மேலும் அறிய

Tokyo olympics: ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், பி.வி. சிந்து காலிறுதிச் சுற்றுக்கு தகுதி !

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் நேற்று உடன் முடிவடைந்தன. அதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் குரூப் போட்டியில் பி.வி.சிந்து முதல் போட்டியில் இஸ்ரேல் வீராங்கனையை 21-7,21-10 என்ற கணக்கில்  வென்று அசத்தினார்.  இரண்டாவது குரூப்  போட்டியில் பி.வி.சிந்து ஹாங்காங் வீராங்கனை செங்கை 21-9,21-16 என்ற கணக்கில் வென்றார்.  

இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க் வீராங்கனை மியா பிளிச் ஃபெல்டிட்டை எதிர்த்து விளையாடினார். உலக தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள சிந்து 13ஆவது இடத்திலுள்ள பிளிச்ஃபெல்டிட்டை ஏற்கெனவே 4 முறை வீழ்த்தியிருக்கிறார். இந்தச் சூழலில் இன்றைய போட்டியில் தொடக்கம் முதல் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் கேமில் வேகமாக 11 புள்ளிகளை எடுத்தார். அதன்பின்னர் டென்மார்க் வீராங்கனை சற்று சுதாரித்து கொண்டு ஆட தொடங்கினார். 22 நிமிடங்களில் முதல் கேமை பி.வி.சிந்து 21-15 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது கேமிலும் முதல் கேமை போல் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  இறுதியில் 21-13 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்றார். இதன்மூலம் காலிறுதிச் சுற்றுக்கு சிந்து முன்னேறியுள்ளார். 

ஒலிம்பிக் வரலாற்றில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக இந்திய வீராங்கனை ஒருவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 2008 மற்றும் 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சாய்னா நேவால் ஒலிம்பிக் போட்டிகளில் காலிறுதிக்கு முன்னேறி இருந்தார். 2016 மற்றும் 2020ல் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

முன்னதாக  ஆடவர் இரட்டையர் குரூப் பிரிவில் சத்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டி-சிராக் செட்டி  21-17,21-19 என்ற கணக்கில் பிரிட்டன் ஜோடியை வென்றது. எனினும் இந்த குரூபில் இந்திய வீரர்கள் 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் மூன்றாம் இடத்தை பிடித்தனர். ஒவ்வொரு குரூபிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இதனால் சத்விக் சாய்ராஜ்-சிராக் செட்டி ஜோடி குரூப் போட்டிகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளது. 

அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் முதல் குரூப் போட்டியில்  இஸ்ரேல் வீரர் ஸில்பர்மேன் இடம் 21-17,21-15  என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இரண்டாவது குரூப் போட்டியில் நெதர்லாந்து வீரர் கெலிஜோவிடம் 21-14,21-14 என்ற கணக்கில் சாய் பிரணீத் தோல்வி அடைந்தார். தன்னுடைய இரண்டு குரூப் போட்டியிலும் தோல்வி அடைந்ததால் அவரும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். அவர் குரூப் பிரிவு போட்டியில் தரவரிசையில் தன்னைவிட மிகவும் பின்தங்கி இருந்த வீரர்களிடம் தோல்வி அடைந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார். 

மேலும் படிக்க:  வாழ்நாள் முழுதும் தியேட்டரில் இலவச சினிமா: ஐநாக்ஸ் புதிய அறிவிப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget