மேலும் அறிய

Virat Rohit: ஓரங்கட்டப்படும் ரோகித், விராட்கோலி! பொய் சொல்கிறாரா அகர்கர்? இந்திய அணியில் என்ன நடக்குது?

விராட் கோலியும், ரோகித் சர்மாவும் 2027ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாட ஆர்வம் காட்டவில்லை என்று அகர்கர் சொல்வது பொய்யா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆசிய கோப்பைத் தொடரில் விளையாடி முடித்த இந்திய அணி தற்போது உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் எத்தனையோ நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் இந்திய அணியின் முகமாக ரசிகர்கள் மத்தியில் ஜொலிப்பது விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மட்டுமே ஆகும். 

ஓரங்கட்டப்படும் ரோகித், கோலி:

இந்திய அணிக்காக ஆடிய நிரம்ப அனுபவம் கொண்ட வீரர்களான இவர்கள் இருவரும் டி20 போட்டி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மட்டுமே ஆடி வருகின்றனர். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 


Virat Rohit: ஓரங்கட்டப்படும் ரோகித், விராட்கோலி! பொய் சொல்கிறாரா அகர்கர்? இந்திய அணியில் என்ன நடக்குது?

அதில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒருநாள் போட்டிக்கான கேப்டன்சி ரோகித் சர்மாவிடம் இருந்து பறிக்கப்பட்டு இளம் வீரர் சுப்மன்கில்லிற்கு வழங்கப்பட்டது. ரோகித் சர்மாவும், விராட் கோலியும் உலகக்கோப்பை டி20 வெற்றியுடன் டி20 தொடரில் இருந்து தங்களது விருப்பத்தின் பேரில் ஓய்வு பெற்றனர். 

கம்பீர், அகர்கர் சதியா?

ஆனால், நியூசி, ஆஸ்திரேலியா தொடரில் சொதப்பியதால் அணி நிர்வாகம் அளித்த அழுத்தத்தால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதாக அப்போது தகவல் வெளியானது. இதையடுத்து, இவர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடுவார்கள் என்ற நிலை உருவானது. 2027 உலகக்கோப்பையை வெல்வதே ரோகித்சர்மாவின் கனவாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதிய நிலையில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவரிடம் இருந்து கேப்டன்சியை இந்திய அணி நிர்வாகம் பறித்துள்ளது. 

இதன் பின்னணியில் கம்பீர், அகர்கர் இருப்பதாக கூறப்படுகிறது. திட்டமிட்டே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற வைக்க வேண்டும் என்பதற்காக இந்த சதி அரங்கேறுவதாகவும் ரசிகர்கள் ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர். 

ஆர்வம் காட்டவில்லை:

இந்த நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுத் தலைவர் அகர்கர் அளித்துள்ள பேட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் 2027ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் விளையாட ஆர்வம் காட்டவில்லை.  இப்போதே கில்லை கேப்டனாக நியமித்தால்தான் 2027 உலகக்கோப்பைக்கு  தயாராக முடியும் என்று தெரிவித்துள்ளார். அகர்கரின் இந்த பேட்டி பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. 


Virat Rohit: ஓரங்கட்டப்படும் ரோகித், விராட்கோலி! பொய் சொல்கிறாரா அகர்கர்? இந்திய அணியில் என்ன நடக்குது?

ஏனென்றால், இந்தாண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விராட் கோலியிடம் தங்களது அடுத்த திட்டம் எது என்று கேட்டபோது 2027ம் ஆண்டு உலகக்கோப்பையை மறைமுகமாக குறிப்பிட்டு தான் அதில் ஆட விரும்புவதையே அவர் தெரிவித்தார். ஆனால், அகார்கர் தற்போது விராட் கோலி 2027ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாட ஆர்வம் காட்டவில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார். 

பொய் சொல்கிறாரா அகர்கர்?

இதேபோல, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கும் முன்பு இங்கிலாந்து தொடருக்கு தான் தயாராகி வருவதாகவும், அதிகபட்ச சதங்களை தான் விளாச விரும்புவதாகவும், 2018ம் ஆண்டு ஆடியது போல ஆட விரும்பி அவர் தயாராகி வந்ததாகவும் விராட் கோலி ஆடிய டெல்லி ரஞ்சி அணியின் பயிற்சியாளர் சரண்தீப்சிங் அதிர்ச்சியாக தெரிவித்திருந்தார். 

மேலும், டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை வென்ற கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் கோப்பையையும் தனது தலைமையில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் 2027 உலகக்கோப்பைக்கு தயாராகி வந்ததாக கூறப்படுகிறது.  


Virat Rohit: ஓரங்கட்டப்படும் ரோகித், விராட்கோலி! பொய் சொல்கிறாரா அகர்கர்? இந்திய அணியில் என்ன நடக்குது?

தற்போது அதேபோல அஜித் அகர்கர் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் 2027ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாட ஆர்வம் காட்டவில்லை என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தை வைத்து பார்க்கும்போது விராட் கோலி, ரோகித் சர்மா விவகாரத்தால் அகர்கர் பொய் சொல்கிறாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விராட் கோலியிடம் இருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டபோதும் இதேபோல சம்பவம் அரங்கேறியது. 

ஜடேஜாவுக்கும் கல்தா:

கம்பீர் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதலே அணியில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சீனியர் வீரர்களை குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலியை ஓரங்கட்டுவதையே அவர் தனது வேலையாக வைத்துள்ளதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆஸ்திரேலிய தொடரில் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் கழட்டிவிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL 2026 Qualifier 1: இரண்டாவது கோப்பைக்காக முதலாவதாக செல்லப்போவது யார்? நாளை யுத்தம் செய்யும் ஆர்சிபி - குஜராத்!
IPL 2026 Qualifier 1: இரண்டாவது கோப்பைக்காக முதலாவதாக செல்லப்போவது யார்? நாளை யுத்தம் செய்யும் ஆர்சிபி - குஜராத்!
Virat Kohli: மானம் போகுது..! ஹெட்டின் மனைவி மீது வன்மத்தை கொட்டிய கோலி ரசிகர்கள்- குவியும் கண்டனம்
Virat Kohli: மானம் போகுது..! ஹெட்டின் மனைவி மீது வன்மத்தை கொட்டிய கோலி ரசிகர்கள்- குவியும் கண்டனம்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

3 அதிமுக MLA ராஜினாமா ஆட்டத்தை தொடங்கிய தவெக அதிர்ச்சியில் SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Horse Trading : ‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? எதற்கு அரசியலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது..?
‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? சொல்ல காரணம் இதுதான்!
Junior NTR: அரைச்ச மாவையே அரைக்காதீங்க! கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
Junior NTR: அரைச்ச மாவையே அரைக்காதீங்க! கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
" அப்பா ஆட்சி நடப்பதாக உதயநிதி நினைக்கிறார் " அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பதிலடி
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ விமர்சனத்திற்குள்ளாகும் அமைச்சர்களின் செயல்பாடுகள்..!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
Embed widget