மேலும் அறிய

`புதிய ஐ.டி சட்டம் தனியுரிமைக்கு எதிரானது!’ - இந்திய அரசை எதிர்க்கும் வாட்சாப் நிறுவனம்!

வாட்சாப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில் காத்கார்ட் இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021 வாட்சாப் வழங்கும் தனியுரிமையில் தலையிடுவதாகக் கூறியுள்ளார்.

வாட்சாப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில் காத்கார்ட் இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021 வாட்சாப் வழங்கும் தனியுரிமையில் தலையிடுவதாகக் கூறியுள்ளார்.

சமீபத்தில் The Verge என்ற தொழில்நுட்ப இதழுக்குப் பேட்டியளித்துள்ள வில் காத்கார்ட், இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தால், வாட்சாப் வழங்கும் பாதுகாப்பான end-to-end encryption அம்சத்திற்குச் சிக்கல் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். `இந்தச் சட்டத்தால் புதிய வடிவம் ஒன்றை உருவாக்குகிறது. உதாரணமாக, அரசுத் தரப்பில் யாராவது எங்களிடம் வந்து `XYZ' என்று பரப்பப்படும் செய்திகளில், முதன்முதலாக யார் `XYZ' என்று சொன்னார்கள் என்று கேட்டால் அது தனியுரிமையைப் பாதிக்கும் விவகாரம். இதனால் end-to-end encryption அம்சம் அளிக்கும் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது’ என்று வில் காத்கார்ட் கூறியுள்ளார். 

Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021 என்று அழைக்கப்படும் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ள வாட்சாப் நிறுவனம், பயனாளர்களின் தனியுரிமை என்பது தங்களின் டி.என்.ஏ எனவும், மெசேஜ் செயலிகளிடம் சாட்களைக் கண்காணிக்க உத்தரவிடுவது மக்களின் தனியுரிமையில் தலையிடும் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது.

`புதிய ஐ.டி சட்டம் தனியுரிமைக்கு எதிரானது!’ - இந்திய அரசை எதிர்க்கும் வாட்சாப் நிறுவனம்!

கடந்த மே 26 அன்று, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள வாட்சாப் நிறுவனம், பயனாளர்களின் மெசேஜ்களைக் கண்காணிக்க உத்தரவிடுவது என்பது, வாட்சாப்பில் அனுப்பப்படும் ஒவ்வொரு மெசேஜின் கைரேகையையும் சோதிப்பதற்கு இணையானது எனவும் கூறியுள்ளது. 

வாட்சாப் நிறுவனத்தின் இந்தச் சட்ட நடவடிக்கை அரசியல் அடிப்படையிலானதா எனவும், இது இந்தியாவுக்கு மட்டும் பொருந்த கூடியதா எனவும் கேட்கப்பட்ட போது, வில் காத்கார்ட், `இதில் அரசியல் அம்சங்களும் இருக்கின்றன; தொழில்நுட்பக் காரணங்களும் இருக்கின்றன. அவர்கள் எழுதியிருக்கும் சட்டத்திலும், அவர்கள் கூற வருவதிலும், இந்தச் சட்டம் இந்தியாவில் வாழும் மக்களைக் கண்காணிப்பதற்கு மட்டும் என்பது தெரிகிறது. எனினும், இதன் பின்னணியில் பெரிய அரசியல் இருக்கிறது’ என்று பதிலளித்துள்ளார்.

`பல நாடுகள் இந்த வழிமுறையைப் பின்பற்றி, கண்காணிப்பைத் தொடங்கினால், வெவ்வேறு நாடுகளும் இதனைத் தொடர்ந்து செய்யத் தொடங்குவர்’ எனவும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் காத்கார்ட்.

`புதிய ஐ.டி சட்டம் தனியுரிமைக்கு எதிரானது!’ - இந்திய அரசை எதிர்க்கும் வாட்சாப் நிறுவனம்!
வில் காத்கார்ட்

 

கடந்த வாரம் வெளியான தகவல் ஒன்றின்படி, இந்திய அரசு மெசேஜ்களின் தொடங்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருப்பதாகவும், வாட்சாப் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் தங்கள் செயலிகளில் மாற்றங்களை ஏற்படுத்துமாறும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காக அரசுப் பாதுகாப்பு நிறுவனங்கள் உதவி கேட்டால், மெசேஜ்கள் தொடங்கும் இடங்களின் விவரங்களை அளிக்கத் தயாராக இருக்குமாறும் கூறியுள்ளது எனத் தெரிய வந்துள்ளது. 

End-to-end encryption அம்சத்திற்கும், மெசேஜ்களின் தோற்றத்தைக் கண்டுபிடிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ள இந்திய அரசு, `மெசேஜ்களின் தோற்றத்தைக் கண்டுபிடிப்பதன் மூலம், நாட்டில் தேசப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும்’ எனவும் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget