Twiiter Blue Tick : கோல்டு.. க்ரே.. ப்ளூ டிக் போன்று புதிதாக ட்விட்டரில் மாற்றத்தை கொண்டுவரும் மஸ்க்!
அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் புளூ டிக் போன்று கோல்டு, கிரே வண்ணங்களிலும் டிக் மார்க்கை அறிமுகப்படுத்த டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்தார்.

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் புளூ டிக் போன்று கோல்டு, கிரே வண்ணங்களிலும் டிக் மார்க்கை அறிமுகப்படுத்த டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "கோல் டிக் நிறுவனங்களுக்கும், கிரே டிக் அரசுகளுக்கும், புளூ டிக் தனிநபர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதுபோன்று செய்வது மனதுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துகிறது தான். இருந்தாலும் இதெல்லாம் அவசியம் ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "அனைத்து சோதனைகளும் மேனுவலாக சரி பார்க்கப்படும். தனிநபர்கள், ஒரு சிறிய லோகோவை கூட அவர்களுடைய நிறுவனத்தை பிரதிபலிக்கும் வகையில் தனியாக வைத்துக் கொள்ளலாம்.
முன்னதாக, ட்விட்டரைக் கையகப்படுத்திய பிறகு நாளொரு நடவடிக்கையும் பொழுதொரு ட்வீட்டுமாக அமர்க்களப்படுத்தி வருகிறார் எலான் மஸ்க். அந்த வரிசையில் அவர் சில தினங்களுக்கு முன் செய்துள்ள ட்வீட் ஒன்று மேலும் பல விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
“ட்விட்டர் இந்த நேரத்துக்கு இறந்திருக்க வேண்டும் இல்லையா?.. ஒருவேளை நாம் சொர்க்கத்துக்கோ அல்லது நரகத்திலோ இருக்கக் கூடும்” என்று அவர் ட்வீட் செய்திருந்தார். அவரது ட்விட்கள் எப்போது புரியாத புதிர் ரகமாகவே இருக்கும் நிலையில் அவர் தற்போது எதைக் குறிப்பிட்டு இவ்வாறு ட்வீட் செய்துள்ளார் என மக்கள் விவாதித்து வருகின்றனர்.
நிறுவனத்தைக் கையகப்படுத்திய பிறகு அவர் பணிநீக்கம்,ப்ளூ டிக்குகளுக்கு 8 டாலர் கட்டணம் என அடுத்தடுத்த அதிரடிகளைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் நிறுவனத்தின் பிரான்ஸ் நாட்டுத் தலைவர் டேமியன் வியல் பதவி விலகினார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாகவே உறுதிப்படுத்தியுள்ளார்.
7 ஆண்டுகளாக ட்விட்டரில் வேலை பார்த்த அவர் தற்போது, இது முடிந்துவிட்டது என்று ட்வீட் செய்துவிட்டு பதவி விலகியுள்ளார். அதேபோல் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியிலும் அவர் தனது விலகலை உறுதி செய்துள்ளார்.
இருப்பினும் தன் பதவி விலகலுக்கு இன்ன விஷயம் தான் காரணம் என்றெதுவும் அவர் சுட்டிக் காட்டவில்லை. அதேபோல் பிரான்ஸில் ட்விட்டர் நிறுவனத்தின் சார்பில் எத்தனை ஊழியர்கள் இருந்தனர். எலான் மஸ்க் உரிமை ஏற்புக்கு முன்னர் எத்தனை பேர் இறந்தனர். அவர் வருகைக்கு முன்னர் ஊழியர்களின் எண்ணிக்கை என்னவென்றெல்லாம் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
உலகில் மிகப்பெரும் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.
இந்நிலையில்தான் சமீபத்தில் ட்விட்டரில் கருத்து சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது என கூறியிருந்தார். அதோடு ட்விட்டர் நிறுவன பங்குகளை வாங்கினார். அதன் பங்குகளை வாங்கியதையடுத்து அவர் அந்த நிறுவனத்தின் ஒரு பங்குதாரராக உள் நுழைந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்க்கிற்கும் போடப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி தன்வசப்படுத்தினார்.
Before You Go
Gali Madhavi Latha : 1178 அடி.. காஷ்மீரின் அதிசயம்.. உலகை அலறவிடும் இந்திய பெண்! யார் இந்த மாதவி ?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















