மேலும் அறிய

ரோஹித்துக்கு பிறகு இவர்தான் போல! டெஸ்ட் போட்டிகளிலும் விரைவில் புதிய பொறுப்பு!

இலங்கைக்கு எதிரான தொடரில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்ட சுப்மன்கில்லுக்கு, டெஸ்ட் தொடரிலும் அதே பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்திய டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கம்பீர் வருகைக்கு பிறகு அணியில் மாற்றம்:

கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு இந்திய அணி முதன்முறையாக இலங்கையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று ஆடுகிறது. அணித் தேர்வு எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்த சூழலில், பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அணித்தேர்வு இருந்தது. அதாவது, டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் பாண்ட்யாவிற்கு பதில் சூர்யகுமார் யாதவிற்கு கேப்டன்சி வழங்கப்பட்டது. ஒருநாள் மற்றும் டி20 இரண்டு தொடர்களிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுப்மன்கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்திய அணியின் வளரும் வீரர் சுப்மன்கில்லுக்கு துணை கேப்டன்சி வழங்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் திறமையான வீரராகவும், ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்தாலும் அணியில் அவருக்கு சீனியர் வீரர்களாக கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ், பாண்ட்யா ஆகியோர் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்படாமல் சுப்மன்கில்லுக்கு வழங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன், விமர்சனத்தையும் உண்டாக்கியது.

டெஸ்ட்டிலும் சுப்மன்கில்லுக்கு பொறுப்பு:

இந்த நிலையில், டெஸ்ட் அணியிலும் புதிய மாற்றத்தை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்திய டெஸ்ட் அணிக்கு தற்போது ரோகித் சர்மா கேப்டனாகவும், சீனியர் வீரரான பும்ரா துணை கேப்டனாகவும் உள்ளார். இந்திய அணி இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இதில் ரோகித், விராட் கோலி, ஜடேஜா, அஸ்வின், பும்ரா போன்ற சீனியர் வீரர்கள் அந்த தொடரில் ஆட உள்ளனர். அதற்கு முன்னதாக இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த சூழலில், டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியிலும் புதிய முயற்சியை பி.சி.சி.ஐ. முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனியர்கள் புறக்கணிப்பு:

அதாவது, இந்திய டெஸ்ட் அணியிலும் துணை கேப்டன் பொறுப்பை சுப்மன்கில்லுக்கு வழங்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை துணை கேப்டன் பொறுப்பை வகித்து வந்த பும்ராவிற்கு பதிலாக அவரை நியமிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக திகழும் பும்ரா துணை கேப்டனாக மட்டுமின்றி இந்திய அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

மூன்று வடிவத்திலான போட்டிகளுக்கும் துணை கேப்டனாக சுப்மன்கில்லை நியமிப்பது, இந்திய அணியின் வருங்கால கேப்டனாக அவரை முன்னெடுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் மூன்று வடிவத்திலான போட்டிகளுக்கும் கேப்டனாக அவரை நியமிக்கவே கம்பீரின் ஆலோசனைப்படி பி.சி.சி.ஐ. செயல்பட்டு வருகிறது என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget