மேலும் அறிய

IND vs PAK : கடைசி ஓவர் வரை திரில்..! மோசமான பீல்டிங், பவுலிங்கால் பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி திரில் வெற்றி பெற்று அசத்தியது.

விராட்கோலியின் அபார அரைசதத்தால் இந்திய அணி 181 ரன்களை எட்டிய நிலையில், இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதையடுத்து, களமிறங்கிய பக்கர் ஜமானும் 15 ரன்களில் சாஹல் சுழலில் வீழ்ந்தார். 63 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்காக நான்காவது வீரராக முகமது நவாஸ் களமிறங்கினார்.

களமிறங்கியது முதல் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார் நவாஸ். அவருக்கு மறுமுனையில் தொடக்க வீரர் ரிஸ்வானும் ஒத்துழைப்பு அளிக்க பாகிஸ்தான் ஸ்கோர் மெல்ல மெல்ல ஏறத் தொடங்கியது. குறிப்பாக, பாகிஸ்தானின் முகமது நவாஸ் சுழல், வேகம் என்று யார் வீசினாலும் வெளுத்து வாங்கினார்.



IND vs PAK : கடைசி ஓவர் வரை திரில்..! மோசமான பீல்டிங், பவுலிங்கால் பாகிஸ்தானிடம் தோற்ற  இந்தியா..!

அவரைப் பிரிக்க இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப், சாஹல், பிஷ்னோய், ஹர்திக்கை பயன்படுத்தியும் பலனளிக்கவில்லை. 15 ஓவரில் பாகிஸ்தான் 135 ரன்கள் எடுத்த நிலையில் 16வது ஓவரை புவனேஷ்வர்குமார் வீசினார். அவரது பந்துவீச்சில் டேஞ்சர் பேட்ஸ்மேன் முகமது நவாஸ் அவுட்டானார். அவர் 20 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 42 ரன்கள் விளாசி வெளியேறினார்.

கடைசி 4 ஓவர்களில் பாகிஸ்தான் அணிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட்டது. முகமது ரிஸ்வான் களத்தில் இருந்ததால் இந்திய அணிக்கு நெருக்கடி  இருந்தது. இந்த சூழலில், ஹர்திக் பாண்ட்யா வீசிய 17வது ஓவரில் முகமது ரிஸ்வான் 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.


IND vs PAK : கடைசி ஓவர் வரை திரில்..! மோசமான பீல்டிங், பவுலிங்கால் பாகிஸ்தானிடம் தோற்ற  இந்தியா..!

கடைசி 3 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டதால் மீண்டும் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் கிடைத்த எளிதான கேட்ச்சை அர்ஷ்தீப்சிங் கோட்டைவிட்டார். இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிஷ்னோய் 18வது ஓவரில் மூன்று ஒயிட் வீசினாலும் ஒரு பவுண்டரி கூட அளிக்காமல் கட்டுக்கோப்பாக வீசினார்.

புவனேஷ்வர் வீசிய 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பாகிஸ்தான் விளாசியது. இதனால், கடைசி 6 பந்துகளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. இதில் இந்தியா பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்தியா கடைசி ஓவரில் யார்டுக்கு வெளியே 4 பீல்டர்கள் மட்டுமே வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.


IND vs PAK : கடைசி ஓவர் வரை திரில்..! மோசமான பீல்டிங், பவுலிங்கால் பாகிஸ்தானிடம் தோற்ற  இந்தியா..!

அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் 1 ரன் எடுத்த நிலையில், இரண்டாவது பந்தில் ஆசிப் அலி பவுண்டரி விளாசினார். இதனால், வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மூன்றாவது பந்து டாட் பால் ஆகிய நிலையில், ஆசிப் அலி நான்காவது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகினார். இதனால், கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் வீரர் இப்திகார் அகமது 2 ரன்கள் விளாசியதால் பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது.   

இந்தியாவில் பிஷ்னோய் தவிர அர்ஷ்தீப், புவனேஷ், ஹர்திக், சாஹல் ரன்களை வாரி வழங்கினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.