மேலும் அறிய

Airtel | மீண்டும் மீண்டுமா? கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் ப்ளானில் ஏர்டெல்! ஷாக்கில் வாடிக்கையாளர்கள்!

பாரதி ஏர்டெல் நிறுவனம் இன்று மூன்றாம் காலாண்டு செயல்திறன் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் விலை உயர்வு, கூகுள் நிறுவனத்தின் முதலீடு முதலான காரணிகளால் அதிகளவில் லாபம் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் இன்று மூன்றாம் காலாண்டு செயல்திறன் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் விலை உயர்வு, கூகுள் நிறுவனத்தின் முதலீடு முதலான காரணிகளால் இந்தக் காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் அதிகளவில் லாபம் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த காலாண்டில் நிகழ்ந்த வியாபாரத்தை முன்வைத்து, மீண்டும் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஏர்டெல் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் அதிகரிக்கப்படாவிட்டாலும், இந்த ஆண்டிலேயே ஏர்டெல் நிறுவனம் மீண்டும் கட்டண உயர்வை அமல்படுத்தும் எனக் கூறப்படுகிறது. 

சராசரியாக ஒரு வாடிக்கையாளரின் மூலமாக பெரும் வருவாயை இந்த 2022ஆம் ஆண்டு முடிவதற்குள் 200 ரூபாயாக உயர்த்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஏர்டெல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Airtel | மீண்டும் மீண்டுமா? கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் ப்ளானில் ஏர்டெல்! ஷாக்கில் வாடிக்கையாளர்கள்!

தேசிய ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகளின் விலை சுமார் 1..5 சதவிகிதம் அதிகரித்து, பங்கு ஒன்றிற்கு சுமார் 719 ரூபாய் விலையாக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட காலாண்டு அறிக்கையில், மொத்த லாபத்தில் சுமார் 3 சதவிகித இழப்பைப் பதிவு செய்திருந்தது பாரதி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்போதைய காலாண்டின் போது, சராசரியாக ஒரு வாடிக்கையாளரின் மூலமாக பெரும் வருவாய், 163 ரூபாய் எனக் கூறப்பட்டிருந்தது. 

கடன் பாதுகாப்பு, பாண்ட் விநியோகம் முதலானவை மூலமாக 7500 கோடி ரூபாய் கடனாகப் பெறுவதற்கும் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

மேலும், ஏர்டெல் நிறுவனம் கட்டண உயர்வு காரணமாகப் பெற்றுள்ள லாபம் அதிகரித்துள்ளதாகவும், ஏர்டெல் நிறுவனம் அடுத்து புதிய தயாரிப்புகளைப் பிரபலப்படுத்துவதின் மீது கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2250 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளதாகவும் ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.

Airtel | மீண்டும் மீண்டுமா? கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் ப்ளானில் ஏர்டெல்! ஷாக்கில் வாடிக்கையாளர்கள்!

ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கோபால் விட்டல் வெளியிட்ட வருவாய்க் குறிப்பில், `மாற்றப்பட்ட செல்ஃபோன் சேவை கட்டணங்களின் மொத்த விளைவும் நான்காவது காலாண்டின் போது முழுமையாகத் தெரிய வரும். எங்கள் இருப்புநிலை சரியாக இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் வாங்குவதற்காக அரசிடம் பெற்ற கடனையும் தற்போது படிப்படியாக செலுத்தி வட்டியின் சுமையைக் குறைத்து வருகிறோம்’ எனக் கூறியுள்ளார். 

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியில் ஏர்டெல் நிறுவனம் முன்னணியில் நிற்பதற்குப் பலமான சான்றாக கூகுள் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட முதலீடு இருப்பதாகவும் கோபால் விட்டல் கூறியுள்ளார். 5G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிர்ணயிக்கப்பட்டு விலைகள் சுட்டிக் காட்டியுள்ள ஏர்டெல் நிறுவனம் இந்த விலை சரியானதாக இருக்க வேண்டும் எனவும், அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளை வரவேற்பதாகவும், மேலும் அவை விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Premalatha : ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு சட்டம் போல் எதிர்கட்சிகளை முடக்கும் விஜய் அரசு.! இறங்கி அடித்த பிரேமலதா
ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு சட்டம் போல் எதிர்கட்சிகளை முடக்கும் விஜய் அரசு.! இறங்கி அடித்த பிரேமலதா
Embed widget