மேலும் அறிய

IND vs SA: 150 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதல்முறை.. ஒரே போட்டியில் குவிந்த சாதனையும், சோதனையும்..!

கேப்டவுனில் நேற்று நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்டின் முதல் நாளில் 23 பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்தனர்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடரின் கடைசி போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த கேப்டவுன் டெஸ்டின் முதல் நாளில் ஒரு விசித்திரமான, மோசமான சாதனை ஒன்றை இந்திய அணி படைத்தது.

அப்படி என்ன மோசமான சாதனை..?

இந்திய அணியின் கடைசி 6 பேட்ஸ்மேன்களால் 1 ரன் கூட எடுக்க முடியவில்லை. அனைவரும் ரன் எதுவும் எடுக்கமுடியாமல் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களால் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, கிட்டத்தட்ட 150 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 6 பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 1 ரன் கூட சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன்மூலம், இந்த போட்டியில் ரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை தென்னாப்பிரிக்கா படைத்தது.

டெஸ்ட் வரலாற்றில் இதற்கு முன் இப்படி நடந்திருக்கிறதா?

சுமார் 58 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வந்தது. இந்த டெஸ்டில் ஒருமுறை நியூசிலாந்தின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 58 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அதன்பிறகு 59 ரன்களுக்குள் அடுத்தடுத்து 9 வது விக்கெட் வரை பேட்ஸ்மேன்கள் பெவிலியன் சென்றனர். இதன் மூலம், இந்த போட்டியில் விளையாடிய 6 பேட்ஸ்மேன்களால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதேசமயம் கடந்த 2012ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் 1 ரன் கூட எடுக்க முடியவில்லை. நியூசிலாந்தின் ஸ்கோர் 2 விக்கெட்டுக்கு 133 ரன்கள், ஆனால் அதன் பிறகு அடுத்தடுத்து 5 விக்கெட்களை இழந்து 133 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை விட்டுகொடுத்தது நியூசிலாந்து அணி.

121 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்: 

கேப்டவுனில் நேற்று நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்டின் முதல் நாளில் 23 பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்தனர். இதற்குமுன்பு, இதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதில், டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிக விக்கெட்டுகள் விழுந்த சாதனை சுமார் 121 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிகபட்சமாக 27 பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர். இந்த டெஸ்ட் 1902ல் இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. அதேபோல், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்டின் முதல் நாளான நேற்று 23 வீரர்கள் ஆட்டமிழந்தனர். கிட்டத்தட்ட 150 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது முறையாக நடந்துள்ளது. 

முதல் நாள் எப்படி அமைந்தது..? 

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள். தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் 36 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

முன்னதாக, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 55 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பதிலுக்கு முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 153 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது. தென்னாப்பிரிக்கா சார்பில் ககிசோ ரபாடா, நந்த்ரே பெர்கர், லுங்கி என்கிடி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். அதே நேரத்தில், இந்திய தரப்பில் முகமது சிராஜ் தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget