Odisha young couple | நடுரோட்டில் சரமாரி தாக்குதல்! LOVER-க்காக உதைவாங்கிய பெண்! பதறவைக்கும் வீடியோ
பைக்கில் வந்து கொண்டிருந்த இளம் ஜோடியை திடீரென வழிமறித்த கும்பல் கம்பு வைத்து நடுநோட்டில் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரின் கிரி ரோடு பகுதியில் கும்பல் ஒன்று இளம் ஜோடியை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பதற வைத்துள்ளது. நடுரோட்டில் பொதுமக்களுக்கு மத்தியிலேயே 2 பேரையும் கடுமையாக தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்கின்றனர். அந்த வீடியோவில்,இளைஞர் ஒருவர் கீழே விழுந்து கிடக்க, அவருடைய காதலி அவர் மீது விழும் அடிகளை தடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக வந்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ‘தாக்கப்பட்ட நபர் மீது 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தாக்குதல் நடத்தியவர்களும், பாதிக்கப்பட்ட நபரும் ஒரே குழுவாக வேலை செய்து வந்தவர்கள். அவர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் வந்ததால் பழைய பகையின் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















