மேலும் அறிய

Rishabh Pant | ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா பாசிட்டிவ்..? கால்பந்து போட்டி காணச்சென்றது காரணமா?

ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா பாசிட்டிவ் என தகவல் வெளியாகியுள்ளது

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் தொடருக்காக இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர். கொரோனா காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனே அவர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு சென்றவர்களும் தனிமையில் இருந்து பின்னரே வலைப்பயிற்சியை தொடங்கவுள்ளனர்.  ஜூலை 20 முதல் 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடவுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து சென்ற இரு வீரர்களுக்கு கொரொனா பாசிட்டிவ் என செய்தி வெளியானது. ஏ என் ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், இரு வீரர்களையும் சோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா இல்லை என்றும், மற்றொரு வீரருக்கு கொரோனா பாசிட்டிவ் என்றும் குறிப்பிட்டது. ஆனால் எந்த வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அந்த ஒரு வீரர் ரிஷப் பண்ட் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Rishabh Pant | ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா பாசிட்டிவ்..? கால்பந்து போட்டி காணச்சென்றது காரணமா?

பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக எந்த வீரரையும் பெயரையும் தெரிவிக்கவில்லை என்றாலும், அந்த ஒரு வீரர் ரிஷப் பண்ட் எனவும், அவர் தற்போது தனிமையில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அவருக்கு மீண்டும் வரும் ஞாயிறு சோதனை நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.  சமீபத்தில் இங்கிலாந்து-ஜெர்மனி இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியை காண ரிஷப் பண்ட் சென்றிருந்தார். மாஸ்க் அணியாமல் நண்பர்களுடன் அவர் இருந்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய பிசிசிஐ துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா, ஒரு இந்திய வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் விடுதியில் தங்கவில்லை. எனவே மற்ற வீரர்களுக்கு பிரச்சனை இல்லை. பாதிக்கப்பட்ட வீரரின் பெயரை தற்போது வெளியிடமுடியாது என்றார்


Rishabh Pant | ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா பாசிட்டிவ்..? கால்பந்து போட்டி காணச்சென்றது காரணமா?

கொரோனா காலம் என்பதால் விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருகின்றன. எதிர்வரும் ஒலிம்பிக்கும் கொரோனாவால் பல சிக்கல்களை சந்தித்துள்ளது.

2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,  ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுஹே, “ஆகஸ்டு 22-ம் தேதி வரை, டோக்கியோவில் அவசரநிலை கடைபிடிக்கப்படும்” என அறிவித்தார். கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களுக்கு முன்னரே, வெளிநாட்டு ரசிகர்கள் ஒலிம்பிக் போட்டியை காண தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், உள்ளூர் ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் தொடர் நடைபெறும் என ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

வரலாறு படைக்கப் போகும் புதுச்சேரி! இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ போட்டிக்கு வீரர்கள் தயார்
வரலாறு படைக்கப் போகும் புதுச்சேரி! இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ போட்டிக்கு வீரர்கள் தயார்
கடலில் வீசும் காற்று இனி நாகை மாணவர்களின் கைவசம்! போட்னா கோப்பைக்கு மாஸ் என்ட்ரி!
கடலில் வீசும் காற்று இனி நாகை மாணவர்களின் கைவசம்! போட்னா கோப்பைக்கு மாஸ் என்ட்ரி!
Asia Cup: மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
Annamalai: "லண்டனிலே பணம் இல்லை.. தமிழ்நாட்டிற்கு கொடுக்க அவங்களுக்கு ஏது காசு?" விஜய்க்கு அண்ணாமலை கேள்வி
TVK Vs DMK: முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? Detention copy? ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த தவெக
முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? Detention copy? ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த தவெக
Ukraine Attack Russia: ஆத்தாடி, 1600 ட்ரோன்களா.! ரஷ்யாவை சரமாரியாக போட்டு சாத்திய உக்ரைன்; 2 ரஷ்யர்கள் உயிரிழப்பு
ஆத்தாடி, 1600 ட்ரோன்களா.! ரஷ்யாவை சரமாரியாக போட்டு சாத்திய உக்ரைன்; 2 ரஷ்யர்கள் உயிரிழப்பு
தவெக நட்சத்திர பேச்சாளர் விதிமீறல்: வைகோ, திருமாவளவன் பிரச்சாரச் செலவு யாரோடது? அதிமுக கேள்வி!
தவெக நட்சத்திர பேச்சாளர் விதிமீறல்: வைகோ, திருமாவளவன் பிரச்சாரச் செலவு யாரோடது? அதிமுக கேள்வி!
ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரித்தேனா? .. அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு திமுக பிரமுகர் விளக்கம்!
ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரித்தேனா? .. அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு திமுக பிரமுகர் விளக்கம்!
Tasmac: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் - யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் - யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
Maruti Baleno Vs Tata Altroz: மாருதி புதிய பலேனோவா.? டாடா அல்ட்ராஸா.? ரூ.6 லட்சம் பட்ஜெட்ல சிறந்த கார் எது.? இதோ முழு ஒப்பீடு
மாருதி புதிய பலேனோவா.? டாடா அல்ட்ராஸா.? ரூ.6 லட்சம் பட்ஜெட்ல சிறந்த கார் எது.? இதோ முழு ஒப்பீடு
Chennai Power Cut: சென்னைல திங்கட்கிழமை (21.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? பாருங்க
சென்னைல திங்கட்கிழமை (21.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? பாருங்க
Embed widget