மேலும் அறிய

IPL 2024: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய டாடா நிறுவனம்...எத்தனை கோடிக்கு தெரியுமா?

IPL 2024: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை மீண்டும் டாடா நிறுவனமே கைப்பற்றியது.

ஐபிஎல் சீசன் 17:

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 17வது சீசனுக்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. போட்டிக்கான வீரர்களின் ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி முடிந்தநிலையில் தற்போது அனைத்து ரசிகர்களின் பார்வையும் தேதிகள் மீது உள்ளது. புதிய ஐபிஎல் சீசன் எப்போது, எங்கு நடைபெறும் என்பதை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை. அதே நேரத்தில், மகளிர் பிரிமியர் லீக்கின் இரண்டாவது சீசனுக்கான அட்டவணையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக, ஐபிஎல் புதிய சீசன் மார்ச் மாதம் இறுதியில தொடங்கும் என்றும், மகளிர் பிரீமியர் லீக் பிப்ரவரி இறுதியில் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஐபிஎல் போட்டிகள் தேர்தல் தேதிகளுடன் முரண்படக்கூடாது என்று பிசிசிஐ விரும்புகிறது. இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றபோது, அனைத்து ஐபிஎல் போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெற்றன. இந்த முறையும் வாரியம் அதையே விரும்புவதாக தெரிகிறது.

டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய டாடா நிறுவனம்:

இந்நிலையில்  ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை பிசிசிஐ நடத்தி முடித்துள்ளதுமுன்னதாக, 2018 ஆம் ஆண்டில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் விவோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் சுமார் 2,199 கோடி ரூபாய்க்கு ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில், இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான அரசியல் விவகாரங்களால் ஒப்பந்தத்தை  அதன்பின்னர் பிசிசிஐ தொடரவில்லை. இதனால் கடந்த சீசனில டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆண்டுக்கு ரூ.365 கோடி கொடுக்க டாடா நிறுவனம் முன்வந்தது. இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான டைட்டில் ஸ்பான்சஷிப் டெண்டர் டிசம்சர் கடைசி வாரத்தில் கோரப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் ரூ.5 லட்சம் முன்தொகையுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. இதில் ஆதித்யா பிர்லா குழுமமும் கலந்துகொண்டது. அந்த நிறுவனம்  டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு ரூ.2500 கோடி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் ஐபிஎல் நிர்வாக குழு தரப்பில் டாடா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் டாடா நிறுவனமும் 5 ஆண்டுகளுக்கு ரூ.2500 கோடி ஒப்புக் கொண்டதால், இறுதியாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை மீண்டும் டாடா நிறுவனமே கைப்பற்றியது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கு டாடா நிறுவனத்துடன் ஐபிஎல் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Tamil thalaivas vs Bengaluru bulls: பெங்களூரு புல்ஸை வெல்லுமா தமிழ் தலைவாஸ்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

மேலும் படிக்க: Rinku Singh: இடது கை தோனி.. ரிங்கு சிங்கை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்! விவரம் இதோ!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget