மேலும் அறிய

Rohith, Kohli : உலகக்கோப்பைக்கு பின்னான திட்டம்: புதிய கேப்டனை உருவாக்குகிறதா பிசிசிஐ? ரோஹித், கோலி நிலை என்ன?

டி20-யில் ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் அல்லது கே.எல். ராகுல் ஆகியோரில் ஒருவரை கேப்டன் பதவிக்கு தயார் படுத்தி, ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து படிப்படியாக வெளியேற்றலாம்.

உலகக்கோப்பைகள் முடியும்போதெல்லாம் பிசிசிஐ அடுத்த 4 வருடங்களுக்கான திட்டங்களை வகுப்பது வழக்கம். விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், ரோகித் சர்மா தற்போது கேப்டனாக இருந்து வருகிறார். அவருக்கு தற்போது 35 வயதாகும் நிலையில், இன்னும் அதிகமான காலம் விளையாட வாய்ப்பில்லை. அதற்குள் அடுத்தக்கட்ட கேப்டனை தயார் படுத்த பிசிசிஐ எண்ணுகிறது. போட்டிகளும் தொடர்ந்து நடைபெறுவதால் ஓய்வு கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது. தற்போது ரோகித் சர்மா மூன்று வடிவிலான கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக இருப்பதால் அவருக்கு அடிக்கடி ஓய்வு அளிக்க இயலாமல் இருந்து வருகிறது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், ஓய்வு அதிகம் கிடைக்கிறது. அதேபோல ரோகித் சர்மாவுக்கும் அடிக்கடி ஓய்வு கொடுக்க பிசிசிஐ விரும்புவதாக தெரிகிறது. எனவே, ரோகித் சர்மா அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்குப்பிறகு கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை. இனிமேல் பொதுவாக விராட் கோலிக்கு பெரிய தொடரை தவிர்த்து மற்ற டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வலியுறுத்தப்படும் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

Rohith, Kohli : உலகக்கோப்பைக்கு பின்னான திட்டம்: புதிய கேப்டனை உருவாக்குகிறதா பிசிசிஐ? ரோஹித், கோலி நிலை என்ன?

ஹர்திக் - பண்ட்

இது தொடர்பாக வெளியாகியுள்ள ஒரு செய்திக்குறிப்பில், "ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்குப்பிறகு, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரிடம் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் ஒரு விரிவான கலந்துரையாடலை மேற்கொள்வார்கள். ஆனால் அவர்கள் ஏதாவது ஒரு வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட மாட்டார்கள். இருவரும் முக்கியமான வீரர்கள் என்றாலும் இருவருமே 35 வயதை நெருங்கும் பட்சத்தில், தொடர்ந்து பெரிய தொடர்கள், ஐசிசி தொடர்கள் வருவதால் அவர்களுக்கு சுழற்சி முறை மற்றும் ஓய்வுகள் தேவைப்படும், ஆனால், கேப்டனை அடிக்கடி சுழற்சி முறையில் மாற்ற முடியாது. டி20-யில் ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் அல்லது கே.எல். ராகுல் ஆகியோரில் ஒருவரை கேப்டன் பதவிக்கு தயார் படுத்தி, ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து படிப்படியாக வெளியேற்றலாம்.

தொடர்புடைய செய்திகள்: 'நெத்தியில பொட்டு இல்லையா? அப்போ பேச மாட்டேன்..' : பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த அவமதிப்பு.. கொந்தளித்த மக்கள்.. நடந்தது என்ன?

பிசிசிஐ திட்டம் - விராட் கோலி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைக்குப்பின் விராட் கோலியால் தொடர்ந்து டி20 போட்டியில் விளையாட முடியாது. விராட் கோலியை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த கேட்டுக்கொள்ளப்படும். தேர்வாளர்கள் அவரை முக்கியமான மற்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கு மட்டும் தேர்வு செய்வார்கள். அடுத்த வருடத்தில் டி20 உலகக்கோப்பையும் இல்லாத காரணத்தால் அந்த வருடம் டி20க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாது.

Rohith, Kohli : உலகக்கோப்பைக்கு பின்னான திட்டம்: புதிய கேப்டனை உருவாக்குகிறதா பிசிசிஐ? ரோஹித், கோலி நிலை என்ன?

பிசிசிஐ திட்டம் - ரோகித் சர்மா 

ரோகித் சர்மா 2023 உலகக் கோப்பையில் இருந்து ரோகித் சர்மா மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக தொடர வாய்ப்பில்லை. ஆனால், 2024 வரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிக அளவில் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப்பின், கேப்டன் பதவி குறித்து ரோகித் சர்மா உடன் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் ஆலோசனை நடத்தும் நிலையில், காயம் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா 2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை என்பது உறுதி. அதற்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் ஆகியோர் கேப்ட்டனாக உருவாக்கப்பட்டு வருகிறார்கள். மூவரில் ஹர்திக் பாண்ட்யா தேர்வாளர்களை அதிகமாக கவர்ந்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இருவரும் ஐ.பி.எல். தொடரில் சிறந்த கேப்டன் என்பதை பலமுறை நிரூபித்துள்ளனர். இருப்பினும் யார் கேப்டன் என்பது குறித்து 2023 உலகக் கோப்பைக்கு பின் விரிவாக பேசப்படும்.

தலைப்பு செய்திகள்

IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!
அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget