IPL Auction 2022: அடேங்கப்பா! முதல் ஆளாய் ஏலம் போன ஷிகர் தவான்... எந்த அணி, எவ்வளவு தெரியுமா?
இன்று தொடங்கிய மெகா ஏலத்தில் முதல் வீரராக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 8.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் (IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்களும், 1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், இன்று தொடங்கிய மெகா ஏலத்தில் முதல் வீரராக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 8.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
Congratulations to @SDhawan25 #TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/8LepZC7F2R
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
இன்று தொடங்கிய மெகா ஏலத்தின் முதல் செஷனில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்:
தவான்- 8.25 crore - பஞ்சாப் கிங்ஸ்
அஷ்வின்- 5 crore - ராஜஸ்தான் ராயல்ஸ்
கம்மின்ஸ்- 7.25 crore - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ரபாடா - 9.25 crore - பஞ்சாப் கிங்ஸ்
போல்ட் - 8 crore - ராஜஸ்தான் ராயல்ஸ்
ஸ்ரேயாஸ் ஐயர்- 12.25 crore - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஷமி- 6.25 crore - குஜராத் டைட்டன்ஸ்
டு ப்ளெசி - 7 crore - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
டி காக் - 6.75 crore - லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ்
வார்னர் - 6.25 - டெல்லி கேப்பிடல்ஸ்
⚡️ “IPL Auction 2022 | புதிய பயணத்திற்கான களம் - ஐ.பி.எல். ஏலம் தொடங்கியது” by @abpnadu #IPLAuction #IPLAuction2022 #IPLMegaAuction2022 #SuperAuction #IPL2022 #IPL2022Auction https://t.co/U6IM9mA28V
— ABP Nadu (@abpnadu) February 12, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

