உஷார்! இனி UPI-யில் பணம் அனுப்பினால் உடனடியாகப் போய் சேராது - ஏன் தெரியுமா?
டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், 10,000 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் தனிநபர் இடையிலான பணப் பரிமாற்றங்களுக்கு ஒரு மணிநேரம் வரை காலதாமதத்தை ஏற்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.

யுபிஐ பணவரித்தனையில் மளிகைப் பொருட்கள் வாங்குவது முதல் நண்பர்களுடன் பில் தொகையைப் பகிர்ந்து கொள்வது வரை அன்றாட வாழ்க்கையில் பணப் பரிமாற்றம் செய்யும் முறையையே மாற்றியமைத்துள்ளது. ஆனால், யுபிஐ-ன் இந்த உடனடி பணப்பரிமாற்றத்தில் சில முக்கிய மாற்றங்கள்
டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், 10,000 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் தனிநபர் இடையிலான (P2P) பணப் பரிமாற்றங்களுக்கு ஒரு மணிநேரம் வரை காலதாமதத்தை ஏற்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது விவாத அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
பணபரிவர்த்தனை தாமதமாகும்?
இந்தத் திட்டத்தின்படி, ஒரு நபர் மற்றொரு நபருக்கு யுபிஐ மூலம் 10,000 ரூபாய்க்கும் அதிகமான தொகையை அனுப்பினால், அந்தத் தொகை உடனடியாக அனுப்புநரின் கணக்கிலிருந்து கழிக்கப்படும். இருப்பினும், அந்தப் பணம் ஒரு மணிநேரத்திற்குப் பிறகுதான் பெறுநரின் கணக்கைச் சென்றடையும். இந்த ஒரு மணிநேர இடைவெளியில், ஏதேனும் தவறு இருப்பதாக உணர்ந்தால் பணத்தை அனுப்பியவர் அந்தப் பரிமாற்றத்தை ரத்து செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படும்.
இந்த கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி "கோல்டன் ஹவர்" (Golden Hour) என்று குறிப்பிடுகிறது. இதன் மூலம் பணத்தை அனுப்பியவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவும், ஏதேனும் மோசடி நடந்திருப்பதாகச் சந்தேகித்தால் பணத்தைத் தடுத்து நிறுத்தவும் கால அவகாசம் கிடைக்கும்.
இந்த விதிமுறையானது தனிநபர் இடையிலான (P2P) பணப் பரிமாற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. கடைகளில் கியூஆர் (QR) கோடு ஸ்கேன் செய்து வணிகர்களுக்குச் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது. மேலும், ஆட்டோ-டெபிட் மற்றும் சந்தா அடிப்படையிலான (Subscription) பேமெண்ட்கள் எந்த மாற்றமும் இன்றி வழக்கம்போலவே செயல்படும்.
இந்த மாற்றம் ஏன்?
இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனை சூழலில் மோசடிகள் பெரும் கவலையாக உருவெடுத்துள்ளன. பெரும்பாலான மோசடி வழக்குகளில், பணம் சில நிமிடங்களிலேயே பல கணக்குகளுக்கு மாற்றப்பட்டு விரைவாக ரொக்கமாக எடுக்கப்படுகிறது. இதனால் அந்தப் பணத்தை மீட்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிறது.
இந்தக் காலதாமதத்தைக் கொண்டு வருவதன் மூலம், ஒரு சிறிய இடைவெளியை உருவாக்கி, மோசடியான பரிமாற்றங்களை அடையாளம் கண்டு பணம் தவறான நபர்களின் கைக்குச் செல்வதற்கு முன்பே அதைத் தடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது. இந்தப் பரிந்துரை தற்போது விவாதக் கட்டத்திலேயே உள்ளது, இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ட்ரெண்டிங் செய்திகள்























