மேலும் அறிய

Rohit Sharma: 5 கோப்பைகளை வென்ற ஹிட்மேன்! மும்பைக்காக முதன்முறையாக கால் தடம் பதித்த நாள் இன்று!

Rohit Sharma: ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதுவரை 201 போட்டிகளில் விளையாடி 5 ஆயிரத்து 159 ரன்கள் குவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கடந்த 2011ஆம் ஆண்டும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி மும்பை அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடினார். 

5 முறை கோப்பை வென்ற முதல் கேப்டன்:

ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாவதற்கு முன்னர் இருந்தே, இன்னும் சொல்லப்போனால் இந்திய கிரிகெட் அணியில் அவருக்கான நிலையான இடம் கிடைப்பதற்கு முன்னதாக அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் தனி அடையாளம் கிடைத்தது என்றால், அது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் மூலம்தான். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 2013ஆம் ஆண்டு லீக் போட்டிகளுக்கு மத்தியில் நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து கடந்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு வரை மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு ஐந்து முறை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது மட்டும் இல்லாமல் ஐந்து முறையும் கோப்பையை வென்று அசத்தினார். இதனால் ஐபிஎல் தொடரில் ஐந்து கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார். 


Rohit Sharma: 5 கோப்பைகளை வென்ற ஹிட்மேன்! மும்பைக்காக முதன்முறையாக கால் தடம் பதித்த நாள் இன்று!

ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் ஐந்து கோப்பைகளை வென்றதும், இந்திய கிரிக்கெட் வட்டாரம் மட்டும் இல்லாமல், உலகின் பல்வேறு கிரிக்கெட் வாரியங்களைச் சேர்ந்த பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்களும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்சியை ரோகித் சர்மாவிடம் ஒப்படைப்பதற்கான சரியான தருணம் இதுதான் என கூறினர். ஒருசிலரோ உலகின் மிகப்பெரிய லீக் போட்டியில் ஒரு அணிக்காக ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்தவரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்காமல் வேறு யாரிடம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்சியை கொடுக்கப்போகின்றீர்கள் என கேட்டனர்.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டார். ரோகித் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் விளையாடி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைச் சந்தித்தது. 

முத்திரை பதித்த ரோகித்

இப்படி ஐ.பி.எல். மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென நிரந்தர இடத்தினை ஏற்படுத்திக் கொண்டவர் என்றால் அதில் ரோகித் சர்மாவின் பெயரை கட்டாயம் குறிப்பிடலாம். அப்படியான ரோகித் சர்மா ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு தனது முதல் லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடினார். அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 17.4 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா மும்பை அணிக்காக 4வது வீரராக களமிறங்கினார். மொத்தம் 30 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா மூன்று பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார். இந்நிலையில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கி விளையாடத் தொடங்கி இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 

மும்பை அணிக்காக இதுவரை..

ரோகித் சர்மா மும்பை அணிக்காக மட்டும் இதுவரை 201 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் இவர் ஐந்தாயிரத்து 159 ரன்கள் சேர்த்துள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் மட்டும் மொத்தம் 247 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா மொத்தம் 42 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட மொத்தம் 6 ஆயிரத்து 329 ரன்கள் குவித்துள்ளார். இதில் ரோகித் சர்மா 568 பவுண்டரிகளும் 264 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா இந்த ஆண்டில் மும்பை அணியின் வீரராக விளையாடி வருகின்றார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget