசிக-வின் 36 வருட அரசியல் பயணத்தில் முதல் அமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து இன்று மாநில சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் வன்னியரசு பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவைச் சேர்ந்த அயன்ரெட்டியார்பட்டி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் வன்னியரசு. இவரது தந்தை ஒரு கம்யூனிசவாதி.

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் தனது சிறுவயதிலேயே பல்வேறு சாதிய பாகுபாடுகளை எதிர்கொண்டார்.

மேலும், சிறுவயது முதலே அம்பேத்கர் மற்றும் பெரியாரிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அந்த கொள்கைகளை பின்பற்றி வளர்ந்தார்.

தமிழ் ஈழத்தின் மிகுந்த ஈடுபடுகொண்ட வன்னியரசு, விசிக-வில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழீழதுக்காகத் தொடர்ந்து குரல்கொடுக்கத் தொடங்கினார்.

குறிப்பாக, தமிழீழம் ஒன்றே அம்மக்களின் விடுதலைக்குத் தீர்வு என இன்றும் முழங்கும் இவர், இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியாகக் கருதப்படும் வன்னி பகுதியை தனது அடையாளமாக்கி, ஜெயராஜ் என்ற தனது இயற்பெயரை வன்னியரசு என்று மாற்றிக்கொண்டார். 

வெறும் பெயரோடு நிற்காமல், இலங்கைக்கு நேரில் சென்று, தமிழ் மக்கள் மீதான போர் கொடுமைகளை கண்டு பல முறை ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

போர் உச்சத்தில் இருந்த இலங்கையின் வடக்கு மாகாண பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும், அந்த மக்களையும் சந்தித்தார். 

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுடன் இவருக்கு நல்ல நட்பும் இருந்தது.

இதன் காரணமாகவே இவர் வெளிநாடு செல்லவும் சில ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

அதேவேளையில், விசிக-வின் வளர்ச்சியிலும் வன்னியரசுவின் பங்கு மிகப்பெரியது.

திருமாவளவனுடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றி திருமாவளவனின் நம்பிக்கைக்குரிய நபராகவும் திகழ்ந்து வருகிறார்.

கட்சியில் சாதாரண தொண்டராக தனது பணியைத் தொடங்கி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் களத்தில் சிறுத்தையாகப் போராடிய வன்னியரசுக்கு, கட்சியில் அவரின் உழைப்பு அங்கீகாரமாக 2021-ல் முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் வானூர் தொகுதியில் களமிறக்கப்பட்டார்.

அந்தத் தேர்தலில் விசிக தனிச் சின்னத்தில் 6 இடங்களில் போட்டியிட்டு 4-ல் வென்றபோதும், அந்த வெற்றியை விட வன்னியரசுவின் தோல்வி திருமாவளவனைப் பாதித்தது.

அதனாலேயே, இந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அவருக்கு சீட் வழங்கப்பட்டது.

திண்டிவனத்தில் போட்டியிட்ட வன்னியரசு சுமார் 700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல்முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தார்.

எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்கும்போது, "தந்தை பெரியார் வாழ்க, புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க" என தனது கொள்கைத் தலைவர்களின் பெயர்களை உச்சரித்த வன்னியரசு, அங்கிருந்த மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் தனியாளாக "வெல்க தமிழ் ஈழம்" என்று முழங்கினார்.

தற்போது தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம், "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு" என்ற விசிக-வின் சுமார் 30 வருட முழக்கமும் நிறைவேறியிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து இன்று சமூகநீதித்துறை அமைச்சாராகப் பொறுப்பேற்றிருக்கும் வன்னியரசுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நகரத்தார் சொத்து.. நெகிழ்ச்சியடைந்த நிர்வாகிகள் !
மதுரையில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நகரத்தார் சொத்து.. நெகிழ்ச்சியடைந்த நிர்வாகிகள் !
தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்.! அறிகுறிகள் என்ன.? பொது சுகாதாரத்துறை அலர்ட்
தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்.! அறிகுறிகள் என்ன.? பொது சுகாதாரத்துறை அலர்ட்
ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
குப்பை அல்ல... வளம்! ஆரோவில்லில் ஜெர்மன், இத்தாலி தொழில்நுட்பத்தில் அசத்தும் ‘எகோசர்வீஸ்
குப்பை அல்ல... வளம்! ஆரோவில்லில் ஜெர்மன், இத்தாலி தொழில்நுட்பத்தில் அசத்தும் ‘எகோசர்வீஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK To TVK : தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
Tenkasi: சைடிஷ் வாங்க லேட் ஆனதால் ஆத்திரம்.. இளைஞர் வெட்டிக்கொலை.. 3 சிறுவர்கள் கைது!
Tenkasi: சைடிஷ் வாங்க லேட் ஆனதால் ஆத்திரம்.. இளைஞர் வெட்டிக்கொலை.. 3 சிறுவர்கள் கைது!
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்.! அறிகுறிகள் என்ன.? பொது சுகாதாரத்துறை அலர்ட்
தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்.! அறிகுறிகள் என்ன.? பொது சுகாதாரத்துறை அலர்ட்
ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
Gold and silver rate today : ஓணம் பண்டிகையில் தங்கம் விலையில் ஜாக்பாட்டா.!! இன்று தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?
ஓணம் பண்டிகையில் தங்கம் விலையில் ஜாக்பாட்டா.!! இன்று தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Embed widget