மேலும் அறிய

Thanjavur: தஞ்சாவூரின் தனி அடையாளம்... அறிவு பொக்கிஷமாக திகழும் சரஸ்வதி மகால் நூலகம்

Thanjavur Saraswathi Mahal Library: சோழர்கள் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு இன்றைக்கும் மக்களுக்குத் தேவையான குறிப்புகளைக் காலம் கடந்தும் வழங்கி வருகிறது இந்த நூலகம்.

தஞ்சாவூர்: தஞ்சை என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது சரஸ்வதி மகால் நூலகம். தஞ்சாவூரின் தனி அடையாளம் என்று சொன்னாலும் மிகையில்லை.

சோழர்களின் கட்டடக்கலைக்கு பெரிய கோயிலும், அறிவுக் களஞ்சியத்துக்கு சரஸ்வதி மகால் நூலகமும் இன்றும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக உள்ளன. இதன் பெருமைக்கு உதாரணம் இங்குள்ள ஓலைச்சுவடிகள்தான். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, இந்தி என 49 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளன. 23,169 காகிதச் சுவடிகள், 1,352 கட்டுகளில் தேவநாகரி எழுத்துகளால் எழுதப்பட்ட 3 லட்சம் மராத்தி எழுத்தான மோடி எழுத்து ஆவணங்களும் உள்ளன.

அரிய வகை மூலிகைகள், மருத்துவம், ஆன்மிகம், ஜோதிடம் பற்றிய ஆச்சர்யமான குறிப்புகளும் உள்ளன. மருத்துவம் தொடர்பாகவும் சிகிச்சை தொடர்பாகவும் வியக்கவைக்கும் குறிப்புகள் இதில் அடங்கி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் அனுமதி பெற்று இங்கு வந்து ஓலைச்சுவடி மற்றும் நூல்களிலிருந்து குறிப்பெடுத்துச் செல்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஓலைச்சுவடிகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கும் முறை கடந்த சில வருடங்களாகவே நடந்து வருகிறது. இதேபோல், காகிதச் சுவடிகளும் ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப் பழமையான நூலகங்களில் ஒன்றாகவும் உலகில் முதன்மையானதாகவும் விளங்கி வருகிறது சரஸ்வதி மகால் நூலகம்.


Thanjavur: தஞ்சாவூரின் தனி அடையாளம்... அறிவு பொக்கிஷமாக திகழும் சரஸ்வதி மகால் நூலகம்

தஞ்சையில் இப்படி ஒரு அறிவுக்களஞ்சியம் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. சோழர்களால் சரசுவதி பண்டாரம், புத்தகப்பண்டாரம் என அழைக்கப்பட்டு வந்துள்ளது என தெரிய வருகிறது. இந்த நூலகத்தில் பணிபுரிந்தவர்கள், சரசுவதி பண்டாரிகள் என்றழைக்கப்பட்டனராம். கி.பி 1122-ம் ஆண்டு முதலே இந்த நூலகம் இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கிறது என்பதும் தஞ்சையின் பெருமையில் பதியப்பட்டுள்ள மற்றொரு வைரக்கல்தான்.

அதன்பிறகு ஆங்கிலேயேர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆகியோரது ஆட்சிக் காலங்களில் இந்த சரஸ்வதி மகால் நூலகம் பராமரிக்கப்பட்டு தற்போது பிரமாண்ட வளர்ச்சிகளை அடைந்துள்ளது. நூற்றாண்டுக்களை காலங்களைக் கடந்து பெரும் அறிவுப் பொக்கிஷமாக திகழ்கிறது. மராட்டிய மன்னரான இரண்டாம் சரபோஜி மன்னர், நூல்கள் மீது மிகுந்த ஆர்வம் வைத்திருந்தார். இதனால், நூலகத்தின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்ததுடன், நூல்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினார். இந்த நூலகம் உலகத்தின் பொக்கிஷம் எனப் பாராட்டப்படுகிறது.

மராட்டிய மன்னர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த நூலகத்தை ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில்,1918-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அரசுடைமையாக்கி, பொது நூலகமாக அறிவித்தனர். சோழர்கள் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு இன்றைக்கும் மக்களுக்குத் தேவையான குறிப்புகளைக் காலம் கடந்தும் வழங்கி வருகிறது இந்த நூலகம். பனை ஓலைச்சுவடிகள் இங்குள்ளது போல் வேறு எங்கும் அதிக அளவில் இல்லை. அறிவார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள வழிவகுக்கும் இந்த சரஸ்வதி மகால் நூலகத்தின் பெருமை தஞ்சைக்கு கிடைத்த மாபெரும் கிரீடம் என்றால் மிகையில்லை. இதை அறிவுக்களஞ்சியத்தின் பெட்டகம் என்று கூறுவதிலும் தவறில்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
நேருக்கு நேர்… விஜய்யுடன் மோதும் உதயநிதி: ஜனநாயகன் vs பராசக்தி- அரசியல் ஆயுதமான சினிமா!
நேருக்கு நேர்… விஜய்யுடன் மோதும் உதயநிதி: ஜனநாயகன் vs பராசக்தி- அரசியல் ஆயுதமான சினிமா!
Watch Video: மிரட்டும் ட்ரம்ப்.. மாஸ் காட்டிய ஈரான்.. பூமிக்கடியில் பிரமாண்ட ஏவுகணை நகரம்.. வீடியோ பாருங்க...
மிரட்டும் ட்ரம்ப்.. மாஸ் காட்டிய ஈரான்.. பூமிக்கடியில் பிரமாண்ட ஏவுகணை நகரம்.. வீடியோ பாருங்க...
Annamalai to Delhi: டீல் ஓகே வா.? டெல்லி சென்ற அண்ணாமலை.. தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு...
டீல் ஓகே வா.? டெல்லி சென்ற அண்ணாமலை.. தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு...
CM Stalin: கிளாஸ் எடுக்கிறீங்களா? டார்க் காமெடி செய்யும் யோகி..! கலாய்த்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: கிளாஸ் எடுக்கிறீங்களா? டார்க் காமெடி செய்யும் யோகி..! கலாய்த்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget