கொடைக்கானலில் பார்க்க வேண்டிய இடங்கள் இவ்வளவு இருக்கா? அது என்னென்ன தெரிஞ்சிக்கோங்க
பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சற்று விடுபட்டு, குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களுக்கு சென்று வருவது மனதிற்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
மலைகளின் இளவரசி என அழைக்கக்கூடிய கொடைக்கானல் எப்போதுமே, சுற்றுலாப் பயணிகளுக்கு பார்க்க சலிக்காத இடமாக இருந்து வருகிறது. கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற, எண்ணம் அனைவருக்கும் தோன்றாமல் இருக்காது. பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சற்று விடுபட்டு, குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களுக்கு சென்று வருவது மனதிற்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா மையமாக விளங்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப் பகுதியில், புதிய சுற்றுலா தலங்களை அடையாளம் கண்டு மேம்படுத்த சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் கொடைக்கானலை தேடி வருகின்றனர். குறிப்பாக கோடை சீசனில் மக்கள் கூட்டம் இங்கு அலைமோதும். நட்சத்திர ஏரி, குணா குகை போன்ற சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகம் இருக்கும். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் சில பிரசித்தி பெற்ற இடங்களையே மட்டுமே பார்வையிட்டு திரும்புகின்றனர்.
இதனால், குறிப்பாக கோடை சீசனில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் கூட்ட நெரிசலும், அடிப்படை வசதிகள் இல்லாமை காரணமாக பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கான மாற்று முயற்சியாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து, புதிய சுற்றுலா தலங்களை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தின. அதன் ஒரு பகுதியாக, தாண்டிக்குடி கீழ்மலை பகுதியில் உள்ள தடியன்குடிசை நறுமணச் சுற்றுலா தலம் உருவாக்கப்பட்டது. இங்கு பயணிகளுக்கான தங்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
அத்துடன், ஆன்மிக சுற்றுலா தலங்களாக தாண்டிக்குடி பாலமுருகன் கோவில், வில்பட்டி வெற்றிவேலப்பர் மற்றும் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில்கள் அடையாளம் காணப்பட்டன. மேலும், தாண்டிக்குடி புல்லாவெளி அருவி, கிளாவரை புலவிச்சாறு அருவி மற்றும் பேத்துப்பாறை ஐந்தருவி ஆகிய அருவிகளும் சேர்க்கப்பட்டன. மலைப் பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்கள், கிராமிய வாழ்க்கை முறைகள் குறித்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டன. எனினும், இத்தலங்கள் தொடர்பான தகவல்கள் பெரும்பாலும் செவி வழியாக மட்டுமே பரவி வருகின்றன. இப்படி அறிந்து சில பயணிகள் அங்கு சென்று பார்வையிடுகின்றனர். இந்த சுற்றுலா தலங்கள் பிரபலமடையவில்லை. இதனால், அதிகப்படியான கூட்ட நெரிசலுக்கு மாற்றாக புதிய இடங்கள் மேம்படுத்தப்பட்டால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்வர்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளாக வனத்துறையின் கீழ் உள்ள கரடிச்சோலை மற்றும் மயிலாடும்பாறை போன்ற இயற்கை அழகு மிக்க பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இவை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பது பல சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது நட்சத்திர ஏரி, தூண் பாறை, குணா குகை, மோயர் பாயிண்ட், பைன் காடுகள், கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைகானலில் விடுதிகள் நிரம்பின. கோடை சீசனுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

