மேலும் அறிய

FIFA World Cup 2022 Qatar: ரொனால்டோவை பெஞ்சில் உட்கார வைத்ததால் தோற்றோமா? - போர்ச்சுகல் பயிற்சியாளர் பதில்

இந்த ஆட்டத்தில் ஆகச் சிறந்த வீரரான ரொனால்டோவை பெஞ்சில் அமர வைத்திருந்தார் அந்த அணியின் பயிற்சியாளர் ஃபெர்னான்டோ சான்டோஸ். அதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஃபிபா கால்பந்து போட்டியில் மொராக்காவும், போர்ச்சுகல் அணியும் மோதின.  இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கா அணி வென்றது. இந்த ஆட்டத்தில் ஆகச் சிறந்த வீரரான ரொனால்டோவை பெஞ்சில் அமர வைத்திருந்தார் அந்த அணியின் பயிற்சியாளர் ஃபெர்னான்டோ சான்டோஸ்.

ஒருவேளை ரொனால்டோ ஆட்டத்தின் முழு நேரமும் விளையாடி இருந்தால், அந்த அணி ஜெயித்திருக்க வாய்ப்பிருப்பதாக போர்ச்சுகல் ரசகிர்களில் பெரும்பாலானோர் புலம்பி வருகின்றனர். ஆட்டம் முடிந்ததும் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார் ரொனால்டோ. இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களையுமே மனம் உருகச் செய்தது.

இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பெர்னான்டோ சான்டோஸ் கூறியதாவது:
ரொனால்டோவை பெஞ்சில் அமர வைத்ததற்காக நான் வருந்தவில்லை. அணிக்காக சிந்திக்கும்போது என்னால் மனதிலிருந்து யோசிக்க முடியாது.

காலிறுதிக்கு முந்தைய இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக விளையாடி இதே போர்ச்சுகல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் வென்றது. எனவே, அணியில் மாற்றத்தை புகுத்த எனக்கு விருப்பம் இல்லை. இது கடினமான முடிவுதான் என்றாலும் என்னால் மனதில் இருந்து சிந்திக்க முடியாது. அணிக்காக சிந்திக்கும்போது மூளை சொல்வதை தான் கேட்க முடியும்.

அப்படியென்றால் நான் ரொனால்டோ சிறந்த வீரர் இல்லை என்று கூறவில்லை. அவர் இருந்திருந்தாலும் இதுதான் நிலை என்று கூறுகிறேன். போர்ச்சுகல் அணி சிறப்பானதை செய்தது. ஆனால், மொராக்கோ அணி இன்னும் சிறப்பாக விளையாடினர்.

MAR vs POR, FIFA WC 2022: அரையிறுதியில் நுழைந்த முதல் ஆப்பிரிக்க அணி மொராக்கோ.. கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ

எங்கள் அணி வீரர்கள் ஜாவோ ஃபெலிக்ஸ், புரூனோ பெர்னான்டஸ் ஆகியோர் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டனர். இல்லையென்றால் ஆட்டம் சமன் ஆகியிருக்கும். கால்பந்தை பொருத்தவரை சில நேரங்களில் அதிர்ஷடமும் தேவை. எங்கள் அணிக்கு அது அந்த ஆட்டத்தில் கிடைக்காமல் போனது. அவ்வளவே.

நான் ராஜிநாமா செய்யப் போகிறேனா என்று கேட்கிறீர்கள். அதுகுறித்து இன்னும் நான் எதுவும் முடிவு செய்யவில்லை. அடுத்த வாரம் போர்ச்சுகல் கால்பந்து சங்கத்தின் தலைவரை சந்திக்க உள்ளேன். அப்போது தான் எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்வேன் என்றார் பெர்னான்டோ சான்டோஸ்.

 

தலைப்பு செய்திகள்

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget