மேலும் அறிய

தேசிய அளவிலான பேண்டி விளையாட்டு: தமிழகத்திற்கு முதலிடம் - காஞ்சிபுரம் வீரர்கள் 20 பதக்கங்களை வென்று சாதனை

"தேசிய அளவில் நடைபெற்ற பேண்டி போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து சாதித்துள்ளது."

கோவாவில் நடைபெற்ற 8-வது இந்திய அளவிலான பேண்டி (Bandy) விளையாட்டுப் போட்டியில், தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய காஞ்சிபுரம் மாவட்ட வீரர்களுக்கு நகரில் உற்சாக வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

கோவாவில் நடந்த விறுவிறுப்பான போட்டிகள்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவாவில் 8-வது ஆண்டு தேசிய பேண்டி விளையாட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்தத் தொடரில் ஹரியானா, தெலுங்கானா, குஜராத், பஞ்சாப் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பல்வேறு வயதுப் பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில், மாநில அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

20 பதக்கங்களை அள்ளிய காஞ்சி ஸ்கேட்டிங் அகாடமி

தமிழகத்தின் சார்பாக இந்தப் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த காஞ்சி ஸ்கேட்டிங் அகாடமி வீரர்கள் பெருமளவில் பங்கேற்றனர். ஆண் மற்றும் பெண் என இருபாலரும் தங்களது அபாரமான திறமையை வெளிப்படுத்தி, தமிழக அணி முதலிடம் பிடிக்க உறுதுணையாக இருந்தனர். தனிப்பட்ட சாதனையாக காஞ்சிபுரம் வீரர்கள் 15 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் (சில்வர்) என மொத்தம் 20 பதக்கங்களை வென்று குவித்து, பட்டு நகரமான காஞ்சிபுரத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

உற்சாக வரவேற்பு மற்றும் பாராட்டு விழா

வெற்றி வாகை சூடி தாயகம் திரும்பிய வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக, காஞ்சி ஸ்கேட்டிங் அகாடமி வளாகத்தில் சிறப்பான பாராட்டு விழா நடைபெற்றது. அகாடமி நிறுவனர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ரோட்டரி சங்க மூத்த நிர்வாகி முருகேசன், அகாடமி தலைவர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பயிற்சியாளர்கள் தமிழ், யுகேஷ் மற்றும் வீரர்களின் பெற்றோர்கள் முன்னிலையில், வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

விளையாட்டு நகரமாக மாறும் காஞ்சிபுரம்

விழாவில் பேசிய முக்கியப் பிரமுகர்கள், காஞ்சிபுரம் ஏற்கனவே 'பட்டு நகரம்' மற்றும் 'கோயில் நகரம்' என்று உலகப்புகழ் பெற்றுள்ள நிலையில், தற்போது வீரர்களின் தொடர் வெற்றிகளால் 'விளையாட்டு நகரம்' என்ற புதிய அடையாளத்தைப் பெற்று வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விளையாட்டில் ஆர்வம் காட்டி, சர்வதேச அளவில் காஞ்சிபுரத்தின் பெயரை நிலைநாட்ட வேண்டும் என அவர்கள் ஊக்கப்படுத்தினர்.

ஒலிம்பிக் கனவு: விரைவில் அறிவிப்பு

இந்த விழாவின் முத்தாய்ப்பாக ஒரு முக்கியத் தகவல் பகிரப்பட்டது. கோவா போட்டியில் சிறந்து விளங்கிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள், குளிர்கால பேண்டி ஒலிம்பிக் (Winter Bandy Olympics) போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகப் பயிற்சி நிறுவனம் தெரிவித்தது. இந்தத் தகவல் காஞ்சிபுரம் விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
DMK:
DMK: "தேர்தல் வாக்குறுதி vs தவெக-வின் பாசிஸ்ட் ஆட்சி" - விஜய் ஆட்சியை விமர்சிக்கும் திமுக - என்ன காரணம்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
DMK:
DMK: "தேர்தல் வாக்குறுதி vs தவெக-வின் பாசிஸ்ட் ஆட்சி" - விஜய் ஆட்சியை விமர்சிக்கும் திமுக - என்ன காரணம்?
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
US Iran Tensions: “உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
“உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
"அப்பா செய்த மிகப்பெரிய தியாகம் இதுதான்... செந்திலின் மகன் பேட்டி!"
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
Embed widget