மேலும் அறிய

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி

மேற்கு வங்கத்தில் மம்தாவின் 15 வருட ஆட்சிக்கு முடிவுக்கட்டி முதல்முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் பாஜக தற்போது, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போல திரிணாமுல் காங்கிரஸையும் இரண்டாக உடைக்கும் "ஆபரேஷன் லோட்டஸ்" வேளையில் இறங்கியிருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகியிருக்கிறது.

1970-களில் தனது கல்லூரி பருவத்திலேயே காங்கிரஸில் இணைந்து தீவிரமாக பணியற்றிய மம்தா பானர்ஜி, 1998-ல் காங்கிரஸிலிருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை நிறுவினார்.

கட்சி ஆரம்பிக்கப்பட்ட 13-ஏ ஆண்டுகளில் திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் 34 வருட கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முடிவுகட்டி 2011-ல் முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது.

அதுவரையில் தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வந்த மம்தா, மாநிலத்தில் தனது கட்சி ஆட்சிக்கு வந்த அடுத்த கணமே மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மேற்கு வங்க முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அன்று முதல் கடந்த மே மாதம் வரை தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் மம்தா மட்டுமே அங்கு முதலமைச்சராகப் பதவியில் இருந்தார்.

ஆனால் தற்போது முடிந்த சட்டமன்றத் தேர்தலில், 2021-ல் மம்தா களமிறங்கிய தொகுதியில் அவரை வீழ்த்திய சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக, திரிணாமுல் காங்கிரஸின் 15 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது.

ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது, சந்தேஷ்காளி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் மற்றும் ஆதரவாளர்கள் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது போன்ற சம்பவங்கள் மாநில அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி, தேர்தலில் மம்தாவின் தோல்விக்கு முக்கிய காரணிகளாக அமைந்தது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும் பல்வேறு இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கின்றனர்.

கடந்த வாரம் கூட, தேர்தலுக்கு முன்பு கலவரத்தில் உயிரிழந்த தனது சொந்த கட்சி நிர்வாகியின் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்ற மம்தா மருமகனும், எம்.பி-யுமான அபிஷேக் பானர்ஜிக்கு உள்ளூர் மக்கள் தர்ம அடி கொடுத்து வெளியேற்றினர்.

ஆனால், பாஜக தான் இவ்வாறு மக்களைத் தூண்டிவிட்டதாக மம்தா குற்றம் சட்டி வருகிறார்.

இன்னொருபக்கம், தற்போது கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினர் மம்தாவுக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றனர்.

சமீபத்தில் மம்தா ஏற்பாடு செய்த கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், கட்சியிலுள்ள 80 எம்.எல்.ஏ-க்களில் சுமார் 60 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்ளவில்லை. இறுதியில் அந்தக் கூட்டத்தையே மம்தா ரத்து செய்தார்.

மேலும், கொல்கத்தாவில் மம்தா நடத்திய போராட்டத்தில் வெறும் 8 எம்.எல்.ஏக்களும், 29 எம்.பி-க்களில் வெறும் 6 எம்.பி-க்களும் மட்டுமே கலந்துகொண்டனர்.

இதுபோதாதென்று, சுமார் 50 எம்.எல்.ஏ-க்கள் கட்சியிலிருந்து விலகவுள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன.

இது சட்டமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் மூன்றில் இரண்டு பங்கை விட அதிகம்.

எனவே இவர்கள் விலகினால், கட்சியும் சின்னமும் மம்தாவை விட்டுப் போகும்.

மகாராஷ்டிராவில் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனாவில், ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் பாஜக கூட்டணி சேர்ந்து முதலமைச்சரானார். அதோடு கட்சியையும், சின்னத்தையும் உத்தவ் தாக்கரேவிடமிருந்து பறித்தார்.

அஜித் பவாரும் அதேபோலவே தேசியவாத காங்கிரஸை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்து துணை முதலமைச்சராகி, சரத் பவாரிடமிருந்து கட்சியையும், சின்னத்தையும் தன்வசப்படுத்தினர்.

அதேநிலை நிலை தற்போது தனக்கும் நேர்ந்துவிடுமோ என்று மம்தாவும் தற்போது அச்சத்துக்குள்ளாகியிருக்கிறார்.

அதனால்தான் மம்தா பானர்ஜி, "பாஜக எங்கள் கட்சியை உடைக்க முயற்சிக்கிறது. கட்சியில் சிலரை பணம் கொடுத்தும், சிலரை அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் மிரட்டியும் தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருகிறது" என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

இதுமட்டும் நிகழ்ந்தால், பாஜக-வின் ஆபரேஷன் லோட்டஸுக்கு பலியான கட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸும் இடம்பெறும். இதனால் தற்போது மேற்கு வங்க அரசியலே பரபரப்பில் இருக்கிறது.

செய்திகள் வீடியோக்கள்

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
வெள்ளைக்காளி தாயார் பரபரப்பு புகார்: இன்ஸ்டாகிராம் அவதூறால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறி!
வெள்ளைக்காளி தாயார் பரபரப்பு புகார்: இன்ஸ்டாகிராம் அவதூறால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறி!
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
செங்கல்பட்டில் மெகா வாய்ப்பு: 5,000+ காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
செங்கல்பட்டில் மெகா வாய்ப்பு: 5,000+ காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget