![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
IPL 2022 Retention: ராஜஸ்தானில் சகலகலா சாம்சன்... படபட பட்லர் மற்றும் சிலர்!
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் யார் யார்?
![IPL 2022 Retention: ராஜஸ்தானில் சகலகலா சாம்சன்... படபட பட்லர் மற்றும் சிலர்! IPL 2022 Retention: sanju samson, players retained by rajastan royals for IPL 2022 IPL 2022 Retention: ராஜஸ்தானில் சகலகலா சாம்சன்... படபட பட்லர் மற்றும் சிலர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/30/d726f68ab2f1615900bee0dedbcc0c62_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெற உள்ளன. இதன்காரணமாக அந்த தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தற்போது உள்ள 8 அணிகளும் 4 வீரர்கள் வரை தக்கவைக்கும் வாய்ப்பை ஐபிஎல் நிர்வாகம் அளித்திருந்தது. இதற்கு நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளனர் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், சஞ்சு சாம்சன், பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் கடந்த தொடரில் சிறப்பாக அதிக ரன் அடித்தவர் பட்டியலில் 6 ம் இடம் பிடித்தார்.
நடந்து முடிந்த டி 20 உலகக்கோப்பை தொடரில் பட்லரின் ரன் வேட்டை மறக்க முடியாத ஒன்று.
சஞ்சு சாம்சன் - ரூ 14 கோடி
பட்லர் - ரூ 10 கோடி
ஜெய்ஸ்வால்- ரூ 4 கோடி
Presenting ➡️ The first three Royals of #IPL2022. 👊🏼#RoyalsFamily | @IamSanjuSamson | @josbuttler | @yashasvi_j pic.twitter.com/CrCGqWviwj
— Rajasthan Royals (@rajasthanroyals) November 30, 2021
ராஜஸ்தான் அணியில் இருந்த அதிரடி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தக்கவைக்கப்படவில்லை. அதேபோல் அந்த அணியில் இருந்த பந்துவீச்சாளர்கள் யாரும் தக்கவைக்கப்படவில்லை. ஆகவே வீரர்கள் ஏலத்தில் அந்த அணி பந்துவீச்சாளர்களை குறிவைக்கும் என்று கருதப்படுகிறது. அடுத்த ஐ.பி.எல். தொடரில் லக்னோ, அகமதாபாத் அணிகளும் பங்கேற்க உள்ளதால் பல்வேறு வீரர்களும் புதிய அணிகளுக்கு மாற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படி 8 அணிகளும் தங்களுடைய தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை அளித்த பின்பு புதிய இரண்டு அணிகள் வீரர்களை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு அணிகளும் 2 இந்திய வீரர் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு அணிகளுக்கும் டிசம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தும் முடிந்த பிறகு ஜனவரி மாதத்தில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் இருக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: வெறியோடு களம் காணும் வெங்கடேஷ் ஐயர்.. கொல்கத்தா கொலைவெறி பாய்ஸ் இவங்க தான்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)