CSK Viral pic: சென்னை அணிக்கு இவர்கள் தான் தொடக்க ஆட்டக்காரர்களா? - சிஎஸ்கேவின் வைரல் ட்வீட் !
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யார் யார் களமிறங்க உள்ளனர் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களுடைய பயிற்சியை தொடங்கியுள்ளனர். பல்வேறு அணிகளின் வீரர்களும் தங்களுடைய நாடுகளிலிருந்து மும்பை வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வந்த டூபிளசிஸ் இம்முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பிடித்துள்ளார். ஆகவே சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் உடன் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
Opening the new day with this combo! #Yellove #WhistlePodu 🦁💛 pic.twitter.com/xIUCkTxfsJ
— Chennai Super Kings (@ChennaiIPL) March 20, 2022
ராயுடு, உத்தப்பா, டேவான் கான்வே ஆகிய மூவரில் ஒருவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்கள் என்று கருதப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் டேவான் கானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் உள்ள படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவிட்டுள்ளது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் உடன் டேவான் கான்வே களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. இந்தப் பதிவு சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்தப் பதிவு வேகமாக வைரலாகி வருகிறது.
முன்னதாக சிஎஸ்கே அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இங்கிலாந்து வீரர் மொயின் அலி இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு இந்தியா வருவதற்கு இன்னும் விசா கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவர் முதல் போட்டியில் களமிறங்குவது மிகுந்த சந்தேகமாகியுள்ளது.
இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் சி.இ.ஒ காசி விஸ்வநாதன் ஒரு ஆங்கில தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதன்படி, “மொயின் அலி கடந்த 28ஆம் தேதியே இந்தியா வருவதற்கு விசா பெற விண்ணப்பித்துள்ளார். இருப்பினும் இன்னும் அவருக்கு விசா கிடைக்கவில்லை. அவர் இதன்காரணமாக அவர் இந்தியா வராமல் இருக்கிறார். இந்த விவாகரத்தில் தலையிட பிசிசிஐயிடம் நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். ஆகவே விரைவில் அவருக்கு விசா பிரச்னைகள் அனைத்தும் சரியாகிவிடும் என்று கருதுகிறேன். விசா பிரச்னை சரியான உடன் மொயின் அலி அடுத்த விமானத்தில் இந்தியாவிற்கு வந்துவிடுவார்” எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets