மேலும் அறிய

போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?

"வெல்க தமிழ் ஈழம்" என்ற முழக்கத்தோடு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற வன்னி அரசு இன்று, விசிக-வின் 36 வருட அரசியல் பயணத்தில் முதல் அமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து இன்று மாநில சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் வன்னியரசு பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவைச் சேர்ந்த அயன்ரெட்டியார்பட்டி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் வன்னியரசு. இவரது தந்தை ஒரு கம்யூனிசவாதி.

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் தனது சிறுவயதிலேயே பல்வேறு சாதிய பாகுபாடுகளை எதிர்கொண்டார்.

மேலும், சிறுவயது முதலே அம்பேத்கர் மற்றும் பெரியாரிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அந்த கொள்கைகளை பின்பற்றி வளர்ந்தார்.

தமிழ் ஈழத்தின் மிகுந்த ஈடுபடுகொண்ட வன்னியரசு, விசிக-வில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழீழதுக்காகத் தொடர்ந்து குரல்கொடுக்கத் தொடங்கினார்.

குறிப்பாக, தமிழீழம் ஒன்றே அம்மக்களின் விடுதலைக்குத் தீர்வு என இன்றும் முழங்கும் இவர், இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியாகக் கருதப்படும் வன்னி பகுதியை தனது அடையாளமாக்கி, ஜெயராஜ் என்ற தனது இயற்பெயரை வன்னியரசு என்று மாற்றிக்கொண்டார். 

வெறும் பெயரோடு நிற்காமல், இலங்கைக்கு நேரில் சென்று, தமிழ் மக்கள் மீதான போர் கொடுமைகளை கண்டு பல முறை ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

போர் உச்சத்தில் இருந்த இலங்கையின் வடக்கு மாகாண பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும், அந்த மக்களையும் சந்தித்தார். 

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுடன் இவருக்கு நல்ல நட்பும் இருந்தது.

இதன் காரணமாகவே இவர் வெளிநாடு செல்லவும் சில ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

அதேவேளையில், விசிக-வின் வளர்ச்சியிலும் வன்னியரசுவின் பங்கு மிகப்பெரியது.

திருமாவளவனுடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றி திருமாவளவனின் நம்பிக்கைக்குரிய நபராகவும் திகழ்ந்து வருகிறார்.

கட்சியில் சாதாரண தொண்டராக தனது பணியைத் தொடங்கி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் களத்தில் சிறுத்தையாகப் போராடிய வன்னியரசுக்கு, கட்சியில் அவரின் உழைப்பு அங்கீகாரமாக 2021-ல் முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் வானூர் தொகுதியில் களமிறக்கப்பட்டார்.

அந்தத் தேர்தலில் விசிக தனிச் சின்னத்தில் 6 இடங்களில் போட்டியிட்டு 4-ல் வென்றபோதும், அந்த வெற்றியை விட வன்னியரசுவின் தோல்வி திருமாவளவனைப் பாதித்தது.

அதனாலேயே, இந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அவருக்கு சீட் வழங்கப்பட்டது.

திண்டிவனத்தில் போட்டியிட்ட வன்னியரசு சுமார் 700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல்முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தார்.

எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்கும்போது, "தந்தை பெரியார் வாழ்க, புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க" என தனது கொள்கைத் தலைவர்களின் பெயர்களை உச்சரித்த வன்னியரசு, அங்கிருந்த மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் தனியாளாக "வெல்க தமிழ் ஈழம்" என்று முழங்கினார்.

தற்போது தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம், "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு" என்ற விசிக-வின் சுமார் 30 வருட முழக்கமும் நிறைவேறியிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து இன்று சமூகநீதித்துறை அமைச்சாராகப் பொறுப்பேற்றிருக்கும் வன்னியரசுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

செய்திகள் வீடியோக்கள்

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அரசாங்க கஜானாவைக் காலி செய்யும் பகல் கொள்ளை; கனிம வள முறைகேட்டில் செயல்படும் டிரேடர்ஸ் மீது பாயுமா ஆக்ஷன்?
அரசாங்க கஜானாவைக் காலி செய்யும் பகல் கொள்ளை; கனிம வள முறைகேட்டில் செயல்படும் டிரேடர்ஸ் மீது பாயுமா ஆக்ஷன்?
Chennai Power Cut: சென்னையில ஜூன் 18-ம் தேதி(18.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
சென்னையில ஜூன் 18-ம் தேதி(18.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
Thiruchendur Temple : திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.! பக்தர்களுக்கு ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.! பக்தர்களுக்கு ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
"10 லட்ச ரூபாய்க்கு நீட் வினாத்தாள் கசிவா? மோசடி!" ஐஐடி சென்னை இயக்குநர் பகீர்!
Arunraj Vs Udhayanidhi: “சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேச அருகதை இல்லை“: உதயநிதியை விளாசிய அருண்ராஜ்
“சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேச அருகதை இல்லை“: உதயநிதியை விளாசிய அருண்ராஜ்
Thiruchendur Temple : திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.! பக்தர்களுக்கு ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.! பக்தர்களுக்கு ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
தூக்கியடித்த முதல்வர் விஜய்; நான் முதல்வன் திட்டம் மொத்தமாக மாற்றம்- நடந்தது என்ன?
தூக்கியடித்த முதல்வர் விஜய்; நான் முதல்வன் திட்டம் மொத்தமாக மாற்றம்- நடந்தது என்ன?
Chennai Power Cut: சென்னையில ஜூன் 18-ம் தேதி(18.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
சென்னையில ஜூன் 18-ம் தேதி(18.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
’’ஒரு ரூபாய்கூட லஞ்சம் வேணாம்; தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைங்க’’- அமைச்சர் ராஜ்மோகன் உருக்கம்!
’’ஒரு ரூபாய்கூட லஞ்சம் வேணாம்; தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைங்க’’- அமைச்சர் ராஜ்மோகன் உருக்கம்!
தலைகீழாக மாறப்போகுது நம்ம சென்னை! விஜய் சர்க்காரின் '3வது மாஸ்டர் பிளான்' மிரட்டல் அப்டேட்
தலைகீழாக மாறப்போகுது நம்ம சென்னை! விஜய் சர்க்காரின் '3வது மாஸ்டர் பிளான்' மிரட்டல் அப்டேட்
Embed widget