மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Rajinikanth Wankhede மீண்டும் வான்கடேவில் ரஜினி...! 2011 வரலாறு திரும்புமா? எகிறும் எதிர்பார்ப்பு..!
இந்தியா நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை அரை இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில் நேரில் பார்ப்பதற்கு மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த்
![Rajinikanth Wankhede மீண்டும் வான்கடேவில் ரஜினி...! 2011 வரலாறு திரும்புமா? எகிறும் எதிர்பார்ப்பு..! Rajinikanth left for Mumbai to witness the World Cup semi-final between India and New Zealand Rajinikanth Wankhede மீண்டும் வான்கடேவில் ரஜினி...! 2011 வரலாறு திரும்புமா? எகிறும் எதிர்பார்ப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/15/06fd97ef9caa7874bf6e029cf256d85c1700019727468113_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரஜினிகாந்த் - அரையிறுதி ( PTI )
இந்தியாவும் நியூசிலாந்து அணியும் உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் மோத உள்ள நிலையில் போட்டியை காண சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த். இந்தியாவும் நியூசிலாந்து அணியும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் மோத உள்ளது.
இந்த போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுக்கும் சம பல வாய்ப்பு இருப்பதால் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இது அமையும். இந்த நிலையில் அந்த போட்டியை நேரில் பார்ப்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மும்பை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். முன்னதாக விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் எழுதிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய ரஜினிகாந்த், கிரிக்கெட் போட்டியை காண செல்ல இருப்பதாக தெரிவித்தார்.
IND vs NZ Semifinal: 2015, 2019ன் இந்திய அணியின் வலி.. குணப்படுத்த முயற்சிக்குமா ரோஹித் படை? திருப்பி அடிப்பாரா கோலி ?
உலகக் கோப்பை 2023ன் முதல் அரையிறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இந்தியாவை நியூசிலாந்து எதிர்கொள்கிறது . லீக் சுற்றின் 9 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. எப்படியோ கடைசி நேரத்தில் உள்ளே வந்த நியூசிலாந்து அணி 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இருப்பினும், ஐசிசி உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியை இலகுவாக எடுத்துக்கொள்ள இந்திய அணி விரும்பாது. அதற்கு காரணம், 2019 உலகக் கோப்பையின் அரையிறுதியில் ஏற்பட்ட தோல்வியே. இதையடுத்து நியூசிலாந்து அணியை பழிவாங்கும் நோக்கில் ரோஹித் சர்மா அணி இன்று அதிரடியாக களமிறங்குகிறது. இது மட்டுமின்றி, 12 ஆண்டுகால வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, இம்முறை எப்படியும் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்று இந்திய அணி முயற்சிக்கும்.
![Rajinikanth Wankhede மீண்டும் வான்கடேவில் ரஜினி...! 2011 வரலாறு திரும்புமா? எகிறும் எதிர்பார்ப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/13/6a61b1051e2db8e4876d0b233cf80ded1699851001091872_original.png)
2015-இல் நடந்த உலகக் கோப்பை லீக் கட்டத்தில் முதலிடத்தில் இந்திய அணி இருந்த போதிலும், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா மோசமான தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த கதை 2019-இல் மீண்டும் தொடர்ந்தது. அரையிறுதியில் இந்த இரண்டு தோல்விகளிலிருந்தும் பாடம் கற்று கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதுதான் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு மிகப்பெரிய அழுத்தமாக இருக்கும். இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். அதேபோல், ஷ்ரேயாஸ் ஐயரும் 400 ரன்களுக்கு மேல், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பல போட்டிகளில் முக்கியமான இன்னிங்ஸ் ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளனர்.
![Rajinikanth Wankhede மீண்டும் வான்கடேவில் ரஜினி...! 2011 வரலாறு திரும்புமா? எகிறும் எதிர்பார்ப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/13/6a61b1051e2db8e4876d0b233cf80ded1699851001091872_original.png)
2015-இல் நடந்த உலகக் கோப்பை லீக் கட்டத்தில் முதலிடத்தில் இந்திய அணி இருந்த போதிலும், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா மோசமான தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த கதை 2019-இல் மீண்டும் தொடர்ந்தது. அரையிறுதியில் இந்த இரண்டு தோல்விகளிலிருந்தும் பாடம் கற்று கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதுதான் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு மிகப்பெரிய அழுத்தமாக இருக்கும். இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். அதேபோல், ஷ்ரேயாஸ் ஐயரும் 400 ரன்களுக்கு மேல், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பல போட்டிகளில் முக்கியமான இன்னிங்ஸ் ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளனர்.
பும்ரா தலைமையில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு இந்த உலகக் கோப்பையில் சிறப்பாகவே உள்ளது. இதுவரை முகமது ஷமி 4 போட்டிகளில் இரண்டு முறை தலா 5 விக்கெட்டுகளையும், ஒரு முறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் சுழலைப் புரிந்துகொண்டு விளையாடுவது மற்ற அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்திய அணி தனது 12 ஆண்டுகால வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்றே எதிர்பார்க்கலாம்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion