மேலும் அறிய

2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

(Source:  ABP CVoter)
×
Top
Bottom

Ravichandran Ashwin: ”நாயகன் மீண்டும் வரார்” - மீண்டும் அணிக்கு திரும்பும் அஸ்வின்!

Ravichandran Ashwin: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் தனிப்பட்ட காரணத்திற்காக சென்னைக்கு வந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து போட்டியின் 2வது நாள் முடிந்த பின்னர், அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் போட்டி நடைபெற்ற ராஜ் கோட்டில் இருந்து சென்னைக்கு திரும்பினார். 

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட்டில் அவர் விளையாட மாட்டார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் 4வது நாளில் இந்திய அணியுடன் இணையவுள்ளார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான வீரர்களில் ஒருவர் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இந்திய கிரிக்கெட் வீரர்களில் தற்போது விவாதிக்கப்படும் வீரர்களில் ஒருவராக இருப்பவர் அஸ்வின். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அஸ்வின்,  டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டினைக் கைப்பற்றினார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில்  இந்த சாதனையை அஸ்வின் படைத்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் கைப்பற்றிய 9வது வீரர் மற்றும் 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் தன் வசப்படுத்தியிருந்தார். 

அஸ்வினுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி பிரதமர் வரை இந்தியாவில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இது மட்டும் இல்லாமல் அஸ்வினுக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். அஸ்வின் இந்த சாதனையை தனது தந்தைக்கு சமர்பிப்பதாக அறிவித்தார். 

அஸ்வினைச் சுற்றி அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமை சேர்க்கும் வகையிலும் நடைபெற்றுக்கொண்டு இருந்த நிலையில், ராஜ்கோட்டில் இருந்த அஸ்வினுக்கு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து அவசர அழைப்பு வந்தாக கூறப்பட்டது. அந்த அழைப்பில், அஸ்வினின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்தது. இதனால் அணி நிர்வாகத்திடம் இந்த தகவலைச் சொன்ன அஸ்வின் உடனே ராஜ்கோட்டில் இருந்து வெளியேறினார். அதாவது போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் அஸ்வின் ராஜ் கோட்டில் இருந்து கிளம்பினார். 

சென்னைக்கு திரும்பிய அஸ்வினுக்கு  துணை நிற்கும் விதமாக பிசிசிஐ துணைச் செயலாளர் ராஜீவ் சுக்லா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “ அஸ்வினின் அம்மா விரைவில் குணமடைய வாழ்த்துகள். ராஜ் கோட்டில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ள அஸ்வின் தனது தயாருடன் இருந்து அவரது தாயாரின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என நினைக்கின்றோம்” எனக் கூறியது மட்டும் இல்லாமல் பிசிசிஐ பக்கத்தை டேக் செய்திருந்தார். 

இந்நிலையில் பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், அஸ்வின் இன்று அதாவது போட்டியின் நான்காவது நாளில் அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளார் என தெரிவித்துள்ளது.  அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது இந்திய அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்" கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம்!
National Award To Teachers 2024: தேசிய நல்லாசிரியர் விருது வேண்டுமா? ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்; தகுதி என்ன?
National Award To Teachers 2024: தேசிய நல்லாசிரியர் விருது வேண்டுமா? ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்; தகுதி என்ன?
TN Weather Update: இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மற்ற இடங்களில் வெப்பநிலை எப்படி?
இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மற்ற இடங்களில் வெப்பநிலை எப்படி?
Garudan Box Office Collection: அதிக வசூல் ஈட்டிய படங்களில் மூன்றாவது இடம் ...எகிறும் கருடன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
Garudan Box Office Collection: அதிக வசூல் ஈட்டிய படங்களில் மூன்றாவது இடம் ...எகிறும் கருடன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Rahul in Kalaingnar Memorial | கலைஞருக்காக வந்த ராகுல்..பூரித்து போன சோனியா!MK Stalin at Kalaignar memorial | கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின்! படையெடுத்து வந்த அமைச்சர்கள்DMK PMK Clash | Kalaignar Birthday | தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி! கலைஞரின் அரசியல் வல்லமை! 101வது பிறந்தநாள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்" கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம்!
National Award To Teachers 2024: தேசிய நல்லாசிரியர் விருது வேண்டுமா? ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்; தகுதி என்ன?
National Award To Teachers 2024: தேசிய நல்லாசிரியர் விருது வேண்டுமா? ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்; தகுதி என்ன?
TN Weather Update: இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மற்ற இடங்களில் வெப்பநிலை எப்படி?
இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மற்ற இடங்களில் வெப்பநிலை எப்படி?
Garudan Box Office Collection: அதிக வசூல் ஈட்டிய படங்களில் மூன்றாவது இடம் ...எகிறும் கருடன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
Garudan Box Office Collection: அதிக வசூல் ஈட்டிய படங்களில் மூன்றாவது இடம் ...எகிறும் கருடன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
வைத்தீஸ்வரன் கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது!
வைத்தீஸ்வரன் கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது!
EPS: முத்துமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம்! பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய எடப்பாடி பழனிசாமி
EPS: முத்துமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம்! பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய எடப்பாடி பழனிசாமி
Sarathkumar: தேர்தலில் மனைவி வெற்றிக்காக  அங்கப்பிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார்
தேர்தலில் மனைவி வெற்றிக்காக அங்கப்பிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார்
Vadakkan Movie: டைட்டிலுக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு.. வடக்கன் படத்தின் பெயரை மாற்றிய படக்குழு!
டைட்டிலுக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு.. வடக்கன் படத்தின் பெயரை மாற்றிய படக்குழு!
Embed widget