மேலும் அறிய

Tokyo Olympics: ஒலிம்பிக் வில்வித்தை: மூன்றாவது சுற்றில் ஜப்பான் வீரரிடம் அடானு தாஸ் தோல்வி!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் தனிநபர் ரிகர்வ் பிரிவு இந்திய வீரர் அடானு தாஸ் மூன்றாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார் .

tடோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் அடானு தாஸ்  முதல் சுற்றில் சீன தைபே அணியின் செங்கை எதிர்த்து விளையாடினார். அதில் 6-4 என்ற கணக்கில் அடானு தாஸ் வென்றார். இதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் அடானு தாஸ் தென்கொரிய வீரர் ஜின்ஹெக்கை எதிர்த்து விளையாடினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இருவரும் 5-5 என சமமாக இருந்ததால் ஷூட் ஆஃப் முறைக்கு போட்டி சென்றது. அதில் தென்கொரிய வீரரை வீழ்த்தி அடானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தார். 

இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அடானு தாஸ் ஜப்பான் வீரர் ஃபுருகாவாவை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை ஜப்பான் வீரர் ஃபுருகாவா 27-25 என்ற கணக்கில் வென்று 2-0 என முன்னிலை பெற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் இருவரும் தலா 28 புள்ளிகள் எடுத்தனர். இதனால் இருவருக்கும் ஒரு செட் புள்ளிகள் வழங்கப்பட்டன. ஜப்பான் வீரர் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். மூன்றாவது செட்டை 28-27 என்ற கணக்கில் அடானு தாஸ் வென்று 3-3 என சமம் செய்தார். நான்காவது செட்டிலும் இரு வீரர்களும் 28-28 என சமமாக புள்ளிகள் எடுத்தனர். இதனால் 4-4 என இருவரும் சமநிலையில் இருந்தனர். போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டை ஜப்பான் வீரர் 27-26 என வென்றார். அதன்மூலம் போட்டியையும் 6-4 என்ற கணக்கில் வென்றார். இதனால் அடானு தாஸ் வில்வித்தை போட்டியிலிருந்து வெளியேறினார்.

 

முன்னதாக நேற்று நடைபெற்ற மகளிர் தனிநபர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி பெற்று இருந்தார். காலிறுதியில் அவர் தென்கொரிய வீராங்கனை அன் சானை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தென்கொரிய வீராங்கனை 6-0 என்ற கணக்கில் தீபிகா குமாரியை வீழ்த்தினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தீபிகா குமாரியின் பயணமும் முடிவிற்கு வந்தது. 

ஏற்கெனவே ஆடவர் குழுப் பிரிவில் இந்திய அணி 6-0 என்ற கணக்கில் தென்கொரிய அணிக்கு எதிராக தோல்வி அடைந்து வெளியேறியது. அதேபோல் கலப்பு பிரிவில் பிரவீன் ஜாதவ் மற்றும் தீபிகா குமாரி தென்கொரியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தது குறிப்பிடத்தக்கது.  அதேபோல ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த எலிசன் ப்ராடியிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு இந்திய வீரர் தருண்தீப் ராய் இஸ்ரேல் வீரர் இடேவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.  இதனால் டோக்கியோ வில்வித்தை போட்டிகளில் இந்தியாவிற்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. 

மேலும் படிக்க:‛சில்வர்’ சிந்து... ’கோல்ட்’ சிந்துவாக இந்தியா திரும்புவாரா? அரை இறுதியில் என்ன நடக்கும்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget