மேலும் அறிய

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் கட்டணம் உயர்கிறது

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி தரிசன டிக்கெட் கட்டணத்தை இந்து சமய அறநிலை துறை உயர்த்த முடிவு செய்துள்ளது.

திருச்சி மாநகரில் பிரசித்தி பெற்ற பல கோவில்கள் அமைந்திருந்த போதிலும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில். இந்தக் கோவிலில் ஆண்டின் அனைத்து நாட்களும்   ஏதாவது ஒரு திருவிழா நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இருந்தாலும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பெருமாளை அருகிருந்து சேவித்தால் மறுஜென்மம் கிடையாது என்பது ஐதிகம். வைகுண்ட ஏகாதசியை  திருஅத்யயன உற்சவம் எனவும் அழைப்பர். பூலோகம் முழுவதும் 108 வைணவ திருத்தலங்கள் இருந்த போதிலும்  காவிரித்தாயின் மடியில்  கொள்ளிடம் ஆற்றுத்தீவில் அமைந்திருப்பது ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோயிலில், இங்கு 365 நாட்களுமே  விழாக்களுக்கு பஞ்சமிருக்காது வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை நடைபெறும் பெருமாள் புறப்பாட்டைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் ஸ்ரீரங்கம் வருவது வழக்கம். இந்த புறப்பாட்டு நேரத்தில் பெருமாளை அருகிலிருந்து பார்க்க விரும்புபவர்களுக்கு சிறப்பு கட்டணமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்விழா அடுத்த ஆண்டு 2023 ஜனவரி 2ம் தேதி  நடைபெற உள்ளது. அன்றே பரமபதவாசல் திறக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக நடை முறையில் இருந்த பெருமாள் புறப்பாட்டு நேர தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் கட்டணம் உயர்கிறது

இந்நிலையில்  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் கட்டணத்தை இந்து சமய அறநிலை துறை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கோவில் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது,  கடந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழாவின் போது கிளி மண்டபத்திலிருந்து தரிசனம் செய்ய ஒரு நபருக்கு ரூ. 500, சந்தனு மண்டபத்தில் இருந்து ஊர்வலத்தை தரிசிக்க ரூ.3000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நடப்பு ஆண்டில் சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 500 லிருந்து ரூ.1000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ. 5000 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு பின்னர் இப்போது தரிசன கட்டணம் உயர்த்தப்படுகிறது.  இந்தக் கட்டண உயர்வு தொடர்பாக கருத்து தெரிவிக்க பக்தர்களுக்கு நேற்றைய தினம் வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் யாரும் நேரடியாக வந்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆகவே திட்டமிட்டபடி கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர்" என்றனர்.

மேலும் கோவில் நிர்வாக தரப்பில் கூறுகையில், சலுகை அடிப்படையில் வழங்கப்படும் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பது இதன் மூலம் தடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் தற்போதைய சூழலில் இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 300 டிக்கெட்டுகள் சந்தனு மண்டபத்தில் இருந்தும், 1000 டிக்கெட்டுகள், கிளி மண்டபத்தில் இருந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் கட்டணம் உயர்கிறது

இந்த கட்டண உயர்வு இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. வி.ஐ.பி. தரிசனத்திற்கு அதிக நேரம் ஒதுக்குவதால் சாதாரண பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2019-க்கு பின்னர் கோவிட் கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget