மேலும் அறிய

IPL 2025: மொத்த சீனும் மாறிப்போச்சு.. எலிமினேட்டர் அபாயத்தில் குஜராத்? காப்பாத்துமா லக்னோ?

சென்னை அணியுடன் தோல்வியைத் தழுவியதால் குஜராத் அணியின் குவாலிஃபயர் கனவு கேள்விக்குறியாகியுள்ளது. அவர்கள் எலிமினேட்டர் ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் தொடர் 18வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு முன்பு வரை இருந்த நிலை தற்போது ஐபிஎல் தொடரில் இல்லை. டாப் ஆர்டர்களாக ப்ளே ஆஃப் சுற்றில் உலா வந்த அணிகள் அனைத்தும் தொடரை விட்டு வெளியேறிய அணிகளிடம் தோல்வியைத் தழுவி வருகிறது. 

ப்ளே ஆஃப்க்கு சென்ற அணிகளுக்கு அடி மேல் அடி:

சன்ரைசர்ஸ் அணியிடம் பெங்களூர் அணி தோல்வியைத் தழுவியது. அதற்கு அடுத்து நேற்று நடந்த போட்டியில் தொடரை விட்டு வெளியேறிய டெல்லி அணியிடம் பஞ்சாப் சரண் அடைந்தது.  இந்த நிலையில், இன்று அகமதாபாத்தில் குஜராத் அணியை அதன் சொந்த மைதானத்தில் சென்னை அணி அபாரமாக ஆடி வீழ்த்தியது. 

இந்த போட்டியின் முடிவுகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு எந்த சாதகத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற அணிகளுக்கு மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது புள்ளிகள் மாறியதுடன் ரன்ரேட்டும் சரிந்துள்ளது. 

பரிதாப நிலையில் குஜராத்:

குறிப்பாக, இந்த தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி புள்ளிப்பட்டியலில் டாப்பில் இருந்து வந்த குஜராத் அணி மும்பை - பஞ்சாப், ஆர்சிபி - லக்னோ அணிகள் ஆடும் போட்டி முடிவுகளைப் பொறுத்தே புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருப்பதை உறுதி செய்ய முடியும். 

ஏனென்றால், இந்த போட்டியில் குஜராத் அணி  தோல்வி அடைந்துள்ள நிலையில் மும்பை - பஞ்சாப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அவர்கள் முதல் இரண்டு இடங்களில் ஒரு இடத்தை பிடிப்பார்கள். பஞ்சாப் வெற்றி பெற்றால் 19 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு பஞ்சாப் செல்லும். மும்பை வெற்றி பெற்றாலும் 18 புள்ளிகள் பெற்று குஜராத்தை சமன் செய்யும். ஆனால், குஜராத்தை விட மும்பைக்கு ரன்ரேட் அதிகளவு இருப்பதால் அவர்கள் முதல் இரண்டு இடத்திற்கு முன்னேற வாய்ப்புகள் அதிகம் உண்டு. 

எலிமினேட்டர் அபாயம்:

அதேபோல, ஆர்சிபி - லக்னோ அணியின் முடிவும் மிக மிக முக்கியமான ஒன்றாகும். இந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றாலே 19 புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடங்களுக்குள் ஒரு இடத்தை பிடிக்கும். ஒருவேளை மும்பை அணியும் பஞ்சாப்பிடம் தோல்வி அடைந்து, ஆர்சிபி அணியும் லக்னோவிடம் தோற்றால் குஜராத் முதல் 2 இடத்தில் ஒரு இடத்தைப் பிடிக்கும். ப்ளே ஆஃப் சுற்றுக்கு இந்த அணிகள் தகுதி பெற்றுவிட்டாலும் முதல் இரண்டு இடங்களுக்குள் லீக் போட்டியை முடிக்கவே இந்த நான்கு அணிகளும் ஆர்வம் காட்டும். 

ஏனென்றால், முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் குவாலிஃபயர் போட்டியில் தோற்றாலும் மீண்டும் ஒரு முறை இறுதிப்போட்டிக்குச் செல்ல ஒரு வாய்ப்பு கிட்டும். ஆனால், எலிமினேட்டர் சுற்றில் ஆடும் அணிக்கு தோல்வி அடைந்தால் தொடரை விட்டு வெளியேற வேண்டியது மட்டுமே முடிவாகும். 

யாருக்கு முதல் 2 இடங்கள்?

இந்த தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வந்த குஜராத்தின்  குவாலிஃபயர் கனவை இன்று சென்னை சிதைத்துள்ளது. அவர்களது எஞ்சிய குவாலிஃபயர் கனவு தற்போது லக்னோ கைவசம் உள்ளது. நாளை நடக்கும் மும்பை - பஞ்சாப் போட்டியும், நாளை மறுநாள் நடக்கும் லக்னோ - ஆர்சிபி போட்டியுமே குஜராத்தின் குவாலிஃபயர் கனவிற்கு விடை தரப்போகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
Embed widget