Rowdy Padappai Guna: சரணடைந்த படப்பை குணாவின் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!
Rowdy Padappai Guna: படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த மாதம் சரணடைந்தர். இதனையடுத்து படப்பை குணா நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். இதனிடையில் படப்பை குணா ஈடுடாமல் இருப்பேன் என்று எழுதிக் கொடுத்ததை மீறியதால், மூன்று நாட்கள் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து குற்றவழக்கு ஈடுபட்டு வந்த குணாவின் மீது காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















