மேலும் அறிய

Suryakumar yadav: சூர்யகுமார் யாதவை புகழ்ந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்.. ஏன் தெரியுமா?

பந்துவீச்சாளர்கள் மனதை கணித்து இந்திய வீரர் சூர்ய குமார் யாதவ் விளையாடுகிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் மாலிக் தெரிவித்தார்.

பந்துவீச்சாளர்கள் மனதை கணித்து இந்திய வீரர் சூர்ய குமார் யாதவ் விளையாடுகிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் மாலிக் தெரிவித்தார்.

சூர்யகுமார் மிகச் சிறந்த வீரர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த சூர்ய குமார் யாதவ் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டியான டி20 கிரிக்கெட்டில் அவர் எப்போதும் தான் ஒரு சிறந்த வீரர் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களும் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கும் சூர்ய குமார் யாதவ் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்து தள்ளியுள்ளார். பாகிஸ்தானில் ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரமும், ஷோயப் அக்தரும் சூர்ய குமார் யாதவ் பேட்டிங் குறித்து விவாதித்தனர்.

அப்போது, பவுன்ஸ் பாலை அவர் சிறப்பாக கையாள்வது குறித்து இருவரும் சிலாகித்து பேசினர். பந்தை பின்புறமாக விரட்டுவதற்கு பயன்படுத்தும் உத்திகள் சிறப்பானவை என்றும் கூறினர். வாசிம் அக்ரம் பேசுகையில், "சூர்யகுமார் யாதவ் வித்தியாசமானவர் ஆவார். சரிதானே? அவரிடம் இருந்து வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சோயப் மாலிக் கூறுகையில், "ஆம். வளர்ந்துவரும் வீரர்கள் விரும்பினால் நிச்சயமாக அவர்களால் கற்றுக்கொள்ள இயலும். அவர்களுக்கு இலக்கு இருக்க வேண்டும். மேலும், அவர்கள் கடின உழைப்பை வழங்க உழைக்க வேண்டும். மிடில் ஆர்டரில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களின் மன நிலையை கணித்து விளையாட வேண்டும்" என்றார் சோயப் மாலிக்.

முன்னதாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. எனினும், அந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 68 ரன்களை விளாசினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். 

அந்த ஆட்டத்தில் சூர்ய குமார் யாதவ் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அவர் 10 பந்துகளில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 25 பந்துகளில் அரை சதம் பதிவு செய்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார் சூர்ய குமார் யாதவ்.

டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா அணி தற்போது வரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு பிரிவில் மழை காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்தாகி உள்ளன. இதன் காரணமாக எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதில் பெரும் ஆர்வம் எழுந்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Top 10 News Headlines: தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Top 10 News Headlines: தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
PM Modi: அள்ளிக் கொடுத்த மோடி - ரூ.4,850 கோடி கடன், 72 கனரக பாதுகாப்பு வாகனங்கள், குறுக்கே வந்த சீனா?
PM Modi: அள்ளிக் கொடுத்த மோடி - ரூ.4,850 கோடி கடன், 72 கனரக பாதுகாப்பு வாகனங்கள், குறுக்கே வந்த சீனா?
Mettur dam : 4வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை ! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Mettur dam : 4வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை ! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Embed widget