மேலும் அறிய

WTC Final: ‛வந்துட்டோம்ன்னு சொல்லு’ - இங்கிலாந்தில் கெத்தா இறங்கிய இந்திய அணி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறும் சவுதாம்ப்டன் மைதானத்தின் ஹில்டன் ஏஜியஸ் பவுல் ஹோட்டலில் இந்திய அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. ஜூன் 18ம் தேதி இந்திய அணி நியூசிலாந்து அணியை சவுதாம்ப்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்திய ஆடவர் அணியுடன் இம்முறை இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்து பயணம் செய்துள்ளனர், ஜூன் 16ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியில் அவர்கள் பங்கேற்கின்றனர்.

முன்னதாக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் மும்பையில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அதன் பிறகு கடந்த ஜூன் 2ம் தேதி மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் இங்கிலாந்து வந்தடைந்துள்ளனர்.

இங்கிலாந்து சென்றடைந்துள்ள இந்திய அணி வீரர் கே.எல் ராகுல், வந்திறங்கி விட்டோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இருவருமே, இறுதி போட்டி நடைபெறும் சவுதாம்ப்டன் மைதானத்தின் ஹில்டன் ஏஜியஸ் பவுல் ஹோட்டலில் தங்கியுள்ளனர். அங்கு மீண்டும் சிறிது காலம் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும், அதன் பிறகே இந்திய அணி வீரர்கள் பயிற்சியை துவங்க உள்ளனர்.

இந்திய அணி வீரர்கள் தங்கியுள்ள ஹில்டன் ஏஜியஸ் பவுல் ஹோட்டலில் இருந்து மைதானத்தின் அற்புதமான பார்வையை காண முடியும். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ள ரிதிமான் சாஹா "நாங்கள் தங்கியுள்ள அறையில் இருந்து காணும் காட்சி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்றுள்ளார்.

மேலும் அறிய :ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் : அடுத்தது என்ன ? பிசிசிஐ தீவிரம்!

இந்திய அணி இம்முறை 20 வீரர்கள் அடங்கிய மிக பெரிய அணியுடன் இங்கிலாந்து சென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நிறைவடைந்தவுடன், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. ஆகஸ்ட் 4ம் தேதி இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்குகிறது. செப்டம்பர் 14ம் தேதியுடன் இந்த டெஸ்ட் தொடர் நிறைவடையும் நிலையில், அங்கிருந்து புறப்படும் இந்திய அணி வீரர்கள் நேரடியாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபாய் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Embed widget