மேலும் அறிய

Wimbledon 2022: விம்பிள்டன் கலப்பு இரட்டையர் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்ற சானியா மிர்சா !

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-பேவிக் உடன் களமிறங்கியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் முக்கியமான ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா பங்கேற்றுள்ளார். இவர் குரேஷியா நாட்டைச் சேர்ந்த மேட் பேவிக் உடன் இணைந்து கலப்பு இரட்டையர் போட்டியில் பங்கேற்றுள்ளார். சானியா-பேவிக் ஜோடி காலிறுதிச் சுற்று போட்டியில் கேப்ரியலா-ஜான் பியர்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. 

இந்தப் போட்டியில் முதல் செட்டில் சானியா-பேவிக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் சானியா-பேவிஜ் ஜோடி முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றது. அடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் கேப்ரியலா-ஜான் பியர்ஸ் இணை சிறப்பாக செயல்பட்டு 6-3 என்ற கணக்கில் வென்றது. இரு ஜோடிகளும் தலா ஒரு செட் வென்று இருந்ததால் மூன்றாவது செட்டில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் அந்த செட் விறுவிறுப்பாக அமைந்தது. 

மூன்றாவது செட்டில் சானியா-பேவிக் மற்றும் கேப்ரியலா-ஜான்பியர்ஸ் ஜோடி மாறி மாறி கேம்களை வென்று வந்தனர். ஒரு கட்டத்தில் இரு ஜோடிகளும் 5-5 என்று சமமாக இருந்தனர். இறுதியில் சானியா-பேவிக் ஜோடி 7-5 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை வென்றது. அத்துடன் 6-4,3-6,7-5 என்ற கணக்கில் போட்டியை வென்றது அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

 

இதன்மூலம் முதல் முறையாக விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பாக இவர் விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் 2011,2013 மற்றும் 2015 ஆண்டுகளில் காலிறுதி சுற்று வரை முன்னேறியிருந்தார். கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மகேஷ் பூபதி உடன் இணைந்து 2009 ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் 2012 பிரஞ்சு ஓபனை வென்றுள்ளார். அதன்பின்னர் 2014ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை ப்ரூனோ சார்ஸ் உடன் இணைந்து வென்று அசத்தியிருந்தார். தற்போது வரை சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். விம்பிளடன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் 4 கிராண்ட்ஸ்லாம் கலப்பு இரட்டையர் பட்டத்தையும் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைப்பார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget