மேலும் அறிய

‘Poovai’ Jagan Moorthy | ”கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்” குவியும் புகார்கள்! பூவை ஜெகன் மூர்த்தி கைது?

புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை அவரை தேடிவரும் சூழலில், அவரால் பாதிக்கப்பட்ட பலர் போலீசாரிடம் புகார் அளித்து வருவதாகவும், புகார்களின் அடிப்படையில் பூவை ஜெகன் மூர்த்தி மீது மேலும் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து அவரை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவரது மகன் தனுஷ், தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து, அந்த பெண் வீட்டார் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் தந்தை வனராஜ், புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த பூவை ஜெகன் மூர்த்தியிடம் தன் பெண்ணை தனுஷிடமிருந்து மீட்டு தருமாறு கோரியுள்ளார். இதனையடுத்து போலீஸ் உயரதிகாரி ஒருவரின் உதவியுடன் பூவை ஜெகன் மூர்த்தி தன்னுடைய ஆட்களை அனுப்பி தனுஷினி தம்பியான 17 வயது சிறுவனை காரில் கடத்திச் சென்று வைத்துக்கொண்டு, அந்த பெண்ணை அவரது தந்தையுடன் அனுப்ப வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

காதல் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தனுஷின் தாய் திருவள்ளூர் எஸ்.பி.அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை, இதில் கே.வி.குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்திக்கு பங்கு இருப்பதை கண்டறிந்து அவரை விசாரிக்க முடிவு செய்தது. ஆனால், அவர் நேற்று தலைமறைவான நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் கைது செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட பலர் திருவள்ளூர் மாவட்டம் உள்பட பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும், அந்த புகார்களின் அடிப்படையில் பூவை ஜெகன் மூர்த்தி மீது மேலும் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து அவரை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ என்பதால் அவர் தரப்பால் பாதிக்கப்பட்டவர்கள், அவர் மீது புகார் அளிக்க பயந்து வந்த நிலையில், ஜெகன் மூர்திக்கு எதிரான காவல் துறையின் கைது நடவடிக்கை அவர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில்,  திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நில பிரச்னை, மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாகவும், அவருடைய ஆட்களும் அவரின் பெயரை சொல்லி இன்னும் சிலரும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும்”சொல்கின்றனர். ஆனால், ஜெகன் மூர்த்தி தரப்போ, அதிமுக கூட்டணியில் புதிய பாரதம் கட்சி அங்கம் வகிப்பதால், திமுக அரசு போலீசை வைத்து மிரட்டப் பார்ப்பதாகவும், பட்டியலின மக்களின் எழுச்சிக்காக பாடுபடும் அவருக்கு எதிராக சதி வலைபின்னப்பட்டு வருவதாகவும் கவலையுடன் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இதற்காக தான் அதிமுகவில் இருந்து வெளியேறி வருகின்றனர் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
இதற்காக தான் அதிமுகவில் இருந்து வெளியேறி வருகின்றனர் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
Nagapattinam power cut (30-05-2026): வேளாங்கண்ணியில் நாளை மின் தடை! நாகை மக்களும் அலர்ட்.. எத்தனை மணி நேர மின் தடை?
Nagapattinam power cut (30-05-2026): வேளாங்கண்ணியில் நாளை மின் தடை! நாகை மக்களும் அலர்ட்.. எத்தனை மணி நேர மின் தடை?
Dindigul power cut (30-05-2026): திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! - நாளை 8 மணி நேரம் மின்தடை
Dindigul power cut (30-05-2026): திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! - நாளை 8 மணி நேரம் மின்தடை
கண்ணீர் துடைத்த ஒற்றை வீடியோ! 30 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா.. விருதுநகரில் நெகிழ்ச்சி
கண்ணீர் துடைத்த ஒற்றை வீடியோ! 30 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா.. விருதுநகரில் நெகிழ்ச்சி

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget