கவுதம் கம்பீர் உயிருக்கு ஆபத்து! மீண்டும் கொலை மிரட்டல்!
முன்னாள் பாஜக எம்.பி.யும், தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீருக்கு 'ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்' அமைப்பிடமிருந்து கொலை மிரட்டல்

முன்னாள் பாஜக எம்.பி.யும், தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீருக்கு 'ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்' அமைப்பிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை, அவர் டெல்லி காவல்துறையை அணுகி, தனது குடும்பத்தின் பாதுகாப்பைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு முறையான புகார் அளித்ததாக, கம்பீரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கம்பீர் 'ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர்' அமைப்பிலிருந்து மிரட்டல்களைப் பெறுவது இது முதல் முறையல்ல. 2021 ஆம் ஆண்டு, அவர் எம்.பி.யாக இருந்தபோது, 'ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர்' அமைப்பு அவருக்கு குறைந்தது இரண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது.
26 இந்தியர்களின் உயிரைப் பறித்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்த அச்சுறுத்தல் உடனடியாக வந்துள்ளது. இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்த விளையாட்டுப் பிரமுகர்களில் கம்பீரும் ஒருவர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இதை செய்தவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் கம்பீர் தனது புகாரை அளித்தார். தனது புகாரில், தனக்கு இரண்டு மின்னஞ்சல்கள் வந்ததாகவும், இரண்டிலும் "IKillU" என்று எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

