மேலும் அறிய

இந்தியாவின் புதிய வாட்ஸப் அதிகாரி நியமனம்! - வாட்ஸப் பேமண்டை மேம்படுத்த புதிய திட்டம் !

வாட்ஸப் பேமண்ட் மூலம் பயனர்களின்  அனுபவத்தை மேம்படுத்தவும், பேமண்ட் வணிகத்தை வளர்க்கவும் மனேஷ் மகாத்மே உறுதுணையாக இருப்பார் என வாட்ஸப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸப் நிறுவனம் தனது புதிய நிர்வாகியாக முன்னாள் அமேசான் நிர்வாகியை தேர்வு செய்துள்ளது.

பிரபல வாட்ஸப் நிறுவனம் இந்தியாவில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்களை கொண்டு செயல்படுகிறது. அவ்வபோது தனது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் வாட்ஸப் ,  கடந்த 2018 ஆம் ஆண்டே வாட்ஸப் பேமண்ட் குறித்த சோதனையை தொடங்கிவிட்டது. ஆனால் கிட்டத்தட்ட 20 மில்லியன் பயனாளர்களுக்கு மட்டுமே ஆரம்பத்தில்  வாட்ஸ்ப் பேமண்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அனைத்து பயனாளருக்குமான  வாட்ஸப் பேமண்ட் குறித்த அனுமதியை வழங்குவதற்கு இந்திய அரசு தாமதித்து வந்த நிலையில். பலமுறை  பரிசீலனை செய்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இதற்கான ஒப்புதலை வழங்கியது. இந்த வாட்ஸப் பேமண்ட் சேவையில், பயனாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளை இணைத்து, ஒருவருக்கு ஒருவர் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். அதேபோல வாட்சப் வர்த்தக கணக்கின் மூலம் பொருட்களை விற்று நேரடியாக வாட்ஸப் மூலம் பணத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தியாவின் புதிய வாட்ஸப் அதிகாரி நியமனம்! - வாட்ஸப் பேமண்டை மேம்படுத்த புதிய திட்டம் !

தற்பொழுது வாட்ஸப் பேமண்ட் சேவையை மேம்படுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ள அந்த நிறுவனம், புதிய நிர்வாகியாக  மனேஷ் மகாத்மே என்பவரை நியமித்துள்ளது. இவர் வாட்ஸப் பேமண்டின் தலைமை அதிகாரியாக  தேர்வு செய்யப்பட்டுள்ள மனேஷ் , முன்னதாக அமேஷான் நிறுவனத்தின் மூத்த அதிகாரியாக இருந்தார். இவர் அங்கு  அமேசான் பே நிறுவனத்திற்கான தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுக்களை வழிநடத்தியுள்ளார்.முன்னதாக சிட்டி குரூப் மற்றும் ஏர்டெல் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.  இவரை வரவேற்று  வாட்ஸப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “ இனி வாட்ஸப் பேமண்ட் மூலம் பயனர்களின்  அனுபவத்தை மேம்படுத்தவும், பேமண்ட் வணிகத்தை வளர்க்கவும் மனேஷ் மகாத்மே உறுதுணையாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதிய வாட்ஸப் அதிகாரி நியமனம்! - வாட்ஸப் பேமண்டை மேம்படுத்த புதிய திட்டம் !

கடந்த ஆண்டு வாட்ஸப் நிறுவனம், முகேஷ் அம்பானிக்கு சொந்தமான  பிரபல ஜியோ நிறுவனத்தின் பேமண்ட் தளத்தில் தங்களை இணைத்துக்கொள்வதற்காக கிட்டத்தட்ட  கிட்டத்தட்ட ரூ. 42,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் ஒன்றினை  ஏற்படுத்தியது.  முன்னதாக ஓய்வூதியம் மற்றும் காப்பீடு போன்ற நிதி சேவைகளை வழங்கும் முயற்சியிலும் வாட்ஸப் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டே வாட்ஸப் இந்திய தலைவர்  அபிஜித் போஸ் இதற்காக வங்கிகளுடனான தனது கூட்டாட்சியை விரிவுபடுத்தும் முயற்சியில் தங்கள் நிறுவனம் இறங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் தற்பொழுது பேடிஎம், கூகுள் பே, வால்மார்ட் நிறுவனத்தின் ஃபோன்பே, அமேசான் பே ஆகியவை ஏற்கெனவே வலிமையான பேமண்ட் சேவைகளை வழங்கி வருகின்றன. ஏறக்குறைய 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த பேமெண்ட் சர்வீஸ் ஆப்ஸ்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget