மேலும் அறிய

Ind vs SL first Innings: சீட்டுக் கட்டுப் போல சரிந்த இந்திய வீரர்கள்; இலங்கை அணிக்கு 226 ரன் இலக்கு!

மழை நின்றபின் போட்டி தொடங்கியது. அப்போது ஓவ்வொரு அணிக்கும் தலா 3 ஓவர்கள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய-இலங்கை அணிகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. முக்கியத்துவம் இல்லை என்றாலும் கடைசி ஒருநாள் போட்டியையும் வென்று மொத்தமாக தொடரை கைப்பற்ற மும்முரமாக உள்ளது இந்திய அணி. இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று, ஆறுதல் வெற்றி பெற துடிக்கிறது இலங்கை அணி.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், பேட்டிங் தேர்வு செய்தார். ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ப்ரித்வி ஷா நிலைத்து ஆட, ஷிகர் தவன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஒன் டவுன் களமிறங்கிய சஞ்சு சாம்சன், நிதானமாக ரன் சேர்த்தார்.

ஆனால், 49 ரன்கள் எடுத்திருந்தபோது ப்ரித்வி ஷாவும், 46 ரன்கள் எடுத்திருந்தபோது சஞ்சு சாம்சனும் அவுட்டாகினர். அதனை தொடர்ந்து மழை குறுக்கிட்டதால், போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. 

சிறிது நேரத்திற்கு பிறகு மழை நின்றபின் போட்டி தொடங்கியது. அப்போது ஓவ்வொரு அணிக்கு தலா 3 ஓவர்கள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், 47 ஓவர்கள் இந்திய அணி விளையாடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மழைக்கு பிறகு மீண்டும் போட்டி தொடங்கியபோது இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால், 200 ரன்களை எட்டுமா என்ற நிலை இருந்தது.

சூர்யகுமார் யாதவ் மட்டும் நிதானமாக களத்தில் நின்று ரன் சேர்த்தார். சூர்யகுமாரும் 40 ரன்கள் எடுத்திருந்தபோது தனஜெயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்களை தனஜெயா சொற்ப்ப ரன்களுக்கு அவுட்டாக்கினார். இலங்கை அணியைப் பொருத்தவரை, தனஜெயா மற்றும் ஜெயவிக்ரமா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். ஹர்திக் பாண்டியா மற்றும் அறிமுக வீரர்களாக களமிறங்கிய நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கெளதம் ஆகியோரும் ஏமாற்றம் அளித்தனர். 

இதனால், 43.1 ஓவர்களின் போதே, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 225 ரன்கள் எடுத்தது. எனவே, இலங்கை அணி 47 ஓவர்களில் 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற வேண்டும். அறிமுக இந்திய வீரர்கள் ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கெளதம், சேத்தன் சகாரியா ஆகியோர் பெளலிங்கில் மேஜிக் செய்வார்களா என பொருத்திருந்து பார்ப்போம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Viral Video: கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
Embed widget